FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 19, 2016

மனதை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளிகள் - மாவட்ட விளையாட்டு போட்டியில் அசத்தல்

திருப்பூர் : திருப்பூரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள், விஜயாபுரம் பிரைட் பள்ளியில் நேற்று நடைபெற்றது.போட்டியை கலெக்டர் ஜெயந்தி, துவக்கி வைத்தார். மாவட்ட மாற் றுத்திறனாளி நல அலுவ லர் ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காது கேளாதோர் (ஆண்கள்) பிரிவில், 200 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி மோகன்குமார் முதலிடம், பிரேம்குமார் இரண்டாமிடம் மற்றும் துவித் மூன்றாமிடம். 400 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி கார்த்தி முதலிடம், நவீன் இரண்டாமிடம், ஹரிஹரன் மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முகமது பைசல் முதலிடம், தினேஷ் இரண்டாமிடம், பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி ராஜேஸ்கண்ணன் முதலிடம், அவிந்த் இரண்டாமிடம், <உடுமலை மதர் தெரசா பள்ளி ஸ்ரீதர் மூன்றாமிடம் பிடித்தனர்.காது கேளாதோர் (பெண்கள்) பிரிவில், 100 மீ., ஓட்டத்தில் முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி சண்முகபிரியா முதலிடம், 200 மீ., ஓட்டத்தில் காதுகேளாதோர் பள்ளி கவுசிகா முதலிடம், தரணி இரண்டாமிடம், அபிராமி மூன்றாமிடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில், சரஸ்வதி முதலிடம், மருதாயி இரண்டாமிடம், பாத்திமா ஜென்சி மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், தரணி முதலிடம், கௌசிகா இரண்டாமிடம், நந்தினி மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், தாராபுரம் சி.எஸ்.ஐ பள்ளி ராதிகா முதலிடம், காவியா இரண்டாமிடம், துர்காதேவி மூன்றாமிடம் பிடித்தார்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் (பெண்கள்) பிரி வில், 50 மீ., ஓட்டத்தில், அன்னாள் சிறப்பு பள்ளி சித்ரா முதலிடம், கலைச்செல்வி இரண்டாமிடம், பாரதி வித்யாஸ்ரம் சவுமியா மூன்றாமிடம் பிடித்தார். 100 மீ., ஓட்டத்தில், அன்னை காஞ்சனா இரண்டாமிடம் பிடித்தனர்.நின்ற நிலையில் தாண்டுதல், போட்டியில் தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி ரேணுகா முதலிடம், அன்னாள் சிறப்பு பள்ளி கலைசெல்வி இரண்டாமிடம் பிடித்தனர்.பார்வைற்றோர் (ஆண்கள்) பிரிவில், நின்ற நிலையில் தாண்டுதலில், வினோத் முதலிடம், நவீன்பிரபு இரண்டாமிடம் பிடித்தனர். பெண்களுக்கான நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியில், தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி அபர்ணா முதலிடம், முனியம்மாள் இரண்டாமிடம் பிடித்தனர்.குழு போட்டியில் பங்கேற்று கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் மோகன் பிரைட் பள்ளி முதல்வர் அனுராதா, அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் பிஸ்கட், பழங்களும், சுப்பையா பள்ளி தண்ணீர் கேன், பிரைட் பள்ளி சார்பில், நோட்டு புத்தகம், பென்சில் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் சார்பில், 300 பேருக்கு மதிய உணவு ஆகியன வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment