FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 29, 2019

கூகுளின் 'ஒலி பெருக்கி', இப்போது மார்ஷ்மெல்லோ மற்றும் அதற்கு மேலுள்ளவற்றில்!

29.07.2019
கூகுளின் 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயர் செயலி' (Sound Amplifier app) இப்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ (Marshmallow) மற்றும் அதற்கு மேலான அமைப்பு கொண்டு இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கப்பெரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் பல்வேறு அளவிலான செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இரண்டு செயலிகளை முன்னதாக அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயர் செயலி'. பகுதி செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த செயலி ஒலியின் அளவையும் மேம்படுத்தி மற்றும் அதை தெளிவுபடுத்தி அளிக்கும்.

துவக்கத்தில் ஆண்ட்ராய்ட் 9.0 பை (Android 9.0 Pie) அமைப்பு கொண்டு இயங்கும் சாதனங்களுக்கு மட்டுமே இந்த செயலி பயன்பாட்டிற்கு கிடைத்தது. பழைய அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை கொண்ட அதிகமான மக்கள் இதைப் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதால், இப்போது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ வரையிலான பழைய அமைப்புகளை கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கும் செய்யும் வண்ணம் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுளின் ஒரு பதிவின்படி, 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்' இப்போது ஆடியோ காட்சிப்படுத்தல் அம்சத்துடன் புதிய தோற்றத்தையும் உணர்வையும் கொண்டுள்ளது. தொடங்குவதற்கு முன், உங்கள் ஹெட்ஃபோன்களை பயன்படுத்தி, இந்த 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்' செயலியை செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு ஒலியின் அளவையும் மேம்படுத்துதல் மற்றும் அதை தெளிவுபடுத்துதல் என அனைத்திற்கும் உதவும்.

இப்போது 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்' அதன் பணியைச் செய்கிறது என்பதை உறுதிப்படுத்த, கூகுள் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆடியோ காட்சிப்படுத்தல் அம்சத்தைச் சேர்த்துள்ளோம், இது ஒரு ஒலியில் நீங்கள் செய்யும் மாற்றங்களைக் நேரடியாக காண உதவும்.

முன்பு இருந்ததை போல, இந்த 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயரை செயல்படுத்த நீங்கள் தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை.

மேலும், இந்த 'சவுண்ட் ஆம்ப்ளிஃபயர்' கூகிள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment