FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, April 28, 2014

மாற்றுத்திறனாளிகளிடம் விடாமுயற்சி இருக்க வேண்டும்: சகாயம்

27.04.2014, சென்னை
 மாற்றுத்திறனாளிகள் விடா முயற்சியோடு செயல்பட்டால் தங்களது இலக்கை அடைய முடியும் என கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ. சகாயம் கூறினார்.

சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை பேரவையின் 14-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட சகாயம் பேசியது: அனைத்துத் தரப்பு மக்களின்
வளர்ச்சியை உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சியில், மாற்றுத்திறனாளர்களின் பங்கு அவசியமானது. நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாற்றுத்திறனாளர்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகள் செய்யப்பட்டன. அதில், குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்கான பயிற்சிகளைப் பெற மாற்றுத்திறனாளர்களுக்கென வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளர்கள் உடலளவில் உள்ள குறைகளைப் பற்றி எண்ணுவதை தவிர்த்து விட்டு, மனதளவில் உறுதியோடு செயல்படுவது அவசியமானது. அதிலும், விடா முயற்சியோடு முயன்றால் தங்களது இலக்கை அடைய முடியும் என்றார்.

இதில், மனவளர்ச்சி குன்றிய பெண்கள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளின் தாய்மார்கள் 35 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேவதி சங்கரன், கோத்தாரி குழுமத்தைச் சேர்ந்த சுரேகா கோத்தாரி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரநாதன், அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை பேரவைச் செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்த விவரம்:

வீடு இல்லாத பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும். மாத உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.3000-மாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Thanks to Dinamani

No comments:

Post a Comment