FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 29, 2019

உலகின் 'காது கேளாத அழகி’...! முதன்முறையாக பட்டம் வென்ற இந்தியப் பெண்


திறமை இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு இதைவிட சிறந்த உதராணம் வேறு என்ன இருக்க முடியும்..? அழகு என்ற ஒற்றைத் திறமையைக் கொண்டு தன்னிடம் இருக்கும் குறையை முறியடித்திருக்கிறார் 21 வயது விதிஷா பாலியன் (Vidisha Baliyan).

என்னுடய வெற்றிக் கைத்தட்டல்கள் எனக்கு கேட்கவில்லை என்றாலும்.. என்னுடைய சாதனையை உலகமே கேட்கச் செய்துவிட்டேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரியாக வெற்றி கண்டிருக்கிறார் விதிஷா. அதுவும் இந்தியாவில் முதன்முறையாக இந்த பட்டத்தைப் பெறும் முதல் பெண் என்ற வரலாற்று தடத்திலும் பெயர் பதித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முசாஃபர் நகரைச் சேர்ந்த விதிஷா குழந்தைப் பருவத்திலிருந்தே காது கேட்காத குறைபாடோடு வளர்ந்துள்ளார். வலது காது 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்துள்ளது. இடது புறம் முற்றிலுமாக காது கேட்காது.

இந்நிகழ்ச்சி சவுத் ஆப்ரிக்காவில் போம்பெலா (Mbombela) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த காது கேளாத அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். இறுதியாக 11 பேர் கடைசி சுற்றுக்குத் தேர்வானதில் இந்தியப் பெண்ணான விதிஷா ’உலகின் காது கேளாத அழகி 2019’ ( Miss Deaf World 2019) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கு அழகால் மட்டும் வெளிச்சம் கிடைக்கவில்லை. டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்கிறார். உலக அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆக.. விதிஷாவிற்கு இந்த வெற்றி புதிதல்ல என்றே சொல்லலாம். அதேபோல் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம்தான் விதிஷா இந்தியாவின் காது கேளாத அழகி என்ற பட்டம் பெற்றிருந்தார். பட்டத்தை தனதாக்கிய விதிஷா உரையாற்றியபோது “ இந்த நொடி..என்னுடைய கண்ணீரைத் தவிற வேறெந்த வார்த்தைகளும் சிறப்பானதாக இருக்க முடியாது. என்னுடைய கடின உழைப்பு, வலி, காலையில் சீக்கிரம் எழுவது, கடுமையான பயிற்சி இவை எதுவும் வீண் போகவில்லை. எல்லாவற்றிற்கும் இன்று வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் இந்தியாவின் முதல் பெண் என்கிற பெருமை மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்குகிறது. கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்” என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment