FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, March 5, 2017

தெய்வக் குழந்தைகளுடன் 2 மணி நேரம்! சமுதாய சேவையில் ஐ.டி., ஊழியர்கள்

04.03.2017
அவர்களை தெய்வக்குழந்தைகள் எனலாம். எண்ணற்ற திறமைகள் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர ஊக்குவிப்பாளர்கள் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் முடங்குகியுள்ளனர். உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்ல, அவர்களது உதடுகள் துடிக்காது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், நமது கேள்வியே அவர்களது செவிகளில் விழாது. ஆம், அவர்கள் யாரெனில், வாய்பேச முடியாத, காதுகேளாத மாணவ - மாணவியர்.

இவர்கள் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கக் கூடாது; கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஆர்.எஸ்.புரத்தில் உயர்நிலைப்பள்ளியை நடத்துகிறது, மாநகராட்சி. இங்கு, 32 பேர் படிக்கின்றனர். இவர்களில், நான்கு பேர் மாணவியர். ஐந்து ஆசிரியர்கள், சைகை மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.
இவர்கள், நன்றாக படித்தாலும், வேலை கிடக்காமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தொழிற்கூடமும் நடத்தப்படுகிறது. கோயமுத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள் சாரிடபிள் சொசைட்டி சார்பில், 'பிட்டிங், டிரில்லிங், வெல்டிங், பிளம்மிங்' உள்ளிட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும், 45 நிமிடம் தொழிற்கல்வியை, 25 ஆண்டுகளாக சந்தானம் என்பவர் பயிற்றுவிக்கிறார். அவர் கூறுகையில், ''காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவ, மாணவியருக்கு தொழிற்கல்வி கற்றுத்தருவதோடு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 300 முதல், 500 ரூபாய் தினச்சம்பளம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஓரளவு சமாளித்துக் கொள்வர்,'' என்றார்.

இப்பள்ளி செயல்பாட்டை அறிந்த, ஐ.டி., நிறுவன ஊழியர்களான மீனாட்சி, ப்ரீத்தி ராமசாமி ஆகியோர், அம்மாணவர்களுடன் விவாதித்த போது, மாணவர்கள் சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, ஆரோக்கியமுடன் வாழ விளையாட்டு முக்கியம் என, அவ்விரு ஊழியர்களும் எடுத்துரைத்தனர்.

இருவருமே மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள். தங்களது திறமையை இவர்களுக்கு பயிற்றுவிக்க முடிவு செய்து, தினமும் 2 மணி நேரம் ஒதுக்குகின்றனர். காலை, 8:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை, காதுகேளாத, வாய்பேச முடியாத அம்மாணவர்களுக்கு வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் பயிற்சி அளிக்கின்றனர். தங்களது சொந்த செலவில், சீருடை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அவர்களும் ஆர்வத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.

மீனாட்சி கூறுகையில், ''ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். பணம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இப்பள்ளியை பற்றி கேட்டறிந்ததும், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க அனுமதி கேட்டோம். மாநகராட்சி அனுமதி கிடைத்ததும், எங்களது செலவில் மைதானம் தயார் செய்து, ஏழு மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறோம். இதில், எங்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது,'' என்றார்.இவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால், 97895 51573 என்ற எண்ணுக்கு 'டயல்' செய்யுங்க!

No comments:

Post a Comment