FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, April 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை

01.04.2014 புதுடில்லி:
'மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல துறைகளில், பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என, 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, இட மாற்றம் மற்றும் பதவியமர்த்துதல் போன்ற விஷயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியாற்ற, எந்த துறையில், எந்த பகுதியில், காலியிடங்கள் உள்ளன என்பது கண்டறியப்படும். இவர்களுக்கு, பதவி உயர்வுக்கான பயிற்சி, இடமாற்றம், விடுமுறை அளிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அவர்கள், பணிபுரியும் அலுவலகங்களின் அருகாமையில், தங்கும் இட வசதிகளை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to

No comments:

Post a Comment