FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, December 29, 2014

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2014
இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன் வரவேற்றார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருக்கும் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இலவசக் கல்வி பெற்றிடவும், அரசுப் பணிகளுக்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வட்டியில்லா கடனுதவியும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி உயர்வு வழங்கிடவும், உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், இதர அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்திடவும் வேண்டும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்புச் சலுகை 5 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக உயர்த்திடவும் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

நூறு சதவீதம் உடல்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மனைவி, குழந்தைகளில் ஒருவருக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானவரி, தொழில்வரி, சேவைவரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment