FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, December 13, 2014

விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் மாற்று திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

13.12.2014, திருச்சி: 
கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற லாம் என மாற்று திறனாளி கள் தினவிழாவில் கலெக் டர் பேசினார்.
திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினவிழா வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் கலெக்டர் பேசு கையில், மாற்று திறனாளி குழந்தைகளின் திறமை களை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தவும் இவ் விழா நடத்தப்படுகிறது. மாற்று திறனாளிகளின் திற மையை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு திறன் குறைந்திருந்தாலும், மாற்றுதிறன்கள் அதிகமாக இருக் கும்.
எவ்வித தாழ்வு மனப்பான்மை இல்லாமல் நம் மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும். எள் அளவு கூட தாழ்வு மனப்பான்மை இல் லாமல் கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுதிறனாளிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னதாக மாநில அள வில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர் ந்து சிறப்பு பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட மாற்று திறனாளி கள் நலஅலுவலர் சாமிநா தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment