FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 19, 2019

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல்..!

19.07.2019
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்துள்ள அந்த சட்ட திருத்த மசோதாவில், 1919-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டம் மற்றும், 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ், காது கேளாத, வாய் பேச முடியாத அல்லது தொழு நோயாளிகள் பிரிவைச் சேர்ந்த மக்கள் தேர்தலில் போட்டியிட தகுதி குறைபாடு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் தற்போது தமிழக மக்கள் தொகையில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் உயர் கல்வி தகுதி பெற்றவர்களாகவும், திறமை கொண்டவர்களாகவும் இருப்பதால், அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வழிவகை செய்யும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment