FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, December 25, 2024

வாய் மற்றும் காது கேளாதவர்களுக்காக பிரத்யேக திறன்பேசி... நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர்...


21.12.2024 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனி (18.12.2024) வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய ஆட்சியர், ''தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தில் ஓர் அங்கமாகவும், உரிமை பெற்று திகழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா ரூ.17,000/ வீதம் 50 பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8,50,000/ மதிப்பீட்டில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளும், தலா ரூ.17,000/- வீதம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் ரூ.1,87,000/- மதிப்பீட்டில் தமிழ்நாடு ஈமச்சடங்கு உதவி தொகையும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.2,00,000/ மதிப்பீட்டில் விபத்தால் உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் வாரிசுக்கு நலவாரிய நிவாரண தொகை என மொத்தம் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12,37,000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment