FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, December 13, 2014

விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் மாற்று திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

13.12.2014, திருச்சி: 
கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற லாம் என மாற்று திறனாளி கள் தினவிழாவில் கலெக் டர் பேசினார்.
திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினவிழா வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் கலெக்டர் பேசு கையில், மாற்று திறனாளி குழந்தைகளின் திறமை களை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தவும் இவ் விழா நடத்தப்படுகிறது. மாற்று திறனாளிகளின் திற மையை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு திறன் குறைந்திருந்தாலும், மாற்றுதிறன்கள் அதிகமாக இருக் கும்.
எவ்வித தாழ்வு மனப்பான்மை இல்லாமல் நம் மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும். எள் அளவு கூட தாழ்வு மனப்பான்மை இல் லாமல் கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுதிறனாளிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னதாக மாநில அள வில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர் ந்து சிறப்பு பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட மாற்று திறனாளி கள் நலஅலுவலர் சாமிநா தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment