FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, December 25, 2024

திருப்பூர் அதிர்ச்சி: வாராந்திர மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் அவமதிப்பு!

16.12.2024 
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வாராந்திர மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 13-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், வாராந்திர குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் குடிப்பதற்காக குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த குடிநீர் வைக்கப்பட்டிருந்த இருக்கையானது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தப்படும் இருக்கையில் வைக்கப்பட்டிருந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமுக்கு வருபவர்களை பல்வேறு காரணங்கள் கூறி, அவர்களது கோரிக்கைகளை தள்ளி வைப்பதில் ஏற்கெனவே இழுத்தடிப்பு செய்கின்றனர். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்கு பயன்படுத்தப்படும் இருக்கையில் குடிநீர் வைத்திருப்பது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் செயலாகும்.

ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் பலர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமுக்கு வருகிறார்கள். வருபவர்கள் தங்களின் தாகம் தணிக்க நினைத்தாலும், இதுபோன்ற இருக்கையில் வைத்து தண்ணீர் தருவது எந்த விதத்தில் நியாயம்? ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வழங்க ஒரு பிளாஸ்டிக் இருக்கை கூடவா இல்லாமல் போய்விட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் உள்ள கழிவறைகளுக்கு தாழ்ப்பாள் இல்லை. மாற்றுத்திறனாளிகள் கதவை தாழிட்டு செல்ல முடியாததால், அதனை பலரும் பயன்படுத்துவதில்லை. பல மணி நேரம் பயணம் செய்து, இந்த முகாமுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க முடியாத நெருக்கடி ஏற்படுகிறது.

சராசரியாக பயன்படுத்தும் கழிவறைகளை மாற்றுத்திறனாளிகளும் பெரும் சிரமத்துக்கு இடையே பயன்படுத்துகிறார்கள். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இவற்றையெல்லாம் களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் வேறொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால், மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். கோரிக்கைகளை புறந்தள்ளாமல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து உடனடியாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment