FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, December 1, 2014

காது, வாய்பேசாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

Friday, 28 November, 2014 03:20 PM
சென்னை, நவ.28: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 4 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

ஆயிரம்விளக்கு தொகுதி, 113-வது வார்டுக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் காது, வாய்பேசாதோர் பள்ளி, வித்யோதயா பள்ளி, கர்நாடக சங்கம் பள்ளி, எம்.சி.எம். பள்ளி உள்ளிட்ட 4 பள்ளியை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் வார்டு கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் முன்னிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்சி, கவுன்சிலர்கள் எஸ்.சக்தி, யு.கற்பகம், டி. சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், நிர்வாகிகள் வழக்கறிஞர் சதாசிவம், கேபிள் டிவி மாரி, பன்னீர்செல்வம், வில்லியம்ஸ், சாலை முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment