FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, April 3, 2014

மாடியிலிருந்து ஆட்சியரை கீழே வரவழைத்து வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி

03.04.2014
மாடி ஏறி வர முடியாத நிலையில் கடலூரில் ஆட்சியரை கீழே வரவழைத்து மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் திட்டக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புதன்கிழமை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். உடன் ஏராளமான மாற்றுத் திறனாளிகளும் வந்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்யும் இடம் மாடியில் இருந்ததால், தங்களால் படி ஏறி வர இயலாது. எனவே ஆட்சியர் கீழே இருந்து வந்து மனுவை பெற்றுச் செல்லவேண்டும் என அப்போது அவர்கள் கோரினர்.

ஆனால் ஆட்சியர் வரமறுத்து கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வலியுறுத்தினார். இதை ஏற்காத மாற்றுத் திறனாளிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தான் வேட்புமனுத் தாக்கல் செய்வோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கீழிறங்கி வந்த ஆட்சியர், வேட்பாளரிடம் மனுவைப் பெற்றுக் கொண்டு, வேட்பாளரை ஆதரித்து முன்மொழியக் கூடிய 10 நபர்களின் பெயர்களை குறித்துக் கொண்டு, முன்மொழிபவர்களில் ஒருவரை மட்டும் கையொப்பமிட மேலே அழைத்துச் சென்றார். இதை யடுத்து மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.
Thanks to

No comments:

Post a Comment