FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, April 21, 2014

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்!

21.04.2014,
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

இதுவரையான தேர்தல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியோடுதான் வாக்களிக்கும் முறை இருந்து வந்தது. இதில் அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை என்றும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தங்களுக்கான ரகசியத் தன்மை இல்லையென்றும் பார்வையற்றவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இவர்களின் இந்தக் குறையைப் போக்கும் வகையில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் இந்தமுறை அறிமுகப்படுத்த உள்ளது.

பிரெய்லி முறை வேட்பாளர்கள் புத்தகமும், இந்த புத்தகத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு, அவர்களின் வரிசை எண்ணுக்கு ஏற்றாற்போன்று வாக்கு எந்திரத்தில் பிரெய்லி முறையில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் யாருடைய உதவியுமின்றி பார்வையற்றவர்கள் ரகசியமாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டாலும், பிரெய்லி படிக்காதவர்களுக்கு இன்னமும் இது குறையாகவே இருக்கும் என்பதும் படிக்காத பார்வையற்றவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

உலகில் உள்ள 39 பில்லியன் பார்வையற்றவர்களில் 20 % வீதம் (7.8 பில்லியன் மக்கள்) இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment