FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, April 7, 2014

மாற்றுத் திறனாளிகள் சாதிக்க வேண்டும்

07.04.2014
திறமைகளை வெளிக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: நாகரிக வளர்ச்சி
காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் மற்றவர்கள் மனதில் உருவாகியுள்ளது.

பிரெய்லி, ஹெலன் கெல்லர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் படைப்புகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊனம் தடையாக இல்லை என நிரூபித்துள்ளனர். அதுபோல தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதனை படைப்பதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முயல வேண்டும்.

இந்தியாவில் போலியோ உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடியே 68 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 16 லட்சம் பேரும் உள்ளனர். போலியோ நோய்த் தொற்றை முற்றிலும் ஓழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது போலியோ தொற்று இல்லாத நாடாக உலக சுகாதார மையம் இந்தியாவை அறிவித்துள்ளது என்றார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சாதனையாளர் விருதும், 5 பேருக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினர்.

இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கி.கோபிநாத், தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி, மாவட்ட செயலாளர் க.அப்புனு, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஏ.கனகராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment