FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, April 7, 2014

மாற்றுத் திறனாளிகள் சாதிக்க வேண்டும்

07.04.2014
திறமைகளை வெளிக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: நாகரிக வளர்ச்சி
காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் மற்றவர்கள் மனதில் உருவாகியுள்ளது.

பிரெய்லி, ஹெலன் கெல்லர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் படைப்புகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊனம் தடையாக இல்லை என நிரூபித்துள்ளனர். அதுபோல தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதனை படைப்பதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முயல வேண்டும்.

இந்தியாவில் போலியோ உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடியே 68 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 16 லட்சம் பேரும் உள்ளனர். போலியோ நோய்த் தொற்றை முற்றிலும் ஓழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது போலியோ தொற்று இல்லாத நாடாக உலக சுகாதார மையம் இந்தியாவை அறிவித்துள்ளது என்றார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சாதனையாளர் விருதும், 5 பேருக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினர்.

இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கி.கோபிநாத், தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி, மாவட்ட செயலாளர் க.அப்புனு, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஏ.கனகராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment