FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 29, 2014

அரசு வேலை வாய்ப்பில் அதிக ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை

29.12.2014, தஞ்சாவூர்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனுடையோர் தினவிழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி மலர் வாலண்டினா தலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் மாரிசாமி, செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஊனத்தின், 60 சதவீதத்தில் உள்ள அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளங்கள் மற்றும் கழிவறைகள் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாட்கோ மானியம் பெற காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பில், 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். கம்ப்யூட்டர் முதுகலை, இளங்கலை ஆகியவை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, உடனுக்குடன் பணிவரன்முறை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் செய்யும் வணிக தொழில்களுக்கும், சிறு வணிக தொழில்களுக்கும் வீட்டு உபயோக மின் கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருக்கும் தமிழக அரசு பிரையில் அச்சகம் மீண்டும் செயல்பட வேண்டும். பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரையில் பாடப்புத்தகங்கள் அச்சடித்து இலவசமாக வழங்க வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஹாஜாமொய்தீன், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க வக்கீல் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment