FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, December 9, 2014

மேட்டுப்பாளையத்தில் DEAF மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை: நீதிபதி நேரில் விசாரணை




09.12.2014, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாற்றுத் திறனாளி மாணவி பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிபதி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியில் பயின்று வந்த வாய் பேச இயலாத 17 வயது மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் பள்ளி ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அப்பள்ளி கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட அப்பள்ளியில் இருந்த 30க்கும் அதிகமானோர் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் விடப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் நீதிபதி சுப்பிரமணியம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சைகை மூலம் தெரிவித்த கருத்துக்களை அரசு வாய் மற்றும் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் நீதிபதியிடம் விளக்க, அவர் பதிவு செய்து கொண்டார்.

No comments:

Post a Comment