FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, December 13, 2014

விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் மாற்று திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

13.12.2014, திருச்சி: 
கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற லாம் என மாற்று திறனாளி கள் தினவிழாவில் கலெக் டர் பேசினார்.
திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினவிழா வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் கலெக்டர் பேசு கையில், மாற்று திறனாளி குழந்தைகளின் திறமை களை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தவும் இவ் விழா நடத்தப்படுகிறது. மாற்று திறனாளிகளின் திற மையை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு திறன் குறைந்திருந்தாலும், மாற்றுதிறன்கள் அதிகமாக இருக் கும்.
எவ்வித தாழ்வு மனப்பான்மை இல்லாமல் நம் மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும். எள் அளவு கூட தாழ்வு மனப்பான்மை இல் லாமல் கடின உழைப்பு, விடா முயற்சி, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுதிறனாளிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னதாக மாநில அள வில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர் ந்து சிறப்பு பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட மாற்று திறனாளி கள் நலஅலுவலர் சாமிநா தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment