FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, July 19, 2019

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி புதைத்து வைத்த செல்லாத ரூபாய் நோட்டுகள்

18.07.2019
விக்கிரவாண்டி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாத மாற்றுத் திறனாளி சேமித்து வைத்த, பழைய ரூபாய் நோட்டுகள், அவரது இறுதிச் சடங்கிற்கு பயன்படாமல் போனது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, ராதாபுரம் சாம்பசிவம் ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 52; காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவரது மனைவி அஞ்சாலாட்சி, 48.இவர்களுக்கு, 19 - 16 வயதில், இரு மகள்கள், 10 வயதில் மகன் உள்ளனர். ராஜாங்கத்தின், 78 வயது தாயும், உடன் வசித்து வந்தார். ராஜாங்கத்தின் தாயும், இரண்டாவது மகளும், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள்.அரசு வழங்கிய மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் கிடைத்த பணத்தை, ராஜாங்கம், மனைவிக்கு கூட தெரியாமல், சேமித்து வந்துள்ளார்.தனக்குள்ள குறைபாட்டால், வெளியுலக நடப்பு தெரியாமல் இருந்து வந்த ராஜாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, படுத்த படுக்கையாய் இருந்தார். மத்திய அரசு அறிவித்த, பண மதிப்பிழப்பு குறித்தும், தெரியாமல் இருந்துள்ளார்.தன் உடல்நிலை மோசமடைவதை உணர்ந்த ராஜாங்கம், சேமித்த பணத்தை, வீட்டின் அருகில் பூமியில் புதைத்து வைத்துள்ள இடத்தை, மனைவியிடம் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.புதைத்து வைத்த பணத்தை எடுத்து பார்த்த மனைவி அதிர்ந்து போனார். அப்பணம் முழுவதும் பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 ரூபாயில், 41ம்; 1,000 ரூபாயில், ஒன்பது என, மொத்தம், 29 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது.அன்று இரவு, 7:00 மணியளவில் ராஜாங்கம் இறந்தார். ஆதரவுக்கரம் நீட்ட யாருமின்றி, கணவர் சேர்த்து வைத்த பணத்தால், ஒன்றும் செய்ய முடியாத நிலையில், அஞ்சாலாட்சி தவித்துள்ளார்.இதையறிந்த ஊராட்சி செயலர் புத்தன், ஈமச் சடங்கு நிதியாக, 2,000 ரூபாய் வழங்கினார். அக்கம் பக்கத்தினர் பணம் கொடுத்து உதவியதை தொடர்ந்து, ராஜாங்கத்தின் இறுதிச் சடங்கு நடந்தது.

No comments:

Post a Comment