FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, April 21, 2014

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்!

21.04.2014,
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

இதுவரையான தேர்தல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியோடுதான் வாக்களிக்கும் முறை இருந்து வந்தது. இதில் அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை என்றும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தங்களுக்கான ரகசியத் தன்மை இல்லையென்றும் பார்வையற்றவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இவர்களின் இந்தக் குறையைப் போக்கும் வகையில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் இந்தமுறை அறிமுகப்படுத்த உள்ளது.

பிரெய்லி முறை வேட்பாளர்கள் புத்தகமும், இந்த புத்தகத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு, அவர்களின் வரிசை எண்ணுக்கு ஏற்றாற்போன்று வாக்கு எந்திரத்தில் பிரெய்லி முறையில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் யாருடைய உதவியுமின்றி பார்வையற்றவர்கள் ரகசியமாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டாலும், பிரெய்லி படிக்காதவர்களுக்கு இன்னமும் இது குறையாகவே இருக்கும் என்பதும் படிக்காத பார்வையற்றவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

உலகில் உள்ள 39 பில்லியன் பார்வையற்றவர்களில் 20 % வீதம் (7.8 பில்லியன் மக்கள்) இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment