FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, December 23, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வாய்ப்புகள்

மும்பையைச் சேர்ந்த ஈரோஏபிள் கால்சென்டரில் ஏஜெண்டாகப் பணியாற்றும் வீரேந்திர சிங்கைப் பொறுத்தவரை தாறுமாறாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் தேர்ந்தவர். எப்போதும் தொலைபேசியில் கடுமையாகப் பேசும் ஒரு வாடிக்கையாளர் ஒருநாள் வீரேந்திர் சிங்கை நேரில் வந்து சந்தித்து ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து அதிர்ச்சியை அளித்தார்.

“எங்களிடம் வாங்கிய தயாரிப்புக்குச் சரியான காலத்தில் நாங்கள் சர்வீஸ் செய்யாமல் போனதால் கடுப்பான வாடிக்கையாளர் இவர்” என்கிறார் இந்த கால்சென்டரின் சிஇஓ-வான மார்சின் ஷ்ராஃப். யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கால்சென்டர் சேவை நிறுவனம்தான் ஈரோஏபிள்.

சிங்கின் அமைதியான நடத்தையும் தொழில்நுட்பரீதியான அறிவும் கடுப்பில் இருந்த வாடிக்கையாளரை மிகவும் ஈர்த்துவிட்டது. சிங்கை அவர் நேரில் சந்திக்க வந்தபோதுதான் அவர் மாற்றுத் திறனாளி என்பதை அந்த வாடிக்கையாளர் அறிந்துகொண்டார்.

உற்பத்தி ஆற்றல் அதிகம்

சிங் மற்றும் அவரைப் போன்ற நூற்றுக் கணக்கான மாற்றுத்திறனாளிகளைத்தான் கால்சென்டர் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த மிகவும் விரும்புகின்றன. வேலையிலிருந்து விலகிச்செல்லும் சதவீதம் மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

“ மற்றவர்களைவிட இவர்களிடம் வேலைசார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அதிகமாக இருக்கிறது” என்கிறார் இஎக்செல் சர்வீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஸ்ருதி ஜெயின். டெல்லியில் இயங்கும் இவரது நிறுவனத்தில் 110 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர்.

இன்னும் தேவை

டெல்லி பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேலும் மாற்றுத் திறனாளிகளைப் பணிக்கு அமர்த்த இவர்கள் முடிவெடுத்துள்ளனர். கொடுக்கல்-வாங்கல் தொடர்புடைய ஆவணப்பணிகள் மற்றும் குறியீட்டெண் பணிகளுக்காக அவர்களைப் பணிக்கு அமர்த்த உள்ளனர்.

எஸ்ஸார் நிறுவனத்தின் கிளையான ஏஜிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எஸ்எம் குப்தா, ” எங்களது பணி சார்ந்த அதிக அழுத்தம் காரணமாக சாதாரணமாக வேலையிலிருந்து விலகிப் போவோரின் சதவீதம் 40 முதல் 60 வரை இருக்கும். ஆனால், மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவான சதவீதத்திலேயே வெளியேற்றம் உள்ளது” என்கிறார்.

ஏஜிஸ் நிறுவனத்தில் தற்போது 500 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர். உலகளவில் ஏஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 1.75 சதவீதம் பேர் இந்த நிதி ஆண்டின் முடிவில் மாற்றுத் திறனாளிகளாக இருப்பார்கள்.

குறைந்த வீதத்தில் வெளியேற்றம்


ஈரோஏபிள் கால்சென்டர்தான் இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளை முழுவதுமாகக் கொண்ட நிறுவனமாக உள்ளது. இங்கே பணியாளர்கள் வெளியேறும் வீதம் 3 சதவீதமாக உள்ளது.

இந்த முயற்சியின் வெற்றியால் 90 பேரைப் பணியாளர்களாகக் கொண்ட ஈரோஏபிள் நிறுவனம் மேலும் இரண்டு நகரங்களுக்குத் தனது கிளைகளை விரிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது.

இதைப் போன்ற அலுவலகங்களில் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான சிறப்புத் தேவைகள் குறித்தும் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் போய்வருவதற்கான உள்கட்டுமானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்ளாத வண்ணம் மனிதவளக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. லிப்டுகளில் செல்ல சிறப்புப் பிடிப்பான் வசதிகள், வாஷ் ரூம் அருகிலேயே பணி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறுகிறார் குப்தா.

தமிழில்: ஷங்கர்
பிஸ்னஸ்லைன், டிசம்பர் 16

No comments:

Post a Comment