FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, April 21, 2014

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்!

21.04.2014,
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

இதுவரையான தேர்தல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியோடுதான் வாக்களிக்கும் முறை இருந்து வந்தது. இதில் அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை என்றும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தங்களுக்கான ரகசியத் தன்மை இல்லையென்றும் பார்வையற்றவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இவர்களின் இந்தக் குறையைப் போக்கும் வகையில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் இந்தமுறை அறிமுகப்படுத்த உள்ளது.

பிரெய்லி முறை வேட்பாளர்கள் புத்தகமும், இந்த புத்தகத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு, அவர்களின் வரிசை எண்ணுக்கு ஏற்றாற்போன்று வாக்கு எந்திரத்தில் பிரெய்லி முறையில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் யாருடைய உதவியுமின்றி பார்வையற்றவர்கள் ரகசியமாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டாலும், பிரெய்லி படிக்காதவர்களுக்கு இன்னமும் இது குறையாகவே இருக்கும் என்பதும் படிக்காத பார்வையற்றவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

உலகில் உள்ள 39 பில்லியன் பார்வையற்றவர்களில் 20 % வீதம் (7.8 பில்லியன் மக்கள்) இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment