FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, July 19, 2019

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி புதைத்து வைத்த செல்லாத ரூபாய் நோட்டுகள்

18.07.2019
விக்கிரவாண்டி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாத மாற்றுத் திறனாளி சேமித்து வைத்த, பழைய ரூபாய் நோட்டுகள், அவரது இறுதிச் சடங்கிற்கு பயன்படாமல் போனது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, ராதாபுரம் சாம்பசிவம் ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 52; காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவரது மனைவி அஞ்சாலாட்சி, 48.இவர்களுக்கு, 19 - 16 வயதில், இரு மகள்கள், 10 வயதில் மகன் உள்ளனர். ராஜாங்கத்தின், 78 வயது தாயும், உடன் வசித்து வந்தார். ராஜாங்கத்தின் தாயும், இரண்டாவது மகளும், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள்.அரசு வழங்கிய மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் கிடைத்த பணத்தை, ராஜாங்கம், மனைவிக்கு கூட தெரியாமல், சேமித்து வந்துள்ளார்.தனக்குள்ள குறைபாட்டால், வெளியுலக நடப்பு தெரியாமல் இருந்து வந்த ராஜாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, படுத்த படுக்கையாய் இருந்தார். மத்திய அரசு அறிவித்த, பண மதிப்பிழப்பு குறித்தும், தெரியாமல் இருந்துள்ளார்.தன் உடல்நிலை மோசமடைவதை உணர்ந்த ராஜாங்கம், சேமித்த பணத்தை, வீட்டின் அருகில் பூமியில் புதைத்து வைத்துள்ள இடத்தை, மனைவியிடம் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.புதைத்து வைத்த பணத்தை எடுத்து பார்த்த மனைவி அதிர்ந்து போனார். அப்பணம் முழுவதும் பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 ரூபாயில், 41ம்; 1,000 ரூபாயில், ஒன்பது என, மொத்தம், 29 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது.அன்று இரவு, 7:00 மணியளவில் ராஜாங்கம் இறந்தார். ஆதரவுக்கரம் நீட்ட யாருமின்றி, கணவர் சேர்த்து வைத்த பணத்தால், ஒன்றும் செய்ய முடியாத நிலையில், அஞ்சாலாட்சி தவித்துள்ளார்.இதையறிந்த ஊராட்சி செயலர் புத்தன், ஈமச் சடங்கு நிதியாக, 2,000 ரூபாய் வழங்கினார். அக்கம் பக்கத்தினர் பணம் கொடுத்து உதவியதை தொடர்ந்து, ராஜாங்கத்தின் இறுதிச் சடங்கு நடந்தது.

No comments:

Post a Comment