FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, December 9, 2014

12ல் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

09.12.2014, கோவை:
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி போட்டியில் ரூ.70, ரூ.50, ரூ.30 ரொக்கத் தொகை பரிசை கண்டித்து டிச.12ம் தேதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி 2014-15ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட அளவிலான மாற்றுத்திற னாளி விளையாட்டு போட் டிகள் வரும் 12ம் தேதி பெரிநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலாயா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதில் ஆண்கள், பெண்களுக்கென 50மீ, 100மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண் டுதல், மினி கூடை ப்பந்து எறிதல், 100மீ சக்கர நாற்காலி ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் டென்னிஸ்பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டி நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 70 ரூபாயும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு 50 ரூபாயும், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு 30 ரூபாயும் வழங்கப்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்ததுள்ளது.
இந்த பரிசுத்தொகை அறிவிப்பிற்கு கோவையில் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடத்தப்படும் நாளன்று போட்டி நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலை வர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின் படி 1.14 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டு போட்டி வரும் 12ம் தேதி கோவையில் நடக்கிறது என விளையா ட்டு ஆணையம் (கோவை மண் டலம்) தெரிவித்துள் ளது. போட்டியில்முதலிடம் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.70, ரூ.50, ரூ.30 எனும் பரிசுத் தொகை அறிவித்தது மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.
இந்தப் பரிசு வழங்குவதற்கு பதிலாக போட்டியே நடத்தாமல் இருக்கலாம். மேலும் 12ம் தேதி போட்டி நடக்கும் இடத்தில் கேலிபர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும்.

No comments:

Post a Comment