FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, April 29, 2014

ஆர்பிட் வளாகத்தில் பெற்றோர்களுக்கான கோடைகால பயிற்சி

27.04.2014 திருச்சி, :
திருச்சி ஆர்பிட் வளாகத்தில் உள்ள சிறப்பு நபர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறப்பு குழந்தைகள் பெற்றோருக் கான கோடைக்கால தொழிற்பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு நபர்களின் பெற் றோரின் சிறகுகள் அமைப் பின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் துறைத் தலைவர் பிரபாவதி, பதிவாளர் ராம்கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முகாமில் பாக்கு மட் டையில் தட்டு தயாரித்தல், அலுவலக கவர், கூரியர் கவர் , சணல் பைகள் மற்றும் சேலைகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சி கள் வழங்கப்பட்டது. முகா மில் சிறகுகள் அமைப்பில் இணைந்துள்ள சிறப்பு நபர் கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட் டையும், இலவச பேருந்து சலுகைக் கட்டணம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட் டன.
Thanks to Dinakaran

நேரடி முதுகலைப் படிப்புகள்

Monday, April 28, 2014

மாற்றுத்திறனாளிகளிடம் விடாமுயற்சி இருக்க வேண்டும்: சகாயம்

27.04.2014, சென்னை
 மாற்றுத்திறனாளிகள் விடா முயற்சியோடு செயல்பட்டால் தங்களது இலக்கை அடைய முடியும் என கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ. சகாயம் கூறினார்.

சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை பேரவையின் 14-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட சகாயம் பேசியது: அனைத்துத் தரப்பு மக்களின்

விடாமுயற்சி


உங்களுக்கு அருகில் மாற்று திறனாளிகள் ஏதாவது வியாபாரம் செய்தால்,அந்த பொருளுக்கான தேவை ஏற்படும்போது அவரிடமே அந்த பொருட்களை வாங்க
பாருங்கள்...
நம்மால் அவர்களோடு "எப்போதும்" இருந்து எந்த உதவியும் கண்டிப்பாக செய்ய முடியாது...

ஆனால்,நாம் வாங்கும் பொருளில் உள்ள லாபம், கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில்
உதவும்...!

இளைங்கர்களே சமுக சேவைக்காக கை கோர்போம் வாருங்கள் !!

முடிந்தவரை பகிரவும்..!! எங்களுடன் இணையுங்கள்

Friday, April 25, 2014

நடைமுறைக்கு வராத தேர்தல் கமிஷன் வாக்குறுதிகள் : நொந்து போன மாற்றுத்திறனாளிகள் வேதனை

சாய்தளம் இல்லாத வாக்குச்சாவடிகள்: மாற்றுத்திறனாளிகள் அவதி

25.04.2014, சென்னை
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் மூன்று சக்கர வாகனங்களில் வந்த மாற்றுத்திறனாளிகளை மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தியதால் வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியது:மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோவில் வாக்குச் சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் 200 மீட்டர்

Monday, April 21, 2014

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்!

21.04.2014,
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

இதுவரையான தேர்தல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியோடுதான் வாக்களிக்கும் முறை இருந்து வந்தது. இதில் அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை என்றும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தங்களுக்கான ரகசியத் தன்மை இல்லையென்றும்

Sunday, April 20, 2014

மாற்று திறனாளிகளுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு வினோத தண்டனை

சிகாகோ, 15 April 2014
அமெரிக்காவில் மாற்று திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக, 62 வயது முதியவர் ஒருவருக்கு ""நான் எளியவர்களை துன்புறுத்துபவன்'' என்று எழுதப்பட்ட பலகையை தாங்கிப் பிடித்தபடி பொது இடத்தில் 5 மணி நேரம் உட்கார வைத்து அந்நாட்டு நீதிமன்றம் வினோத தண்டனையை வழங்கியது.

மேலும், ""எட்மண்ட் ஆவிவ், 15 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உளவியல் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவிட்டார். எட்மண்ட் தனது அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் அவரது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் 15 ஆண்டுகளாக தொந்தரவு கொடுத்து வந்ததாக வந்த புகாரையடுத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவருக்கு பொது இடத்தில் நூதன முறையில் தண்டனையை நிறைவேற்றியதற்கு பொதுமக்களும், பெண்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Thanks to

Saturday, April 12, 2014

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தன்னம்பிக்கை நாள் கொண்டாட்டம்

11.04.2014
திருச்சி,: திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த நாளை நம்மால் முடியும் தன்னம்பிக்கை நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி ஜென்னீஸ் அகாடமி சமையல் கல்லூரியில் இலவசமாக உதவி சமையலாளர் பயிற்சி பெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு மற்றும் அடுக்களை மேல் அங்கி வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பயிற்சி வழங்கி, வேலை வாங்கி கொடுக்கும் ஜென்னீஸ் அகாடமி சமையல் மேலா ண்மை கல்லூரி இயக்குனர் பொன்இளங்கோ மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டி மக்கள் சக்தி இயக்கம் சார் பில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க மாநகர செயலாளர் செல்லக்குட்டி , மாவட்ட செயலாளர் இளங்கோ, அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாநகர அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 Thanks to

Thursday, April 10, 2014

வேலை வேண்டுமா?

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க ரூ.7 கோடி நிதி உதவி

10.04.2014
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கம் (இந்தியா) (GLRA INDIA) முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், ஆலோசகர் வி.கனகசபாபதி ஆகியோர் கூறியதாவது:

இந்தியாவில் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்திற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளன.

பீகாரில் 2 மாவட்டங்கள் மற்றும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு மாவட்டம் என இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 5 மாவட்டங்களை தேர்வு செய் துள்ளோம்.

இந்த மாவட்டங்களில் 2.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அரசின் திட்டங் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2014 முதல் 2018 வரையில் இந்த நிதி பயன் படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கத்தின் சர்வதேச மருத்துவ ஆலோசகர் ஆஸ்வால்டு பெலிங்கர், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் உடன் இருந்தனர்.
Thanks to

Monday, April 7, 2014

மாற்றுத் திறனாளிகள் சாதிக்க வேண்டும்

07.04.2014
திறமைகளை வெளிக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: நாகரிக வளர்ச்சி

Friday, April 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை

01.04.2014 புதுடில்லி:
'மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல துறைகளில், பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என, 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, இட மாற்றம் மற்றும் பதவியமர்த்துதல் போன்ற விஷயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியாற்ற, எந்த துறையில், எந்த பகுதியில், காலியிடங்கள் உள்ளன என்பது கண்டறியப்படும். இவர்களுக்கு, பதவி உயர்வுக்கான பயிற்சி, இடமாற்றம், விடுமுறை அளிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அவர்கள், பணிபுரியும் அலுவலகங்களின் அருகாமையில், தங்கும் இட வசதிகளை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to

தேசிய கிராம மேம்பாட்டு நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பு

ஹைதராபாத்தில் உள்ள National Institute of Rural Development நிறுவனத்தில் ஒரு வருட முழு நேர டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விரும்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வழங்கப்படும் படிப்புகள்: Post Graduate Diploma in Rural Development Management (PGDRDM) - ஒரு வருடம்

தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மே 4ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.300 டிடி எடுக்க வேண்டும்.

www.nird.org.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது மேற்கண்ட முகவரியில் இருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து டிடி.,யுடன் இணைத்து அனுப்பியும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: ஏப்ரல் 21.

Thursday, April 3, 2014

மாடியிலிருந்து ஆட்சியரை கீழே வரவழைத்து வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி

03.04.2014
மாடி ஏறி வர முடியாத நிலையில் கடலூரில் ஆட்சியரை கீழே வரவழைத்து மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் திட்டக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புதன்கிழமை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். உடன் ஏராளமான மாற்றுத் திறனாளிகளும் வந்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்யும் இடம் மாடியில்

Wednesday, April 2, 2014

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

02.04.2014
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக இந்த நிலையத்தின் உதவி இயக்குநர் என்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிண்டியில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருள்களான பாக்கு மட்டைத் தட்டுகள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், துரித உணவுப் பொருள்களான பானிபூரி, பழச்சாறுகள், வற்றல் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியில் சேர கல்வி தடையில்லை. 18 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் சேரலாம்.

மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் போது தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பற்றிய வழி முறைகள் ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940318891, 9790754446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்