FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, July 30, 2019

சென்னையில் மாயமான காதுகேட்காத வாய்பேச முடியாத மகனை மீட்டு தர வேண்டும்; கலெக்டரிடம் பெற்றோர் மனு


30.07.2019 திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வெள்ளகோவிலை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரில் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் அருண் (வயது 19), காதுகேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தடகள வீரரான இவர் திருப்பூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்–2 வகுப்பு வரை படித்து முடித்தான்.

இதில் தேர்ச்சியடைந்த உடன் மேலும் படிக்க விரும்பினான். இதனால் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.–ல் விடுதியில் தங்கியிருந்து படிக்க ஏற்பாடு செய்து, அங்கு எனது மகனை சேர்த்தோம். இந்நிலையில் அருணுக்கு உடல்நிலை சரியில்லை, அழைத்து செல்ல வருமாறு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பேரில் சென்னைக்கு சென்றோம். அப்போது ஊருக்கு செல்வதாக அருண் கூறிக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தோம். ஆனால் என் மகன் இங்கு வரவில்லை. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 6 மாதமாகியும் இதுவரை சென்னையில் மாயமான என் மகனை கண்டுபிடித்து தரவில்லை. எனவே எனது மகனை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment