FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, April 21, 2014

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்!

21.04.2014,
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

இதுவரையான தேர்தல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியோடுதான் வாக்களிக்கும் முறை இருந்து வந்தது. இதில் அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை என்றும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தங்களுக்கான ரகசியத் தன்மை இல்லையென்றும் பார்வையற்றவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இவர்களின் இந்தக் குறையைப் போக்கும் வகையில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் இந்தமுறை அறிமுகப்படுத்த உள்ளது.

பிரெய்லி முறை வேட்பாளர்கள் புத்தகமும், இந்த புத்தகத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு, அவர்களின் வரிசை எண்ணுக்கு ஏற்றாற்போன்று வாக்கு எந்திரத்தில் பிரெய்லி முறையில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் யாருடைய உதவியுமின்றி பார்வையற்றவர்கள் ரகசியமாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டாலும், பிரெய்லி படிக்காதவர்களுக்கு இன்னமும் இது குறையாகவே இருக்கும் என்பதும் படிக்காத பார்வையற்றவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

உலகில் உள்ள 39 பில்லியன் பார்வையற்றவர்களில் 20 % வீதம் (7.8 பில்லியன் மக்கள்) இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment