FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 19, 2019

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல்..!

19.07.2019
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்துள்ள அந்த சட்ட திருத்த மசோதாவில், 1919-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டம் மற்றும், 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ், காது கேளாத, வாய் பேச முடியாத அல்லது தொழு நோயாளிகள் பிரிவைச் சேர்ந்த மக்கள் தேர்தலில் போட்டியிட தகுதி குறைபாடு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் தற்போது தமிழக மக்கள் தொகையில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் உயர் கல்வி தகுதி பெற்றவர்களாகவும், திறமை கொண்டவர்களாகவும் இருப்பதால், அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வழிவகை செய்யும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment