FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 29, 2019

தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு விஜய் சேதுபதி பாராட்டு

தைவானில் நடந்த உலக அளவிலான இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தைவானில் நடந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கம் வென்ற மதுரை ஒளவை அரசு பள்ளி மாணவியான ஜெர்லின் காரைக்குடியில் வைத்து விஜய் சேதுபதியை சந்தித்தார்.

அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து விஜய் சேதுபதி வாழ்த்தினார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவி இந்தியாவுக்காக தங்க பதக்கம் வென்றது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment