FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, December 25, 2024

வாய் மற்றும் காது கேளாதவர்களுக்காக பிரத்யேக திறன்பேசி... நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர்...


21.12.2024 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனி (18.12.2024) வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய ஆட்சியர், ''தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தில் ஓர் அங்கமாகவும், உரிமை பெற்று திகழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா ரூ.17,000/ வீதம் 50 பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8,50,000/ மதிப்பீட்டில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளும், தலா ரூ.17,000/- வீதம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் ரூ.1,87,000/- மதிப்பீட்டில் தமிழ்நாடு ஈமச்சடங்கு உதவி தொகையும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.2,00,000/ மதிப்பீட்டில் விபத்தால் உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் வாரிசுக்கு நலவாரிய நிவாரண தொகை என மொத்தம் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12,37,000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment