FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, December 9, 2014

12ல் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

09.12.2014, கோவை:
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி போட்டியில் ரூ.70, ரூ.50, ரூ.30 ரொக்கத் தொகை பரிசை கண்டித்து டிச.12ம் தேதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி 2014-15ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட அளவிலான மாற்றுத்திற னாளி விளையாட்டு போட் டிகள் வரும் 12ம் தேதி பெரிநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலாயா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதில் ஆண்கள், பெண்களுக்கென 50மீ, 100மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண் டுதல், மினி கூடை ப்பந்து எறிதல், 100மீ சக்கர நாற்காலி ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் டென்னிஸ்பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டி நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 70 ரூபாயும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு 50 ரூபாயும், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு 30 ரூபாயும் வழங்கப்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்ததுள்ளது.
இந்த பரிசுத்தொகை அறிவிப்பிற்கு கோவையில் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடத்தப்படும் நாளன்று போட்டி நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலை வர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின் படி 1.14 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டு போட்டி வரும் 12ம் தேதி கோவையில் நடக்கிறது என விளையா ட்டு ஆணையம் (கோவை மண் டலம்) தெரிவித்துள் ளது. போட்டியில்முதலிடம் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.70, ரூ.50, ரூ.30 எனும் பரிசுத் தொகை அறிவித்தது மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.
இந்தப் பரிசு வழங்குவதற்கு பதிலாக போட்டியே நடத்தாமல் இருக்கலாம். மேலும் 12ம் தேதி போட்டி நடக்கும் இடத்தில் கேலிபர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும்.

No comments:

Post a Comment