FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, July 30, 2019

சென்னையில் மாயமான காதுகேட்காத வாய்பேச முடியாத மகனை மீட்டு தர வேண்டும்; கலெக்டரிடம் பெற்றோர் மனு


30.07.2019 திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வெள்ளகோவிலை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரில் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் அருண் (வயது 19), காதுகேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தடகள வீரரான இவர் திருப்பூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்–2 வகுப்பு வரை படித்து முடித்தான்.

இதில் தேர்ச்சியடைந்த உடன் மேலும் படிக்க விரும்பினான். இதனால் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.–ல் விடுதியில் தங்கியிருந்து படிக்க ஏற்பாடு செய்து, அங்கு எனது மகனை சேர்த்தோம். இந்நிலையில் அருணுக்கு உடல்நிலை சரியில்லை, அழைத்து செல்ல வருமாறு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பேரில் சென்னைக்கு சென்றோம். அப்போது ஊருக்கு செல்வதாக அருண் கூறிக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தோம். ஆனால் என் மகன் இங்கு வரவில்லை. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 6 மாதமாகியும் இதுவரை சென்னையில் மாயமான என் மகனை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது மகனை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment