FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, April 20, 2014

மாற்று திறனாளிகளுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு வினோத தண்டனை

சிகாகோ, 15 April 2014
அமெரிக்காவில் மாற்று திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக, 62 வயது முதியவர் ஒருவருக்கு ""நான் எளியவர்களை துன்புறுத்துபவன்'' என்று எழுதப்பட்ட பலகையை தாங்கிப் பிடித்தபடி பொது இடத்தில் 5 மணி நேரம் உட்கார வைத்து அந்நாட்டு நீதிமன்றம் வினோத தண்டனையை வழங்கியது.

மேலும், ""எட்மண்ட் ஆவிவ், 15 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உளவியல் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவிட்டார். எட்மண்ட் தனது அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் அவரது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் 15 ஆண்டுகளாக தொந்தரவு கொடுத்து வந்ததாக வந்த புகாரையடுத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவருக்கு பொது இடத்தில் நூதன முறையில் தண்டனையை நிறைவேற்றியதற்கு பொதுமக்களும், பெண்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment