FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, December 4, 2014

தமிழகத்தில் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்

 04.12.2014, திருச்சி:
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், புனித ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாற்றுத் திறனாளிகள் விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஆண்டுதோறும் டிசம்பர், 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், கலெக்டர் ஜெயஸ்ரீ, மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, மகளிர் திட்ட அலுவலர் கோமகன், மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தர்மபுரி: மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, நல்லம்பள்ளி வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் தலைமை வகித்தார். ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து தலைவர் சரவணன் முன்னிலை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். கூடுதல் சி.இ.ஓ., சீமான், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தவளை ஓட்டம், ஓட்டப்பந்தயம், பலூன் ஊதி வெடித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. மேலும், 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதியமான்கோட்டையில் உள்ள அதியமான்கோட்டத்திற்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


ஓசூர்: ஓசூரில், உலக மாற்றுத்திறனாளி தின விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., பொன்குமார் உத்தரவுபடி, ஓசூர் வட்டார வள மையம் சார்பில், கடந்த, 1ம் தேதி முதல், மூன்று நாட்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரம் நடும் விழா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடந்தது. மரம் நடும் விழாவை, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் துவங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவர்கள், 50 பேர், கே.ஆர்.பி., அணை மற்றும் கிருஷ்ணகிரி சிறுவர் பூங்காவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முனிரெட்டி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ஜெயபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்து
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கு முன்னெடுக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் நிறைய உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையை அறிய முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அவர்களின் நலனை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment