FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, December 13, 2014

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

13.12.2014, ஊட்டி:
"தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால், ஊனம் ஒரு குறையல்ல' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:மாற்றுத் திறனாளிகள், உடலில் ஊனமிருந்தாலும், மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 60 தையல் இயந்திரம், 30 பிரெய்லி, 18 காதொலி கருவிகள் வழங்கப்பட உள்ளன. கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றிய, 1,789 பேருக்கு, அரசு பராமரிப்புத் தொகையாக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 29 பேருக்கு, திருமண உதவித் தொகை, 34 பேருக்கு வேலை வாய்ப்பிற்கான வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

பின், 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், 4,000 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு தையல் இயந்திரம், 250 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற காது கேளாத மாணவிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 4,500 ரூபாய் மதிப்பில் இரண்டு பேருக்கு சக்கர நாற்காலி என, மொத்தம் 44 பயனாளிகளுக்கு, 7 லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், "தாட்கோ' தலைவர் கலைச்செல்வன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

அரசு காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை மரிய பாஸ்கா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment