FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, April 2, 2014

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

02.04.2014
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக இந்த நிலையத்தின் உதவி இயக்குநர் என்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிண்டியில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருள்களான பாக்கு மட்டைத் தட்டுகள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், துரித உணவுப் பொருள்களான பானிபூரி, பழச்சாறுகள், வற்றல் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியில் சேர கல்வி தடையில்லை. 18 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் சேரலாம்.

மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் போது தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பற்றிய வழி முறைகள் ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940318891, 9790754446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment