FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, July 29, 2019

உலகின் 'காது கேளாத அழகி’...! முதன்முறையாக பட்டம் வென்ற இந்தியப் பெண்


திறமை இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு இதைவிட சிறந்த உதராணம் வேறு என்ன இருக்க முடியும்..? அழகு என்ற ஒற்றைத் திறமையைக் கொண்டு தன்னிடம் இருக்கும் குறையை முறியடித்திருக்கிறார் 21 வயது விதிஷா பாலியன் (Vidisha Baliyan).

என்னுடய வெற்றிக் கைத்தட்டல்கள் எனக்கு கேட்கவில்லை என்றாலும்.. என்னுடைய சாதனையை உலகமே கேட்கச் செய்துவிட்டேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரியாக வெற்றி கண்டிருக்கிறார் விதிஷா. அதுவும் இந்தியாவில் முதன்முறையாக இந்த பட்டத்தைப் பெறும் முதல் பெண் என்ற வரலாற்று தடத்திலும் பெயர் பதித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முசாஃபர் நகரைச் சேர்ந்த விதிஷா குழந்தைப் பருவத்திலிருந்தே காது கேட்காத குறைபாடோடு வளர்ந்துள்ளார். வலது காது 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்துள்ளது. இடது புறம் முற்றிலுமாக காது கேட்காது.

இந்நிகழ்ச்சி சவுத் ஆப்ரிக்காவில் போம்பெலா (Mbombela) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த காது கேளாத அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். இறுதியாக 11 பேர் கடைசி சுற்றுக்குத் தேர்வானதில் இந்தியப் பெண்ணான விதிஷா ’உலகின் காது கேளாத அழகி 2019’ ( Miss Deaf World 2019) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கு அழகால் மட்டும் வெளிச்சம் கிடைக்கவில்லை. டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்கிறார். உலக அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆக.. விதிஷாவிற்கு இந்த வெற்றி புதிதல்ல என்றே சொல்லலாம். அதேபோல் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம்தான் விதிஷா இந்தியாவின் காது கேளாத அழகி என்ற பட்டம் பெற்றிருந்தார். பட்டத்தை தனதாக்கிய விதிஷா உரையாற்றியபோது “ இந்த நொடி..என்னுடைய கண்ணீரைத் தவிற வேறெந்த வார்த்தைகளும் சிறப்பானதாக இருக்க முடியாது. என்னுடைய கடின உழைப்பு, வலி, காலையில் சீக்கிரம் எழுவது, கடுமையான பயிற்சி இவை எதுவும் வீண் போகவில்லை. எல்லாவற்றிற்கும் இன்று வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் இந்தியாவின் முதல் பெண் என்கிற பெருமை மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்குகிறது. கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்” என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment