FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, April 20, 2014

மாற்று திறனாளிகளுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு வினோத தண்டனை

சிகாகோ, 15 April 2014
அமெரிக்காவில் மாற்று திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக, 62 வயது முதியவர் ஒருவருக்கு ""நான் எளியவர்களை துன்புறுத்துபவன்'' என்று எழுதப்பட்ட பலகையை தாங்கிப் பிடித்தபடி பொது இடத்தில் 5 மணி நேரம் உட்கார வைத்து அந்நாட்டு நீதிமன்றம் வினோத தண்டனையை வழங்கியது.

மேலும், ""எட்மண்ட் ஆவிவ், 15 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உளவியல் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவிட்டார். எட்மண்ட் தனது அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் அவரது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் 15 ஆண்டுகளாக தொந்தரவு கொடுத்து வந்ததாக வந்த புகாரையடுத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவருக்கு பொது இடத்தில் நூதன முறையில் தண்டனையை நிறைவேற்றியதற்கு பொதுமக்களும், பெண்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment