FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, April 7, 2014

மாற்றுத் திறனாளிகள் சாதிக்க வேண்டும்

07.04.2014
திறமைகளை வெளிக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: நாகரிக வளர்ச்சி
காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் மற்றவர்கள் மனதில் உருவாகியுள்ளது.

பிரெய்லி, ஹெலன் கெல்லர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் படைப்புகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊனம் தடையாக இல்லை என நிரூபித்துள்ளனர். அதுபோல தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதனை படைப்பதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முயல வேண்டும்.

இந்தியாவில் போலியோ உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடியே 68 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 16 லட்சம் பேரும் உள்ளனர். போலியோ நோய்த் தொற்றை முற்றிலும் ஓழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது போலியோ தொற்று இல்லாத நாடாக உலக சுகாதார மையம் இந்தியாவை அறிவித்துள்ளது என்றார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சாதனையாளர் விருதும், 5 பேருக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினர்.

இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கி.கோபிநாத், தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி, மாவட்ட செயலாளர் க.அப்புனு, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஏ.கனகராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment