FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, July 13, 2019

ஆசிரியர்கள் 100 பேருக்கு சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி


சென்னை: சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* 14 வயதிற்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.2.55 கோடி செலவில் கூடுதலாக தொழிற்பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.

* மனநலம் பாதிக்கப்பட்ட 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும்.

* செவித்திறன் பாதிக்கப்பட்ட 660 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 33 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் கற்பித்தல், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். 

* 266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.

* ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்படும்.

* செவித்திறன் குறையுடையோருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் 100 ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment