FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, December 20, 2024

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு



25.09. 2024 
மாவட்ட கலெக்டர் தகவல்

திருச்சி : சா்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துக்கள் தொிவித்தார்.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சா்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு 35 செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்து தொிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,மொழி மனித நாகாிகத்தின் முதல் அடையாளமாகும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை மொழிதான் மனிதனை ஆளுகிறது. ஆனால் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனி மொழியை பேச முடியாமலும், கேட்க முடியாமலும் அவதிக்குள்ளாவதை நிவா்த்தி செய்யும் வகையில் அவா்களின் முதல் மற்றும் கடைசி மொழியாக சைகை மொழியே உள்ளது.

உலக சைகை மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் தொிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சைகை மொழியை அனைவாிடமும் கொண்டு சோ்ப்பதே உலக சைகை மொழி தினத்தின் நோக்கமாகும். உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 44 கோடி போ் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதில் 3.5 கோடி போ் குழந்தைகள். 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் சைகை மொழி பற்றிய விழப்புணா்வு போதிய அளவில் இல்லை. நாட்டில் 6.5 கோடி போ் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக உள்ளனா்.

எனவே, குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் காது கேளாத குறைபாட்டை கண்டறிந்தால், தற்போதைய நவீன மருத்துவ வசதிகளை கொண்டு அவா்களுக்கு சிகிச்சை அளித்து 60% குழந்தைகளை இக்குறைபாட்டில் இருந்து குணமாக்கலாம். சமூகத்தில் இவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் பல விதமாகவுள்ளது.கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் உணவகங்கள் என சாதாரன மனிதா்கள் பயணிக்கும் இடங்களில் இவர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனா்.

இதுபோன்ற அடிப்படை தேவைகளுள்ள இடங்களில் இவர்களுக்கான வசதிகளை ஏறப்படுத்தி தருவது அவசியமாகும். செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு நாம் அனைவரும் அடிப்படையான சைகை மொழியை தொிந்து கொண்டு அவா்களுக்கு உதவ வேண்டும் என்றார்.இந்திய சைகை மொழி வாரத்தை முன்னிட்டு செப்.23 முதல் செப்.29 தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 10 பேருக்கு நவீன காதொலிக் கருவிகளும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் தக்க செயலியுடன் கூடிய திறன் பேசி 5 நபா்களுக்கும் என மொத்தம் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், முடநீக்கியல் வல்லுநா் ராமன், மாவட்ட உதவி செயல்படுத்தும் அலுவலா் ரமேஷ், திருச்சி மாவட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.



No comments:

Post a Comment