FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, July 13, 2019

ஆசிரியர்கள் 100 பேருக்கு சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி


சென்னை: சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* 14 வயதிற்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.2.55 கோடி செலவில் கூடுதலாக தொழிற்பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.

* மனநலம் பாதிக்கப்பட்ட 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும்.

* செவித்திறன் பாதிக்கப்பட்ட 660 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 33 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் கற்பித்தல், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். 

* 266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.

* ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்படும்.

* செவித்திறன் குறையுடையோருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் 100 ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment