FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, December 9, 2014

மேட்டுப்பாளையத்தில் DEAF மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை: நீதிபதி நேரில் விசாரணை




09.12.2014, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாற்றுத் திறனாளி மாணவி பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிபதி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியில் பயின்று வந்த வாய் பேச இயலாத 17 வயது மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் பள்ளி ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அப்பள்ளி கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட அப்பள்ளியில் இருந்த 30க்கும் அதிகமானோர் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் விடப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் நீதிபதி சுப்பிரமணியம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சைகை மூலம் தெரிவித்த கருத்துக்களை அரசு வாய் மற்றும் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் நீதிபதியிடம் விளக்க, அவர் பதிவு செய்து கொண்டார்.

No comments:

Post a Comment