FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, July 30, 2019

சென்னையில் மாயமான காதுகேட்காத வாய்பேச முடியாத மகனை மீட்டு தர வேண்டும்; கலெக்டரிடம் பெற்றோர் மனு


30.07.2019 திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வெள்ளகோவிலை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரில் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் அருண் (வயது 19), காதுகேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தடகள வீரரான இவர் திருப்பூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்–2 வகுப்பு வரை படித்து முடித்தான்.

இதில் தேர்ச்சியடைந்த உடன் மேலும் படிக்க விரும்பினான். இதனால் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.–ல் விடுதியில் தங்கியிருந்து படிக்க ஏற்பாடு செய்து, அங்கு எனது மகனை சேர்த்தோம். இந்நிலையில் அருணுக்கு உடல்நிலை சரியில்லை, அழைத்து செல்ல வருமாறு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பேரில் சென்னைக்கு சென்றோம். அப்போது ஊருக்கு செல்வதாக அருண் கூறிக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தோம். ஆனால் என் மகன் இங்கு வரவில்லை. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 6 மாதமாகியும் இதுவரை சென்னையில் மாயமான என் மகனை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது மகனை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment