FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, December 28, 2014

மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு தொடக்கம்

27.12.2014
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஷம் என்ற பெயரில் தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்திட பயிற்சிகள், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான உதவிகள், பொருளாதாரத்தை மேம்படுத்திட தொழிற் பயிற்சி, கடனுதவி பெற்றுத் தருதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்சார்பில், சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு காமாட்சியம்மன் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இதில், மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார் கொடியேற்றினார். ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலர் பி.கண்ணன், ஒருங்கிணைப்பாளர் கே.மாரிமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த பேரணி காமாட்சியம்மன் மண்டபத்தைச் சென்றடைந்தது. ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர். 28) இம்மாநாடு நிறைவடைய உள்ளது.

No comments:

Post a Comment