FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, December 9, 2014

12ல் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

09.12.2014, கோவை:
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி போட்டியில் ரூ.70, ரூ.50, ரூ.30 ரொக்கத் தொகை பரிசை கண்டித்து டிச.12ம் தேதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி 2014-15ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட அளவிலான மாற்றுத்திற னாளி விளையாட்டு போட் டிகள் வரும் 12ம் தேதி பெரிநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலாயா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதில் ஆண்கள், பெண்களுக்கென 50மீ, 100மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண் டுதல், மினி கூடை ப்பந்து எறிதல், 100மீ சக்கர நாற்காலி ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் டென்னிஸ்பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டி நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 70 ரூபாயும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு 50 ரூபாயும், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு 30 ரூபாயும் வழங்கப்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்ததுள்ளது.
இந்த பரிசுத்தொகை அறிவிப்பிற்கு கோவையில் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடத்தப்படும் நாளன்று போட்டி நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலை வர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின் படி 1.14 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டு போட்டி வரும் 12ம் தேதி கோவையில் நடக்கிறது என விளையா ட்டு ஆணையம் (கோவை மண் டலம்) தெரிவித்துள் ளது. போட்டியில்முதலிடம் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.70, ரூ.50, ரூ.30 எனும் பரிசுத் தொகை அறிவித்தது மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.
இந்தப் பரிசு வழங்குவதற்கு பதிலாக போட்டியே நடத்தாமல் இருக்கலாம். மேலும் 12ம் தேதி போட்டி நடக்கும் இடத்தில் கேலிபர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும்.

No comments:

Post a Comment