FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 29, 2014

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2014
இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன் வரவேற்றார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருக்கும் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இலவசக் கல்வி பெற்றிடவும், அரசுப் பணிகளுக்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வட்டியில்லா கடனுதவியும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி உயர்வு வழங்கிடவும், உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், இதர அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்திடவும் வேண்டும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்புச் சலுகை 5 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக உயர்த்திடவும் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

நூறு சதவீதம் உடல்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மனைவி, குழந்தைகளில் ஒருவருக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானவரி, தொழில்வரி, சேவைவரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment