FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, December 22, 2024

பிறந்த குழந்தைக்கு காது கேட்குமா கேட்காதா என்பதை அறிய முடியும்.. இலவச சிகிச்சையும் உண்டு.. நிபுணர் விளக்கம்!


பிறந்தது முதலே குழந்தையின் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா, சரியான முறையில் வளர்ச்சி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். வளரும் போது குழந்தைக்கு கண்கள் நன்றாக தெரிகிறதா? நாம் பேசும் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றுகிறதா, காது கேட்கிறதா? கை கால்களை நன்றாக ஆட்டி ஆட்டி பதிலளிக்கிறதா? என ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு காது கேளாமை ஏன் உண்டாகிறது? வளரும் போது காது கேட்பதில் பிரச்சனை இருக்குமா என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

காது கேளாமை என்பது குழந்தையை மிதமாகவோ அல்லது ஆழமாகவோ பாதிக்கலாம். குழந்தையின் செவித்திறன் பிறக்கும் போதே இருக்கலாம். அல்லது வளரும் போது காயங்கள், தொற்றுகள் அல்லது உரத்த சத்தங்களை நீண்ட நேரம் வெளிப்படுவதன் மூலம் செவித்திறனை இழக்கலாம். காது கேளாமை குறைபாடு குழந்தைகளிடம் எப்போது கண்டறியப்படுகிறது? அதை தடுக்க முடியுமா என்பது குறித்து விளக்குகிறார் Dr Muraleedharan A, Consultant, ENT, Gleneagles Hospital Chennai.

குழந்தைக்கு காது கேளாமை என்றால் என்ன?


குழந்தைகளில் காது கேளாமை என்பது இரண்டு வகையாக பார்க்கலாம். பிறக்கும் போதே (பிறவி) குறைபாடு இருக்கலாம். குழந்தை பருவத்தில் வளரும் போது உருவாகலாம். இதில் பிறவி கோளாறு என்பது பரம்பரையாக இருக்கலாம். பெரும்பாலும் சொந்தத்துக்குள் திருமணம் செய்வதால் ஏற்படக்கூடியது. அதனால் தான் இதை தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். இவை தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகள், சைட்டோமெலகோவைரஸ் அல்லது ரூபெல்லா தொற்று உட்பட இன்னும் சில காரணங்கள் சொல்லப்படுகிறது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைகளில் காது கேளாமை பொதுவானது.

சொந்தத்துக்குள் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காதா?


பிறவி குறைபாடாக குழந்தை பிறக்கும் போதே காது கேட்காமல் இருக்க சொல்லும் காரணங்களில் சொந்தத்துக்குள் திருமணம் செய்வது என்பது முக்கியமானது. எல்லா குழந்தைகளுக்கும் இப்படி இருக்கும் என்று சொல்லமுடியாவிட்டாலும் பிறவி செவித்திறன் இழப்பு கொண்டுள்ள 100 குழந்தைகளில் 90 குழந்தைகளின் பெற்றோர்கள் சொந்தத்துக்குள் திருமணம் செய்திருப்பார்கள்.அதனால் தான் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வளர்ந்த பிறகு செவித்திறன் இழப்புக்கு என்ன காரணம்?


குழந்தை வளரும் போது செவித்திறன் பிரச்சனை இருந்தால் பெற்றோர்களால் கண்டிப்பாக கண்டறிய முடியும். குழந்தை தவழும் போது, கவிழும் போது பெயர் சொல்லி அழைக்கும் போது திரும்பி பார்க்கும். அப்போது குழந்தை எதற்கும் பதிலளிக்காமல் இருந்தால் அப்போது பெற்றோர்களால் கண்டறிந்துவிட முடியும். இதிலும் குழந்தை முதல் குழந்தையாக இருந்தால் பெற்றோர்களால் கண்டறிவது கடினமாக இருக்கலாம். இரண்டாவது குழந்தையாக இருந்தால் கண்டறிந்துவிடலாம்.
சில நேரங்களில் தீபாவளி வெடிச்சத்தம் பயங்கரமாக இருந்தும் குழந்தை எதற்கும் எதிர்வினை ஆற்றாத போது குழந்தைக்கு செவித்திறன் பிரச்சனை இருப்பதை கண்டறிந்துவிடுகிறார்கள்.

குழந்தை வளரும் போது செவித்திறன் பிரச்சனைக்கு என்ன காரணம்?


குழந்தைகள் வளரும் போது அடிக்கடி சளி பிடிக்கலாம். அப்போது நடுத்தர காதுப்பகுதியில் தொற்று ஏற்படலாம். அப்போதுதான் குழந்தையின் காதுகளில் சீழ் வரக்கூடும். இந்நிலையில் நடுத்தர காது பகுதியில் இருக்கும் malleus, incus, and stapes என்னும் மெல்லிய எலும்புகள் உண்டு. இவை தான் சத்தத்தை உள்வாங்கி எதிரொலிக்கின்றன. இது சேதம் ஆகும் போது செவித்திறன் பாதிப்பு ஏற்படும். அதனால் குழந்தைக்கு சளி பிடித்த உடன் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இது காது பகுதியில் தொற்றை ஏற்படுத்தலாம். அதாவது நடுத்தர பகுதியிலிருந்து உள்நோக்கி பரவலாம். அதனால் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தாலே இந்த செவித்திறன் பாதிப்பு கட்டுப்படுத்தலாம். தீவிர நிலையில் இவை சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றாலும் இது அரிதானது.

பிறந்த குழந்தைக்கு காது கேளாமை பிரச்சனை எப்படி கண்டறியப்படுகிறது?


காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் National Programme for Prevention and Control of Deafness (NPPCD) ஒன்றை இந்திய அரசாங்கமே தொடங்கி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வரை விரிவுப்படுத்தியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் பிரசவம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தைக்கு otoacoustic emission test (OAE) செய்யப்படும். இந்த பரிசோதனையில் குழந்தையின் செவித்திறன் சீராக உள்ளதா, ஏதேனும் பிரச்சனை இருக்குமா என்பது கண்டறியப்படும். இது பிறந்த குழந்தை அனைவருக்கும் கட்டாயம் செய்யப்படும் பரிசோதனை. இந்த பரிசோதனையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் ஆக வந்தால் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை வந்து குழந்தையை மருத்துவரிடம் காட்ட வேண்டும். மீண்டும் ஆறாவது மாதங்களில் குழந்தையை அழைத்து வரும் போது கண்டறிந்துவிட முடியும்.

குழந்தைக்கு செவித்திறன் பிரச்சனை இருந்தால் சிகிச்சை உண்டா?


தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டே இது தொடங்கப்பட்டுவிட்டது. குழந்தைக்கு செவித்திறன் பிரச்சனை இருந்தால் ஆறுமாதங்களில் கண்டறியப்பட்டாலும் ஒன்றரை வருடமாகும் போது cochlear implant அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை செய்வதற்கு 5 இலட்சம் வரை செலவாகும் ஆனால் முதலமைச்சரின் cm relief fund வழியாக குழந்தைக்கு இலவசமாகவே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இன்று வரை செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

குழந்தைக்கு செவித்திறன் அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர்களால் பேச முடியுமா?
குழந்தைக்கு ஒலி கேட்கும் திறன் இருந்தால் தான் குழந்தை மீண்டும் பிரதிபலிக்க தொடங்கும். காதுக்குள் ஒலி கேட்டால் தான் பேச தொடங்குவார்கள். பேச்சுத்திறன் வளர்க்க அவர்களுக்கு ஒலித்திறன் அவசியம். கேட்கும் திறன் வந்தாலே அவர்கள் பேச தொடங்கிவிடுவார்கள்.
அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் கேட்கும் திறன் மேம்படும். அறுவை சிகிச்சை செய்த பிறகு வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை என படிப்படியாக ஒருவருடம் வரை குழந்தைக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகள் வளர வளர இயல்பாக பேச தொடங்குவார்கள். இவர்களும் மற்ற குழந்தைகள் போன்று வளர தொடங்குவார்கள். அதனால் இன்றைய நிலையில் பிறவியில் செவித்திறன் இருக்கும் போது அதிகம் கவலைபட வேண்டியதில்லை. தொடர்ந்து சிகிச்சை எடுத்தாலே போதும். அதே நேரம் குழந்தைகள் வளர்ந்த பிறகு சளி தொற்று வரும் போது மருத்துவரை அணுகுவது செவித்திறன் பாதிப்பதை தடுக்கும்.



No comments:

Post a Comment