FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, December 23, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வாய்ப்புகள்

மும்பையைச் சேர்ந்த ஈரோஏபிள் கால்சென்டரில் ஏஜெண்டாகப் பணியாற்றும் வீரேந்திர சிங்கைப் பொறுத்தவரை தாறுமாறாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் தேர்ந்தவர். எப்போதும் தொலைபேசியில் கடுமையாகப் பேசும் ஒரு வாடிக்கையாளர் ஒருநாள் வீரேந்திர் சிங்கை நேரில் வந்து சந்தித்து ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து அதிர்ச்சியை அளித்தார்.

“எங்களிடம் வாங்கிய தயாரிப்புக்குச் சரியான காலத்தில் நாங்கள் சர்வீஸ் செய்யாமல் போனதால் கடுப்பான வாடிக்கையாளர் இவர்” என்கிறார் இந்த கால்சென்டரின் சிஇஓ-வான மார்சின் ஷ்ராஃப். யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கால்சென்டர் சேவை நிறுவனம்தான் ஈரோஏபிள்.

சிங்கின் அமைதியான நடத்தையும் தொழில்நுட்பரீதியான அறிவும் கடுப்பில் இருந்த வாடிக்கையாளரை மிகவும் ஈர்த்துவிட்டது. சிங்கை அவர் நேரில் சந்திக்க வந்தபோதுதான் அவர் மாற்றுத் திறனாளி என்பதை அந்த வாடிக்கையாளர் அறிந்துகொண்டார்.

உற்பத்தி ஆற்றல் அதிகம்

சிங் மற்றும் அவரைப் போன்ற நூற்றுக் கணக்கான மாற்றுத்திறனாளிகளைத்தான் கால்சென்டர் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த மிகவும் விரும்புகின்றன. வேலையிலிருந்து விலகிச்செல்லும் சதவீதம் மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

“ மற்றவர்களைவிட இவர்களிடம் வேலைசார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அதிகமாக இருக்கிறது” என்கிறார் இஎக்செல் சர்வீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஸ்ருதி ஜெயின். டெல்லியில் இயங்கும் இவரது நிறுவனத்தில் 110 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர்.

இன்னும் தேவை

டெல்லி பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேலும் மாற்றுத் திறனாளிகளைப் பணிக்கு அமர்த்த இவர்கள் முடிவெடுத்துள்ளனர். கொடுக்கல்-வாங்கல் தொடர்புடைய ஆவணப்பணிகள் மற்றும் குறியீட்டெண் பணிகளுக்காக அவர்களைப் பணிக்கு அமர்த்த உள்ளனர்.

எஸ்ஸார் நிறுவனத்தின் கிளையான ஏஜிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எஸ்எம் குப்தா, ” எங்களது பணி சார்ந்த அதிக அழுத்தம் காரணமாக சாதாரணமாக வேலையிலிருந்து விலகிப் போவோரின் சதவீதம் 40 முதல் 60 வரை இருக்கும். ஆனால், மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவான சதவீதத்திலேயே வெளியேற்றம் உள்ளது” என்கிறார்.

ஏஜிஸ் நிறுவனத்தில் தற்போது 500 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர். உலகளவில் ஏஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 1.75 சதவீதம் பேர் இந்த நிதி ஆண்டின் முடிவில் மாற்றுத் திறனாளிகளாக இருப்பார்கள்.

குறைந்த வீதத்தில் வெளியேற்றம்


ஈரோஏபிள் கால்சென்டர்தான் இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளை முழுவதுமாகக் கொண்ட நிறுவனமாக உள்ளது. இங்கே பணியாளர்கள் வெளியேறும் வீதம் 3 சதவீதமாக உள்ளது.

இந்த முயற்சியின் வெற்றியால் 90 பேரைப் பணியாளர்களாகக் கொண்ட ஈரோஏபிள் நிறுவனம் மேலும் இரண்டு நகரங்களுக்குத் தனது கிளைகளை விரிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது.

இதைப் போன்ற அலுவலகங்களில் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான சிறப்புத் தேவைகள் குறித்தும் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் போய்வருவதற்கான உள்கட்டுமானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்ளாத வண்ணம் மனிதவளக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. லிப்டுகளில் செல்ல சிறப்புப் பிடிப்பான் வசதிகள், வாஷ் ரூம் அருகிலேயே பணி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறுகிறார் குப்தா.

தமிழில்: ஷங்கர்
பிஸ்னஸ்லைன், டிசம்பர் 16

No comments:

Post a Comment