FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, April 25, 2014

சாய்தளம் இல்லாத வாக்குச்சாவடிகள்: மாற்றுத்திறனாளிகள் அவதி

25.04.2014, சென்னை
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் மூன்று சக்கர வாகனங்களில் வந்த மாற்றுத்திறனாளிகளை மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தியதால் வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியது:மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோவில் வாக்குச் சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் 200 மீட்டர் தொலைவிலேயே வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.

இதனால் வேறு ஒருவரின் உதவியுடன் மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் வாக்குச் சாவடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன என்றனர்.

கண்டனம்: இந்தச் செயலுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சாய்தளம், தடையில்லா சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to Dinamani.

No comments:

Post a Comment