FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, October 19, 2016

மனதை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளிகள் - மாவட்ட விளையாட்டு போட்டியில் அசத்தல்

திருப்பூர் : திருப்பூரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள், விஜயாபுரம் பிரைட் பள்ளியில் நேற்று நடைபெற்றது.போட்டியை கலெக்டர் ஜெயந்தி, துவக்கி வைத்தார். மாவட்ட மாற் றுத்திறனாளி நல அலுவ லர் ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காது கேளாதோர் (ஆண்கள்) பிரிவில், 200 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி மோகன்குமார் முதலிடம், பிரேம்குமார் இரண்டாமிடம் மற்றும் துவித் மூன்றாமிடம். 400 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி கார்த்தி முதலிடம், நவீன் இரண்டாமிடம், ஹரிஹரன் மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முகமது பைசல் முதலிடம், தினேஷ் இரண்டாமிடம், பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி ராஜேஸ்கண்ணன் முதலிடம், அவிந்த் இரண்டாமிடம், <உடுமலை மதர் தெரசா பள்ளி ஸ்ரீதர் மூன்றாமிடம் பிடித்தனர்.காது கேளாதோர் (பெண்கள்) பிரிவில், 100 மீ., ஓட்டத்தில் முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி சண்முகபிரியா முதலிடம், 200 மீ., ஓட்டத்தில் காதுகேளாதோர் பள்ளி கவுசிகா முதலிடம், தரணி இரண்டாமிடம், அபிராமி மூன்றாமிடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில், சரஸ்வதி முதலிடம், மருதாயி இரண்டாமிடம், பாத்திமா ஜென்சி மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், தரணி முதலிடம், கௌசிகா இரண்டாமிடம், நந்தினி மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், தாராபுரம் சி.எஸ்.ஐ பள்ளி ராதிகா முதலிடம், காவியா இரண்டாமிடம், துர்காதேவி மூன்றாமிடம் பிடித்தார்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் (பெண்கள்) பிரி வில், 50 மீ., ஓட்டத்தில், அன்னாள் சிறப்பு பள்ளி சித்ரா முதலிடம், கலைச்செல்வி இரண்டாமிடம், பாரதி வித்யாஸ்ரம் சவுமியா மூன்றாமிடம் பிடித்தார். 100 மீ., ஓட்டத்தில், அன்னை காஞ்சனா இரண்டாமிடம் பிடித்தனர்.நின்ற நிலையில் தாண்டுதல், போட்டியில் தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி ரேணுகா முதலிடம், அன்னாள் சிறப்பு பள்ளி கலைசெல்வி இரண்டாமிடம் பிடித்தனர்.பார்வைற்றோர் (ஆண்கள்) பிரிவில், நின்ற நிலையில் தாண்டுதலில், வினோத் முதலிடம், நவீன்பிரபு இரண்டாமிடம் பிடித்தனர். பெண்களுக்கான நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியில், தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி அபர்ணா முதலிடம், முனியம்மாள் இரண்டாமிடம் பிடித்தனர்.குழு போட்டியில் பங்கேற்று கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் மோகன் பிரைட் பள்ளி முதல்வர் அனுராதா, அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் பிஸ்கட், பழங்களும், சுப்பையா பள்ளி தண்ணீர் கேன், பிரைட் பள்ளி சார்பில், நோட்டு புத்தகம், பென்சில் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் சார்பில், 300 பேருக்கு மதிய உணவு ஆகியன வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment