FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, April 25, 2014

சாய்தளம் இல்லாத வாக்குச்சாவடிகள்: மாற்றுத்திறனாளிகள் அவதி

25.04.2014, சென்னை
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் மூன்று சக்கர வாகனங்களில் வந்த மாற்றுத்திறனாளிகளை மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தியதால் வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியது:மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோவில் வாக்குச் சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் 200 மீட்டர் தொலைவிலேயே வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.

இதனால் வேறு ஒருவரின் உதவியுடன் மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் வாக்குச் சாவடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன என்றனர்.

கண்டனம்: இந்தச் செயலுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சாய்தளம், தடையில்லா சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to Dinamani.

No comments:

Post a Comment