FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, December 28, 2014

மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு தொடக்கம்

27.12.2014
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஷம் என்ற பெயரில் தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்திட பயிற்சிகள், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான உதவிகள், பொருளாதாரத்தை மேம்படுத்திட தொழிற் பயிற்சி, கடனுதவி பெற்றுத் தருதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்சார்பில், சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு காமாட்சியம்மன் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இதில், மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார் கொடியேற்றினார். ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலர் பி.கண்ணன், ஒருங்கிணைப்பாளர் கே.மாரிமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த பேரணி காமாட்சியம்மன் மண்டபத்தைச் சென்றடைந்தது. ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர். 28) இம்மாநாடு நிறைவடைய உள்ளது.

No comments:

Post a Comment