FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 29, 2019

உலகின் 'காது கேளாத அழகி’...! முதன்முறையாக பட்டம் வென்ற இந்தியப் பெண்


திறமை இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு இதைவிட சிறந்த உதராணம் வேறு என்ன இருக்க முடியும்..? அழகு என்ற ஒற்றைத் திறமையைக் கொண்டு தன்னிடம் இருக்கும் குறையை முறியடித்திருக்கிறார் 21 வயது விதிஷா பாலியன் (Vidisha Baliyan).

என்னுடய வெற்றிக் கைத்தட்டல்கள் எனக்கு கேட்கவில்லை என்றாலும்.. என்னுடைய சாதனையை உலகமே கேட்கச் செய்துவிட்டேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரியாக வெற்றி கண்டிருக்கிறார் விதிஷா. அதுவும் இந்தியாவில் முதன்முறையாக இந்த பட்டத்தைப் பெறும் முதல் பெண் என்ற வரலாற்று தடத்திலும் பெயர் பதித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முசாஃபர் நகரைச் சேர்ந்த விதிஷா குழந்தைப் பருவத்திலிருந்தே காது கேட்காத குறைபாடோடு வளர்ந்துள்ளார். வலது காது 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்துள்ளது. இடது புறம் முற்றிலுமாக காது கேட்காது.

இந்நிகழ்ச்சி சவுத் ஆப்ரிக்காவில் போம்பெலா (Mbombela) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த காது கேளாத அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். இறுதியாக 11 பேர் கடைசி சுற்றுக்குத் தேர்வானதில் இந்தியப் பெண்ணான விதிஷா ’உலகின் காது கேளாத அழகி 2019’ ( Miss Deaf World 2019) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கு அழகால் மட்டும் வெளிச்சம் கிடைக்கவில்லை. டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்கிறார். உலக அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆக.. விதிஷாவிற்கு இந்த வெற்றி புதிதல்ல என்றே சொல்லலாம். அதேபோல் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம்தான் விதிஷா இந்தியாவின் காது கேளாத அழகி என்ற பட்டம் பெற்றிருந்தார். பட்டத்தை தனதாக்கிய விதிஷா உரையாற்றியபோது “ இந்த நொடி..என்னுடைய கண்ணீரைத் தவிற வேறெந்த வார்த்தைகளும் சிறப்பானதாக இருக்க முடியாது. என்னுடைய கடின உழைப்பு, வலி, காலையில் சீக்கிரம் எழுவது, கடுமையான பயிற்சி இவை எதுவும் வீண் போகவில்லை. எல்லாவற்றிற்கும் இன்று வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் இந்தியாவின் முதல் பெண் என்கிற பெருமை மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்குகிறது. கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்” என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment