FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, April 2, 2014

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

02.04.2014
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக இந்த நிலையத்தின் உதவி இயக்குநர் என்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிண்டியில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருள்களான பாக்கு மட்டைத் தட்டுகள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், துரித உணவுப் பொருள்களான பானிபூரி, பழச்சாறுகள், வற்றல் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியில் சேர கல்வி தடையில்லை. 18 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் சேரலாம்.

மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் போது தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பற்றிய வழி முறைகள் ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940318891, 9790754446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment