FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, December 29, 2014

அரசு வேலை வாய்ப்பில் அதிக ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை

29.12.2014, தஞ்சாவூர்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனுடையோர் தினவிழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி மலர் வாலண்டினா தலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் மாரிசாமி, செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஊனத்தின், 60 சதவீதத்தில் உள்ள அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளங்கள் மற்றும் கழிவறைகள் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாட்கோ மானியம் பெற காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பில், 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். கம்ப்யூட்டர் முதுகலை, இளங்கலை ஆகியவை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, உடனுக்குடன் பணிவரன்முறை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் செய்யும் வணிக தொழில்களுக்கும், சிறு வணிக தொழில்களுக்கும் வீட்டு உபயோக மின் கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருக்கும் தமிழக அரசு பிரையில் அச்சகம் மீண்டும் செயல்பட வேண்டும். பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரையில் பாடப்புத்தகங்கள் அச்சடித்து இலவசமாக வழங்க வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஹாஜாமொய்தீன், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க வக்கீல் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment