FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, April 10, 2014

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க ரூ.7 கோடி நிதி உதவி

10.04.2014
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கம் (இந்தியா) (GLRA INDIA) முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், ஆலோசகர் வி.கனகசபாபதி ஆகியோர் கூறியதாவது:

இந்தியாவில் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்திற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளன.

பீகாரில் 2 மாவட்டங்கள் மற்றும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு மாவட்டம் என இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 5 மாவட்டங்களை தேர்வு செய் துள்ளோம்.

இந்த மாவட்டங்களில் 2.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அரசின் திட்டங் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2014 முதல் 2018 வரையில் இந்த நிதி பயன் படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கத்தின் சர்வதேச மருத்துவ ஆலோசகர் ஆஸ்வால்டு பெலிங்கர், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் உடன் இருந்தனர்.
Thanks to

No comments:

Post a Comment