FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 20, 2024

காது கேளாதோருக்கு புது பாடப்பிரிவு துவக்கம்



19.12.2024 
சென்னை:செவித்திறன் குறைந்த வாய் பேச இயலாத மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லுாரியில், புதிய பாடப் பிரிவு துவங்கப்படவுள்ளது.

இதற்காக அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிக்கும் வகையில், இரண்டு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும். பயிற்சி காலம் ஆறு மாதங்கள். இதில், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியான மாணவர்கள் சேரலாம்.






No comments:

Post a Comment