FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, December 31, 2014

Monday, December 29, 2014

BHRC orders Rs 1 lakh compensation for deaf, dumb rape victim | Business Standard News

Virender Singh aka Googna Pehelwan

Wrestler Virender Singh is India’s most successful deaf athlete. Mission Rio16 aims to help Virender in his quest to reach the Rio Olympics 2016. Mission Rio16 is an attempt by the filmmakers of Goonga Pehelwan to help fulfill, for a differently abled athlete, what is considered to be every athlete’s greatest dream.

அரசு வேலை வாய்ப்பில் அதிக ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை

29.12.2014, தஞ்சாவூர்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனுடையோர் தினவிழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி மலர் வாலண்டினா தலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் மாரிசாமி, செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஊனத்தின், 60 சதவீதத்தில் உள்ள அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளங்கள் மற்றும் கழிவறைகள் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாட்கோ மானியம் பெற காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பில், 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். கம்ப்யூட்டர் முதுகலை, இளங்கலை ஆகியவை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, உடனுக்குடன் பணிவரன்முறை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் செய்யும் வணிக தொழில்களுக்கும், சிறு வணிக தொழில்களுக்கும் வீட்டு உபயோக மின் கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருக்கும் தமிழக அரசு பிரையில் அச்சகம் மீண்டும் செயல்பட வேண்டும். பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரையில் பாடப்புத்தகங்கள் அச்சடித்து இலவசமாக வழங்க வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஹாஜாமொய்தீன், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க வக்கீல் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2014
இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன் வரவேற்றார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருக்கும் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இலவசக் கல்வி பெற்றிடவும், அரசுப் பணிகளுக்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வட்டியில்லா கடனுதவியும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி உயர்வு வழங்கிடவும், உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், இதர அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்திடவும் வேண்டும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்புச் சலுகை 5 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக உயர்த்திடவும் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

நூறு சதவீதம் உடல்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மனைவி, குழந்தைகளில் ஒருவருக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானவரி, தொழில்வரி, சேவைவரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Sunday, December 28, 2014

மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு தொடக்கம்

27.12.2014
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஷம் என்ற பெயரில் தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்திட பயிற்சிகள், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான உதவிகள், பொருளாதாரத்தை மேம்படுத்திட தொழிற் பயிற்சி, கடனுதவி பெற்றுத் தருதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்சார்பில், சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு காமாட்சியம்மன் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இதில், மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார் கொடியேற்றினார். ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலர் பி.கண்ணன், ஒருங்கிணைப்பாளர் கே.மாரிமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த பேரணி காமாட்சியம்மன் மண்டபத்தைச் சென்றடைந்தது. ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர். 28) இம்மாநாடு நிறைவடைய உள்ளது.

Tuesday, December 23, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வாய்ப்புகள்

மும்பையைச் சேர்ந்த ஈரோஏபிள் கால்சென்டரில் ஏஜெண்டாகப் பணியாற்றும் வீரேந்திர சிங்கைப் பொறுத்தவரை தாறுமாறாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் தேர்ந்தவர். எப்போதும் தொலைபேசியில் கடுமையாகப் பேசும் ஒரு வாடிக்கையாளர் ஒருநாள் வீரேந்திர் சிங்கை நேரில் வந்து சந்தித்து ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து அதிர்ச்சியை அளித்தார்.

“எங்களிடம் வாங்கிய தயாரிப்புக்குச் சரியான காலத்தில் நாங்கள் சர்வீஸ் செய்யாமல் போனதால் கடுப்பான வாடிக்கையாளர் இவர்” என்கிறார் இந்த கால்சென்டரின் சிஇஓ-வான மார்சின் ஷ்ராஃப். யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கால்சென்டர் சேவை நிறுவனம்தான் ஈரோஏபிள்.

சிங்கின் அமைதியான நடத்தையும் தொழில்நுட்பரீதியான அறிவும் கடுப்பில் இருந்த வாடிக்கையாளரை மிகவும் ஈர்த்துவிட்டது. சிங்கை அவர் நேரில் சந்திக்க வந்தபோதுதான் அவர் மாற்றுத் திறனாளி என்பதை அந்த வாடிக்கையாளர் அறிந்துகொண்டார்.

உற்பத்தி ஆற்றல் அதிகம்

சிங் மற்றும் அவரைப் போன்ற நூற்றுக் கணக்கான மாற்றுத்திறனாளிகளைத்தான் கால்சென்டர் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த மிகவும் விரும்புகின்றன. வேலையிலிருந்து விலகிச்செல்லும் சதவீதம் மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

“ மற்றவர்களைவிட இவர்களிடம் வேலைசார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அதிகமாக இருக்கிறது” என்கிறார் இஎக்செல் சர்வீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஸ்ருதி ஜெயின். டெல்லியில் இயங்கும் இவரது நிறுவனத்தில் 110 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர்.

இன்னும் தேவை

டெல்லி பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேலும் மாற்றுத் திறனாளிகளைப் பணிக்கு அமர்த்த இவர்கள் முடிவெடுத்துள்ளனர். கொடுக்கல்-வாங்கல் தொடர்புடைய ஆவணப்பணிகள் மற்றும் குறியீட்டெண் பணிகளுக்காக அவர்களைப் பணிக்கு அமர்த்த உள்ளனர்.

எஸ்ஸார் நிறுவனத்தின் கிளையான ஏஜிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எஸ்எம் குப்தா, ” எங்களது பணி சார்ந்த அதிக அழுத்தம் காரணமாக சாதாரணமாக வேலையிலிருந்து விலகிப் போவோரின் சதவீதம் 40 முதல் 60 வரை இருக்கும். ஆனால், மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவான சதவீதத்திலேயே வெளியேற்றம் உள்ளது” என்கிறார்.

ஏஜிஸ் நிறுவனத்தில் தற்போது 500 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர். உலகளவில் ஏஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 1.75 சதவீதம் பேர் இந்த நிதி ஆண்டின் முடிவில் மாற்றுத் திறனாளிகளாக இருப்பார்கள்.

குறைந்த வீதத்தில் வெளியேற்றம்


ஈரோஏபிள் கால்சென்டர்தான் இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளை முழுவதுமாகக் கொண்ட நிறுவனமாக உள்ளது. இங்கே பணியாளர்கள் வெளியேறும் வீதம் 3 சதவீதமாக உள்ளது.

இந்த முயற்சியின் வெற்றியால் 90 பேரைப் பணியாளர்களாகக் கொண்ட ஈரோஏபிள் நிறுவனம் மேலும் இரண்டு நகரங்களுக்குத் தனது கிளைகளை விரிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது.

இதைப் போன்ற அலுவலகங்களில் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான சிறப்புத் தேவைகள் குறித்தும் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் போய்வருவதற்கான உள்கட்டுமானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்ளாத வண்ணம் மனிதவளக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. லிப்டுகளில் செல்ல சிறப்புப் பிடிப்பான் வசதிகள், வாஷ் ரூம் அருகிலேயே பணி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறுகிறார் குப்தா.

தமிழில்: ஷங்கர்
பிஸ்னஸ்லைன், டிசம்பர் 16

Sunday, December 21, 2014

ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் வழங்கினார்கள்

 
21.12.2014,
ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர். அமைச்சர் வழங்கினார்கள் உடன் கல்லூரி முதல்வர் பொன். பாஸ்கர்.

அரக்கோணம் அருகே DEAF மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

அரக்கோணம், டிச.15– அரக்கோணம் அருகே வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். அவர் கடந்த 11–ந் தேதி மூதூர் அருகே குட்டைமேடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு பம்ப் செட்டில் ஒதுங்கி நின்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அரி (எ) அரிகிருஷ்ணனும் (29) மழைக்கு ஒதுங்கி உள்ளார்.

அப்போது அரி, செல்வியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து செல்வி தப்பி வரும் போது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செல்வி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.துரைபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் நாகூரான் ஆகியோர் வழக்குப்பதிவு செய்த, அரியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wednesday, December 17, 2014

DU training nurses on use of sign language in hospitals

14.12.2014, New Delhi: Delhi University is providing sign language training to nursing staff in hospitals across the national capital to help them deal with hearing impaired patients.

“The use of sign language is minimal in our country and a survey done by DU students had revealed that even visually impaired people are not aware of the proper technical language in place. They just develop their own signs for communicating according to their convenience,” Hina Nandrajog, Associate Professor at DU’s Cluster Innovation Centre (CIC) told PTI.

Nandrajog, along with a team of six DU students, is working on the project in which training sessions are being conducted for nursing staff to give them basic knowledge of the sign language and how it can help in dealing with hearing impaired patients.

“It is very important for the medical staff to have the knowledge of sign language as the patients might not be able to explain themselves or about the problem they are facing. It will help in better diagnosis,” she said. “Deaf patients have to attend consultation with no communication support and rely on written notes or they have to be accompanied by someone to act as an interpretor,” she added.

The training-cum-counselling programme, which began last fortnight, has so far been conducted at Hindu Rao and Kasturba hospitals.

“We have written to AIIMS and GTB hospital for the next session. Other hospitals are also being lined up. We have also compiled a hospital-specific vocabulary for training purpose,” Nandrajog said.

In the first phase of the project, DU had trained over 2,000 police personnel in order to sensitise them about the problems faced by deaf in communicating with police. The workshops were conducted in collaboration with the National Association of Deaf (NAD) and Noida Deaf Society (NDS).

“After the 10-hour module training sessions conducted at police training schools at Wazirabad and Jharoda Kalan, DCP (Police Training) Robin Hibu decided to make basic course in Indian sign language compulsory part of police training,” Nandrajog said.

“DU has prepared a curriculum to be recommended to the police training wing, which will be further vetted by professionals before being formally included in the training programme,” she said.

“We will be making recommendations to the Medical Council of India (MCI) too for including training of sign language in the training programme for medical professionals,” she said. The varsity has its plan chalked out for the next phase as well.

Each phase is conducted by a different team. “We will be compiling a handbook for teaching and practice of basic crime-related sign language for redressal of grievances of deaf people.

A police team also collaborated in suggesting us the contents and suitable vocabulary,” Nandrajog said, adding, “once ready, the handbook will be placed in all police stations for ready reference.

A handbook for hospitals will follow in the same manner.”

Similarly, a list is being compiled of the sign language interpretors available in Delhi and across the country, whose services can be availed in police stations and hospitals when required, she said.

India TV news

State-level cricket tournament for deaf and dumb

17.12.2014, 
The Rotary Club of Bijapur Heritage to organise fourth state-level cricket tournament for deaf and dumb in Vijayapura for the first time between December 19 and 21 at Ambedkar stadium and KCP science college ground.

Informing media at a press conference here on Wednesday, President of the club, S. B. Patil said that the club wishes to encourage even the deaf and dumb people to participate in sports activities such as cricket.

He said that some 20 teams and nearly 300 players of various districts of the State were expected to participate in the tournament.

The players would be provided food and accommodation facility, the winners would be given prize money of Rs. 12,000 while the runners-up would get Rs. 6,000.

Mr. Patil said that the club had been providing aids to the disabled people for years, and said that this year, they had distributed some 10 tricycle to physically challenged people. D. Randeep, Deputy Commissioner to inaugurate the event, he said.

Saturday, December 13, 2014

விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் மாற்று திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

13.12.2014, திருச்சி: 
கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற லாம் என மாற்று திறனாளி கள் தினவிழாவில் கலெக் டர் பேசினார்.
திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினவிழா வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் கலெக்டர் பேசு கையில், மாற்று திறனாளி குழந்தைகளின் திறமை களை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தவும் இவ் விழா நடத்தப்படுகிறது. மாற்று திறனாளிகளின் திற மையை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு திறன் குறைந்திருந்தாலும், மாற்றுதிறன்கள் அதிகமாக இருக் கும்.
எவ்வித தாழ்வு மனப்பான்மை இல்லாமல் நம் மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும். எள் அளவு கூட தாழ்வு மனப்பான்மை இல் லாமல் கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுதிறனாளிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னதாக மாநில அள வில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர் ந்து சிறப்பு பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட மாற்று திறனாளி கள் நலஅலுவலர் சாமிநா தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் முன்பதிவில் முன்னுரிமை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு


13.12.2014,
மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண முன்பதிவை ஆன்லைனில் செய்வதற்கான சிறப்பு வசதியை ரயில்வே அறிவித்துள்ளது. உடல் ஊனம், செவித் திறன் குறைபாடு, பேச்சுக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியைப் பெறலாம் என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்றுத் திறனாளிக்கான அசல் மருத்துவச் சான்றிதழுடன் இரண்டு புகைப்படங்கள், அடையாள அட்டை நகல், பிறந்த தேதிக்கான ஆதார நகல் ஆகியவற்றை மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் அளித்து பதிவு செய்து கொள்ளலாம். ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியுள்ள நபர்களுக்கு ரயில்வேயின் அடையாள அட்டை அளிக்கப்படும். அதன் எண்ணைக் குறிப்பிட்டு ஆன்லைன் முன்பதிவில் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை பெறலாம் என ரயில்வே அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

13.12.2014, ஊட்டி:
"தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால், ஊனம் ஒரு குறையல்ல' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:மாற்றுத் திறனாளிகள், உடலில் ஊனமிருந்தாலும், மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 60 தையல் இயந்திரம், 30 பிரெய்லி, 18 காதொலி கருவிகள் வழங்கப்பட உள்ளன. கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றிய, 1,789 பேருக்கு, அரசு பராமரிப்புத் தொகையாக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 29 பேருக்கு, திருமண உதவித் தொகை, 34 பேருக்கு வேலை வாய்ப்பிற்கான வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

பின், 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், 4,000 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு தையல் இயந்திரம், 250 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற காது கேளாத மாணவிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 4,500 ரூபாய் மதிப்பில் இரண்டு பேருக்கு சக்கர நாற்காலி என, மொத்தம் 44 பயனாளிகளுக்கு, 7 லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், "தாட்கோ' தலைவர் கலைச்செல்வன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

அரசு காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை மரிய பாஸ்கா நன்றி கூறினார்.


Tuesday, December 9, 2014

மேட்டுப்பாளையத்தில் DEAF மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை: நீதிபதி நேரில் விசாரணை




09.12.2014, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாற்றுத் திறனாளி மாணவி பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிபதி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியில் பயின்று வந்த வாய் பேச இயலாத 17 வயது மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் பள்ளி ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அப்பள்ளி கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட அப்பள்ளியில் இருந்த 30க்கும் அதிகமானோர் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் விடப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் நீதிபதி சுப்பிரமணியம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சைகை மூலம் தெரிவித்த கருத்துக்களை அரசு வாய் மற்றும் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் நீதிபதியிடம் விளக்க, அவர் பதிவு செய்து கொண்டார்.

12ல் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

09.12.2014, கோவை:
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி போட்டியில் ரூ.70, ரூ.50, ரூ.30 ரொக்கத் தொகை பரிசை கண்டித்து டிச.12ம் தேதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி 2014-15ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட அளவிலான மாற்றுத்திற னாளி விளையாட்டு போட் டிகள் வரும் 12ம் தேதி பெரிநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலாயா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதில் ஆண்கள், பெண்களுக்கென 50மீ, 100மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண் டுதல், மினி கூடை ப்பந்து எறிதல், 100மீ சக்கர நாற்காலி ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் டென்னிஸ்பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டி நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 70 ரூபாயும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு 50 ரூபாயும், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு 30 ரூபாயும் வழங்கப்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்ததுள்ளது.
இந்த பரிசுத்தொகை அறிவிப்பிற்கு கோவையில் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடத்தப்படும் நாளன்று போட்டி நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலை வர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின் படி 1.14 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டு போட்டி வரும் 12ம் தேதி கோவையில் நடக்கிறது என விளையா ட்டு ஆணையம் (கோவை மண் டலம்) தெரிவித்துள் ளது. போட்டியில்முதலிடம் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.70, ரூ.50, ரூ.30 எனும் பரிசுத் தொகை அறிவித்தது மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.
இந்தப் பரிசு வழங்குவதற்கு பதிலாக போட்டியே நடத்தாமல் இருக்கலாம். மேலும் 12ம் தேதி போட்டி நடக்கும் இடத்தில் கேலிபர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும்.

Thursday, December 4, 2014

தமிழகத்தில் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்

 04.12.2014, திருச்சி:
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், புனித ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாற்றுத் திறனாளிகள் விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஆண்டுதோறும் டிசம்பர், 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், கலெக்டர் ஜெயஸ்ரீ, மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, மகளிர் திட்ட அலுவலர் கோமகன், மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தர்மபுரி: மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, நல்லம்பள்ளி வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் தலைமை வகித்தார். ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து தலைவர் சரவணன் முன்னிலை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். கூடுதல் சி.இ.ஓ., சீமான், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தவளை ஓட்டம், ஓட்டப்பந்தயம், பலூன் ஊதி வெடித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. மேலும், 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதியமான்கோட்டையில் உள்ள அதியமான்கோட்டத்திற்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


ஓசூர்: ஓசூரில், உலக மாற்றுத்திறனாளி தின விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., பொன்குமார் உத்தரவுபடி, ஓசூர் வட்டார வள மையம் சார்பில், கடந்த, 1ம் தேதி முதல், மூன்று நாட்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரம் நடும் விழா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடந்தது. மரம் நடும் விழாவை, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் துவங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவர்கள், 50 பேர், கே.ஆர்.பி., அணை மற்றும் கிருஷ்ணகிரி சிறுவர் பூங்காவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முனிரெட்டி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ஜெயபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்து
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கு முன்னெடுக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் நிறைய உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையை அறிய முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அவர்களின் நலனை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 9 அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிக்கை



போக்குவரத்து துறை - மோட்டார் வாகனம் - மாற்றுத்திறனாளிளுக்கான வாகனம் (Alteration) நடவடிக்கை எடுத்தல்

 

Monday, December 1, 2014

காது, வாய்பேசாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

Friday, 28 November, 2014 03:20 PM
சென்னை, நவ.28: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 4 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

ஆயிரம்விளக்கு தொகுதி, 113-வது வார்டுக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் காது, வாய்பேசாதோர் பள்ளி, வித்யோதயா பள்ளி, கர்நாடக சங்கம் பள்ளி, எம்.சி.எம். பள்ளி உள்ளிட்ட 4 பள்ளியை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் வார்டு கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் முன்னிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்சி, கவுன்சிலர்கள் எஸ்.சக்தி, யு.கற்பகம், டி. சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், நிர்வாகிகள் வழக்கறிஞர் சதாசிவம், கேபிள் டிவி மாரி, பன்னீர்செல்வம், வில்லியம்ஸ், சாலை முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.