FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 3, 2014

மாடியிலிருந்து ஆட்சியரை கீழே வரவழைத்து வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி

03.04.2014
மாடி ஏறி வர முடியாத நிலையில் கடலூரில் ஆட்சியரை கீழே வரவழைத்து மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் திட்டக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புதன்கிழமை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். உடன் ஏராளமான மாற்றுத் திறனாளிகளும் வந்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்யும் இடம் மாடியில் இருந்ததால், தங்களால் படி ஏறி வர இயலாது. எனவே ஆட்சியர் கீழே இருந்து வந்து மனுவை பெற்றுச் செல்லவேண்டும் என அப்போது அவர்கள் கோரினர்.

ஆனால் ஆட்சியர் வரமறுத்து கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வலியுறுத்தினார். இதை ஏற்காத மாற்றுத் திறனாளிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தான் வேட்புமனுத் தாக்கல் செய்வோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கீழிறங்கி வந்த ஆட்சியர், வேட்பாளரிடம் மனுவைப் பெற்றுக் கொண்டு, வேட்பாளரை ஆதரித்து முன்மொழியக் கூடிய 10 நபர்களின் பெயர்களை குறித்துக் கொண்டு, முன்மொழிபவர்களில் ஒருவரை மட்டும் கையொப்பமிட மேலே அழைத்துச் சென்றார். இதை யடுத்து மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.
Thanks to

No comments:

Post a Comment