FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 19, 2016

மனதை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளிகள் - மாவட்ட விளையாட்டு போட்டியில் அசத்தல்

திருப்பூர் : திருப்பூரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள், விஜயாபுரம் பிரைட் பள்ளியில் நேற்று நடைபெற்றது.போட்டியை கலெக்டர் ஜெயந்தி, துவக்கி வைத்தார். மாவட்ட மாற் றுத்திறனாளி நல அலுவ லர் ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காது கேளாதோர் (ஆண்கள்) பிரிவில், 200 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி மோகன்குமார் முதலிடம், பிரேம்குமார் இரண்டாமிடம் மற்றும் துவித் மூன்றாமிடம். 400 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி கார்த்தி முதலிடம், நவீன் இரண்டாமிடம், ஹரிஹரன் மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முகமது பைசல் முதலிடம், தினேஷ் இரண்டாமிடம், பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி ராஜேஸ்கண்ணன் முதலிடம், அவிந்த் இரண்டாமிடம், <உடுமலை மதர் தெரசா பள்ளி ஸ்ரீதர் மூன்றாமிடம் பிடித்தனர்.காது கேளாதோர் (பெண்கள்) பிரிவில், 100 மீ., ஓட்டத்தில் முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி சண்முகபிரியா முதலிடம், 200 மீ., ஓட்டத்தில் காதுகேளாதோர் பள்ளி கவுசிகா முதலிடம், தரணி இரண்டாமிடம், அபிராமி மூன்றாமிடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில், சரஸ்வதி முதலிடம், மருதாயி இரண்டாமிடம், பாத்திமா ஜென்சி மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், தரணி முதலிடம், கௌசிகா இரண்டாமிடம், நந்தினி மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், தாராபுரம் சி.எஸ்.ஐ பள்ளி ராதிகா முதலிடம், காவியா இரண்டாமிடம், துர்காதேவி மூன்றாமிடம் பிடித்தார்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் (பெண்கள்) பிரி வில், 50 மீ., ஓட்டத்தில், அன்னாள் சிறப்பு பள்ளி சித்ரா முதலிடம், கலைச்செல்வி இரண்டாமிடம், பாரதி வித்யாஸ்ரம் சவுமியா மூன்றாமிடம் பிடித்தார். 100 மீ., ஓட்டத்தில், அன்னை காஞ்சனா இரண்டாமிடம் பிடித்தனர்.நின்ற நிலையில் தாண்டுதல், போட்டியில் தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி ரேணுகா முதலிடம், அன்னாள் சிறப்பு பள்ளி கலைசெல்வி இரண்டாமிடம் பிடித்தனர்.பார்வைற்றோர் (ஆண்கள்) பிரிவில், நின்ற நிலையில் தாண்டுதலில், வினோத் முதலிடம், நவீன்பிரபு இரண்டாமிடம் பிடித்தனர். பெண்களுக்கான நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியில், தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி அபர்ணா முதலிடம், முனியம்மாள் இரண்டாமிடம் பிடித்தனர்.குழு போட்டியில் பங்கேற்று கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் மோகன் பிரைட் பள்ளி முதல்வர் அனுராதா, அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் பிஸ்கட், பழங்களும், சுப்பையா பள்ளி தண்ணீர் கேன், பிரைட் பள்ளி சார்பில், நோட்டு புத்தகம், பென்சில் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் சார்பில், 300 பேருக்கு மதிய உணவு ஆகியன வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment