FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, December 19, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!





25.12.2024 
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்:

மாற்றுத்திறனாளிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, அவர்களுக்கு அரசு பணிகளை கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு அரசு பணிகளை கண்டறிவது அவசியம். இதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் குழு அமைத்து, அவர்களுக்கான பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த குழுவில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.
குழுவின் மூலம் கண்டறியப்பட்ட பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறன்களை மதிப்பீடு செய்து, பார்வையற்றோர், செவித் திறன் குறைந்தோர், அறிவுசார் குறைபாடுகள் கொண்டோர் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கு நேரடி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர், காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்ப வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இட ஒதுக்கீடு கொள்கைகள் இருந்து விலக்கு பெறுவதற்கான முறையை பின்பற்ற வேண்டும். மேலும், இந்த நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக, கடந்த 2021-2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






No comments:

Post a Comment