FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, July 23, 2019

உலக சாம்பியன் பட்டம்... அரசுப் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை!




22.07.2019
அவருக்குக் காது கேட்காது; பேசவும் முடியாது. ஆனால், அவரைப் பற்றி இன்று உலகமே பேசுகிறது; அவரைப் பற்றியே பேச்சே விளையாட்டு உலகில் நிறைந்திருக்கிறது. ஆனபோதும் பெருமையை மனதில் மட்டுமே தாங்கி, கனிவோடு எல்லோரையும் பார்க்கிறார். வெற்றியடைந்து இந்திய நாட்டின் தேசியக் கொடியை உயர்த்தியவாறே சிரிக்கையில், அவரின் தந்தை கண்ணீர் வழிய அக்காட்சியைக் காண்கிறார். அந்த வெற்றியை, அவர் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், உடன்படிக்கும் மாணவர்கள் தங்கள் வெற்றியாகக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஜெர்லின் அனிகாதான் அவர்.

ஜெர்லின் அனிகா, மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது தைவான் நாட்டில் நடந்த 'சர்வதேச காதுகேளாதோர் யூத் பேட்மின்டன்' போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபின்ஜா ரோசெண்டலை (Finja Rosendahl) இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். முதல்நிலை வீராங்கனையான ஃபின்ஜா ரேசெண்டாலை 21-12, 21-13 செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியனானார் ஜெர்லின் அனிகா. இதுமட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இவர். வெற்றிக்கு எதுவுமே தடையில்லை என்று உணர்த்திய ஜெர்லின் அனிகாவைப் பற்றி, அவரின் அப்பா ஜெயரட்சகனிடம் கேட்டோம்.

"ஜெர்லினுக்கு பிறந்ததிலிருந்தே பேசவோ கேட்கவோ முடியாது. ஆனா, எல்லாத்தையுமே கூர்ந்து கவனிப்பா. நண்பர்கள் சில பேர் பேட்மின்டன் விளையாடுவாங்க. அவங்கள பார்க்கப் போகும்போது ஜெர்லினை அழைச்சிட்டுப் போவேன். அவங்க விளையாடறதைப் பார்த்து, இவளும் விளையாட ஆசைப்பட்டா. எட்டு வயசுல கோச் சரவணன் சார்கிட்ட சேர்த்துவிட்டேன். (இப்ப வரைக்கும் அவர்தான் அவளுக்கு கோச்) ஒரு வருஷம் முடியிறதுக்குள்ளேயே, 'ரொம்ப நல்லா விளையாடுறா... பெரிய போட்டிகள்ல நிச்சயம் விளையாடி ஜெயிப்பா'னு கோச் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்துட்டு இருக்கு.

ஜெர்லினை அஞ்சாம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியிலேயும், எட்டாம் வகுப்பு வரைக்கும் கான்வெட்ன்ட்டிலும் படிக்க வெச்சேன். அதுக்குப் பிறகு, மதுரை மாநகராட்சி அவ்வை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தோம். அந்தப் பள்ளி ஜெர்லினுக்கு ரொம்பவே உதவியா இருக்கு. காலையில அஞ்சு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் பிராக்ட்டிஸ் செய்வா. அப்புறம், மதியம் ஒரு மணி வரைக்கும் ஸ்கூல். பிறகு வீட்டுக்கு வந்து, மறுபடியும் மூணு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் பிராக்டிஸ்தான். இப்படியேதான் நாலைஞ்சு வருஷமா போகுது. ஒருநாள் கூட பிராக்டிஸூக்குப் போகாம இருக்க மாட்டா.

எந்தச் சத்தத்தையும் அனிகாவால கேட்க முடியாது. அதை அவளுக்கு ப்ளஸா மாத்திக்கிட்டா! எப்படின்னா, பிராக்டிஸ் பண்ணும்போது வேறெதிலும் கவனம் சிதறாம முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும்னு சொல்லுவா. போட்டி நடக்கும்போதுகூட, எப்படி ஜெயிப்பது என்பதைத் தவிர வேறெதிலும் கவனம் போகாது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள்ல வெற்றிகளைக் குவிக்க ஆரம்பிச்சதும், சர்வதேச போட்டிகளேயும் நிச்சயம் வெற்றி பெறும் நாளுக்காகக் காத்திருந்தோம். 2017-ஆம் ஆண்டு, துருக்கியில் நடைபெற்ற காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரில் விளையாடி, பேட்மின்டனில் ஐந்தாம் இடத்தைப் பிடிச்சா ஜெர்லின். போன வருஷம், ஆசிய பசிபிக் சர்வதேச பேட் மின்டன் போட்டியில், விளையாடிய ஜெர்லின் அனிகா இரண்டு வெள்ளியும் ஒரு வெண்கலப் பதக்கமும் வாங்கினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

மாற்றுத்திறனாளிக்கான போட்டிகள்னா ஈஸியா ஜெயிக்கிற மாதிரி இருக்கும்னு பல பேர் நினைக்கிறாங்க. வழக்கமாக பொதுப் பிரிவில் பேட்மின்டனில் எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயிப்பாங்களோ, அதைவிட, அதிக முயற்சி எடுத்தாத்தான் மாற்றுத்திறனாளி போட்டிகள்ல வெல்ல முடியும். தைபேயில நடந்த போட்டிக்கு, நானும் கோச் சரவணனும் ஜெர்லினோடு போயிருந்தோம். நாங்க எதிர்பார்த்தது போலவே ஜெர்லின் சாம்பியன் பட்டம் வாங்கிட்டா. ஒரு வரியில் இதைச் சொல்லிட்டாலும், போட்டி நடந்த அந்த நேரத்தை என்னால மறக்கவே முடியாது. டபுள்ஸ்ல, மிக்ஸ்டு டபுள்ஸ்லேயும் வெள்ளிப் பதக்கம் வாங்கினப்ப, எங்க சந்தோஷமும் டபுளாயிடுச்சு.

ஜெர்லினுக்கு தான் எவ்வளோ பெரிய வெற்றி அடைஞ்சிருக்கோம்னு தெரியல. விளக்கிச் சொன்னப்ப கூட, 'ஓ! அப்படியா!'னு சாதாரணமாகத்தான் ரியாக்ட் பண்ணினா. இந்தக் குணம் அவளோட சின்ன வயசுலேருந்தே இருக்கு. அதனாலதான் விளையாடுற போட்டியை மட்டும்தான் மனசுல நினைப்பா. இதுக்கு முன்னாடி ஜெயிச்சது, தோற்றது பத்தி நினைக்கிறது இல்ல.

இந்தப் போட்டிக்கு விளையாட ஜெர்லினுக்கான செலவுகள அரசாங்கம்தான் செஞ்சுது. ஆனா, கூட போன எனக்கும் கோச் சரவணனுக்குமான செலவுகள எங்க நண்பர்கள் மூலமாகவும், கடன் வாங்கிட்டுத்தான் போனோம். ஏன்னா, ஜெர்லின் விளையாடறப்ப கோச் சரவணன் கூட இருந்தா, அவளுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கும்னு நினைச்சேன். நான் சின்னச் சின்ன ஜாப் வொர்க் பண்ணிக்கொடுத்துட்டு இருக்கேன். பெரிய அளவுக்கு வருமானம் கிடையாது.

தமிழக முதல்வர், சட்டசபையில மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் போட்டிகள்ல ஜெயிச்சா, ஊக்கத்தொகை கொடுப்பதாக அறிவிச்சிருக்காங்க. அது ஜெர்லினுக்குக் கிடைச்சா பெரிய அளவு உதவியா இருக்கும். எதிர்காலத்துல அரசு வேலை கொடுக்கிறதா சொன்னால், அவ வாழ்க்கையைப் பத்தி எந்தப் பயமும் இல்லாம இருப்பேன்.அப்பா ஜெயரட்சகன்

ஜெர்லின் இன்னும் நிறைய போட்டிகள்ல விளையாட தயாராயிட்டு இருக்கா. அடுத்த ஒலிம்பிக்ல கலந்துகிட்டு, பதக்கம் ஜெயிச்சு, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்ல பெயர் வாங்கித்தருவான்னு உறுதியா நம்பறேன்" என்றவர் குரலில் அவ்வளவு நம்பிக்கை. அவரின் எண்ணம் நிறைவேறட்டும்.

No comments:

Post a Comment