FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, July 13, 2019

ஆசிரியர்கள் 100 பேருக்கு சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி


சென்னை: சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* 14 வயதிற்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.2.55 கோடி செலவில் கூடுதலாக தொழிற்பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.

* மனநலம் பாதிக்கப்பட்ட 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும்.

* செவித்திறன் பாதிக்கப்பட்ட 660 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 33 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் கற்பித்தல், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். 

* 266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.

* ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்படும்.

* செவித்திறன் குறையுடையோருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் 100 ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment