FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, April 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை

01.04.2014 புதுடில்லி:
'மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல துறைகளில், பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என, 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, இட மாற்றம் மற்றும் பதவியமர்த்துதல் போன்ற விஷயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியாற்ற, எந்த துறையில், எந்த பகுதியில், காலியிடங்கள் உள்ளன என்பது கண்டறியப்படும். இவர்களுக்கு, பதவி உயர்வுக்கான பயிற்சி, இடமாற்றம், விடுமுறை அளிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அவர்கள், பணிபுரியும் அலுவலகங்களின் அருகாமையில், தங்கும் இட வசதிகளை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to

No comments:

Post a Comment