FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 29, 2014

அரசு வேலை வாய்ப்பில் அதிக ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை

29.12.2014, தஞ்சாவூர்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனுடையோர் தினவிழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி மலர் வாலண்டினா தலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் மாரிசாமி, செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஊனத்தின், 60 சதவீதத்தில் உள்ள அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளங்கள் மற்றும் கழிவறைகள் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாட்கோ மானியம் பெற காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பில், 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். கம்ப்யூட்டர் முதுகலை, இளங்கலை ஆகியவை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, உடனுக்குடன் பணிவரன்முறை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் செய்யும் வணிக தொழில்களுக்கும், சிறு வணிக தொழில்களுக்கும் வீட்டு உபயோக மின் கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருக்கும் தமிழக அரசு பிரையில் அச்சகம் மீண்டும் செயல்பட வேண்டும். பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரையில் பாடப்புத்தகங்கள் அச்சடித்து இலவசமாக வழங்க வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஹாஜாமொய்தீன், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க வக்கீல் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment