FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, December 13, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் முன்பதிவில் முன்னுரிமை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு


13.12.2014,
மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண முன்பதிவை ஆன்லைனில் செய்வதற்கான சிறப்பு வசதியை ரயில்வே அறிவித்துள்ளது. உடல் ஊனம், செவித் திறன் குறைபாடு, பேச்சுக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியைப் பெறலாம் என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்றுத் திறனாளிக்கான அசல் மருத்துவச் சான்றிதழுடன் இரண்டு புகைப்படங்கள், அடையாள அட்டை நகல், பிறந்த தேதிக்கான ஆதார நகல் ஆகியவற்றை மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் அளித்து பதிவு செய்து கொள்ளலாம். ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியுள்ள நபர்களுக்கு ரயில்வேயின் அடையாள அட்டை அளிக்கப்படும். அதன் எண்ணைக் குறிப்பிட்டு ஆன்லைன் முன்பதிவில் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை பெறலாம் என ரயில்வே அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment