FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, April 10, 2014

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க ரூ.7 கோடி நிதி உதவி

10.04.2014
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கம் (இந்தியா) (GLRA INDIA) முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், ஆலோசகர் வி.கனகசபாபதி ஆகியோர் கூறியதாவது:

இந்தியாவில் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்திற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளன.

பீகாரில் 2 மாவட்டங்கள் மற்றும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு மாவட்டம் என இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 5 மாவட்டங்களை தேர்வு செய் துள்ளோம்.

இந்த மாவட்டங்களில் 2.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அரசின் திட்டங் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2014 முதல் 2018 வரையில் இந்த நிதி பயன் படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கத்தின் சர்வதேச மருத்துவ ஆலோசகர் ஆஸ்வால்டு பெலிங்கர், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் உடன் இருந்தனர்.
Thanks to

No comments:

Post a Comment