FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 29, 2019

காது கேளாத குழந்தைகளுக்கு இலவசமாக அதிநவீன கருவி



சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், காது கேளாத ஏழை குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், நவீன கருவி இலவசமாக பொருத்தப்பட்டது.

இங்கு செயல்படும், பேச்சு திறன் மையத்தில், 5 வயதுக்குட்பட்ட பிறவிலேயே காது கேளாத, செவித்திறன் குறைபாடுடைய 8 குழந்தைகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் எனப்படும் நவீன கருவி, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கருவியானது செவித்திறனை அதிகப்படுத்தக்கூடியது என்றும், குளிக்கும் போதும், தூங்கும் போதும், தனியே எடுத்து வைத்துக்கொள்ளக்கூடியது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment