FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, December 25, 2024

வாய் மற்றும் காது கேளாதவர்களுக்காக பிரத்யேக திறன்பேசி... நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர்...


21.12.2024 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனி (18.12.2024) வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய ஆட்சியர், ''தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தில் ஓர் அங்கமாகவும், உரிமை பெற்று திகழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா ரூ.17,000/ வீதம் 50 பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8,50,000/ மதிப்பீட்டில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளும், தலா ரூ.17,000/- வீதம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் ரூ.1,87,000/- மதிப்பீட்டில் தமிழ்நாடு ஈமச்சடங்கு உதவி தொகையும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.2,00,000/ மதிப்பீட்டில் விபத்தால் உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் வாரிசுக்கு நலவாரிய நிவாரண தொகை என மொத்தம் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12,37,000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment