FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, December 13, 2014

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

13.12.2014, ஊட்டி:
"தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால், ஊனம் ஒரு குறையல்ல' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:மாற்றுத் திறனாளிகள், உடலில் ஊனமிருந்தாலும், மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 60 தையல் இயந்திரம், 30 பிரெய்லி, 18 காதொலி கருவிகள் வழங்கப்பட உள்ளன. கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றிய, 1,789 பேருக்கு, அரசு பராமரிப்புத் தொகையாக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 29 பேருக்கு, திருமண உதவித் தொகை, 34 பேருக்கு வேலை வாய்ப்பிற்கான வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

பின், 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், 4,000 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு தையல் இயந்திரம், 250 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற காது கேளாத மாணவிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 4,500 ரூபாய் மதிப்பில் இரண்டு பேருக்கு சக்கர நாற்காலி என, மொத்தம் 44 பயனாளிகளுக்கு, 7 லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், "தாட்கோ' தலைவர் கலைச்செல்வன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

அரசு காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை மரிய பாஸ்கா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment