FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, July 30, 2019

சென்னையில் மாயமான காதுகேட்காத வாய்பேச முடியாத மகனை மீட்டு தர வேண்டும்; கலெக்டரிடம் பெற்றோர் மனு


30.07.2019 திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வெள்ளகோவிலை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரில் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் அருண் (வயது 19), காதுகேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தடகள வீரரான இவர் திருப்பூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்–2 வகுப்பு வரை படித்து முடித்தான்.

இதில் தேர்ச்சியடைந்த உடன் மேலும் படிக்க விரும்பினான். இதனால் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.–ல் விடுதியில் தங்கியிருந்து படிக்க ஏற்பாடு செய்து, அங்கு எனது மகனை சேர்த்தோம். இந்நிலையில் அருணுக்கு உடல்நிலை சரியில்லை, அழைத்து செல்ல வருமாறு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பேரில் சென்னைக்கு சென்றோம். அப்போது ஊருக்கு செல்வதாக அருண் கூறிக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தோம். ஆனால் என் மகன் இங்கு வரவில்லை. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 6 மாதமாகியும் இதுவரை சென்னையில் மாயமான என் மகனை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது மகனை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment