FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, December 13, 2014

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

13.12.2014, ஊட்டி:
"தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால், ஊனம் ஒரு குறையல்ல' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:மாற்றுத் திறனாளிகள், உடலில் ஊனமிருந்தாலும், மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 60 தையல் இயந்திரம், 30 பிரெய்லி, 18 காதொலி கருவிகள் வழங்கப்பட உள்ளன. கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றிய, 1,789 பேருக்கு, அரசு பராமரிப்புத் தொகையாக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 29 பேருக்கு, திருமண உதவித் தொகை, 34 பேருக்கு வேலை வாய்ப்பிற்கான வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

பின், 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், 4,000 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு தையல் இயந்திரம், 250 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற காது கேளாத மாணவிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 4,500 ரூபாய் மதிப்பில் இரண்டு பேருக்கு சக்கர நாற்காலி என, மொத்தம் 44 பயனாளிகளுக்கு, 7 லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், "தாட்கோ' தலைவர் கலைச்செல்வன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

அரசு காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை மரிய பாஸ்கா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment