FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, April 7, 2014

மாற்றுத் திறனாளிகள் சாதிக்க வேண்டும்

07.04.2014
திறமைகளை வெளிக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: நாகரிக வளர்ச்சி
காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் மற்றவர்கள் மனதில் உருவாகியுள்ளது.

பிரெய்லி, ஹெலன் கெல்லர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் படைப்புகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊனம் தடையாக இல்லை என நிரூபித்துள்ளனர். அதுபோல தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதனை படைப்பதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முயல வேண்டும்.

இந்தியாவில் போலியோ உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடியே 68 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 16 லட்சம் பேரும் உள்ளனர். போலியோ நோய்த் தொற்றை முற்றிலும் ஓழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது போலியோ தொற்று இல்லாத நாடாக உலக சுகாதார மையம் இந்தியாவை அறிவித்துள்ளது என்றார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சாதனையாளர் விருதும், 5 பேருக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினர்.

இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கி.கோபிநாத், தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி, மாவட்ட செயலாளர் க.அப்புனு, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஏ.கனகராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment