FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, December 1, 2014

காது, வாய்பேசாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

Friday, 28 November, 2014 03:20 PM
சென்னை, நவ.28: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 4 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

ஆயிரம்விளக்கு தொகுதி, 113-வது வார்டுக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் காது, வாய்பேசாதோர் பள்ளி, வித்யோதயா பள்ளி, கர்நாடக சங்கம் பள்ளி, எம்.சி.எம். பள்ளி உள்ளிட்ட 4 பள்ளியை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் வார்டு கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் முன்னிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்சி, கவுன்சிலர்கள் எஸ்.சக்தி, யு.கற்பகம், டி. சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், நிர்வாகிகள் வழக்கறிஞர் சதாசிவம், கேபிள் டிவி மாரி, பன்னீர்செல்வம், வில்லியம்ஸ், சாலை முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment