FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, December 9, 2014

மேட்டுப்பாளையத்தில் DEAF மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை: நீதிபதி நேரில் விசாரணை




09.12.2014, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாற்றுத் திறனாளி மாணவி பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிபதி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியில் பயின்று வந்த வாய் பேச இயலாத 17 வயது மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் பள்ளி ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அப்பள்ளி கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட அப்பள்ளியில் இருந்த 30க்கும் அதிகமானோர் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் விடப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் நீதிபதி சுப்பிரமணியம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சைகை மூலம் தெரிவித்த கருத்துக்களை அரசு வாய் மற்றும் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் நீதிபதியிடம் விளக்க, அவர் பதிவு செய்து கொண்டார்.

No comments:

Post a Comment