FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 1, 2014

காது, வாய்பேசாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

Friday, 28 November, 2014 03:20 PM
சென்னை, நவ.28: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 4 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

ஆயிரம்விளக்கு தொகுதி, 113-வது வார்டுக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் காது, வாய்பேசாதோர் பள்ளி, வித்யோதயா பள்ளி, கர்நாடக சங்கம் பள்ளி, எம்.சி.எம். பள்ளி உள்ளிட்ட 4 பள்ளியை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் வார்டு கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் முன்னிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்சி, கவுன்சிலர்கள் எஸ்.சக்தி, யு.கற்பகம், டி. சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், நிர்வாகிகள் வழக்கறிஞர் சதாசிவம், கேபிள் டிவி மாரி, பன்னீர்செல்வம், வில்லியம்ஸ், சாலை முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment