FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 10, 2014

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க ரூ.7 கோடி நிதி உதவி

10.04.2014
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கம் (இந்தியா) (GLRA INDIA) முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், ஆலோசகர் வி.கனகசபாபதி ஆகியோர் கூறியதாவது:

இந்தியாவில் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்திற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளன.

பீகாரில் 2 மாவட்டங்கள் மற்றும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு மாவட்டம் என இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 5 மாவட்டங்களை தேர்வு செய் துள்ளோம்.

இந்த மாவட்டங்களில் 2.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அரசின் திட்டங் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2014 முதல் 2018 வரையில் இந்த நிதி பயன் படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கத்தின் சர்வதேச மருத்துவ ஆலோசகர் ஆஸ்வால்டு பெலிங்கர், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் உடன் இருந்தனர்.
Thanks to

No comments:

Post a Comment