FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, March 5, 2017

தெய்வக் குழந்தைகளுடன் 2 மணி நேரம்! சமுதாய சேவையில் ஐ.டி., ஊழியர்கள்

04.03.2017
அவர்களை தெய்வக்குழந்தைகள் எனலாம். எண்ணற்ற திறமைகள் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர ஊக்குவிப்பாளர்கள் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் முடங்குகியுள்ளனர். உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்ல, அவர்களது உதடுகள் துடிக்காது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், நமது கேள்வியே அவர்களது செவிகளில் விழாது. ஆம், அவர்கள் யாரெனில், வாய்பேச முடியாத, காதுகேளாத மாணவ - மாணவியர்.

இவர்கள் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கக் கூடாது; கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஆர்.எஸ்.புரத்தில் உயர்நிலைப்பள்ளியை நடத்துகிறது, மாநகராட்சி. இங்கு, 32 பேர் படிக்கின்றனர். இவர்களில், நான்கு பேர் மாணவியர். ஐந்து ஆசிரியர்கள், சைகை மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.
இவர்கள், நன்றாக படித்தாலும், வேலை கிடக்காமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தொழிற்கூடமும் நடத்தப்படுகிறது. கோயமுத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள் சாரிடபிள் சொசைட்டி சார்பில், 'பிட்டிங், டிரில்லிங், வெல்டிங், பிளம்மிங்' உள்ளிட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும், 45 நிமிடம் தொழிற்கல்வியை, 25 ஆண்டுகளாக சந்தானம் என்பவர் பயிற்றுவிக்கிறார். அவர் கூறுகையில், ''காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவ, மாணவியருக்கு தொழிற்கல்வி கற்றுத்தருவதோடு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 300 முதல், 500 ரூபாய் தினச்சம்பளம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஓரளவு சமாளித்துக் கொள்வர்,'' என்றார்.

இப்பள்ளி செயல்பாட்டை அறிந்த, ஐ.டி., நிறுவன ஊழியர்களான மீனாட்சி, ப்ரீத்தி ராமசாமி ஆகியோர், அம்மாணவர்களுடன் விவாதித்த போது, மாணவர்கள் சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, ஆரோக்கியமுடன் வாழ விளையாட்டு முக்கியம் என, அவ்விரு ஊழியர்களும் எடுத்துரைத்தனர்.

இருவருமே மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள். தங்களது திறமையை இவர்களுக்கு பயிற்றுவிக்க முடிவு செய்து, தினமும் 2 மணி நேரம் ஒதுக்குகின்றனர். காலை, 8:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை, காதுகேளாத, வாய்பேச முடியாத அம்மாணவர்களுக்கு வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் பயிற்சி அளிக்கின்றனர். தங்களது சொந்த செலவில், சீருடை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அவர்களும் ஆர்வத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.

மீனாட்சி கூறுகையில், ''ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். பணம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இப்பள்ளியை பற்றி கேட்டறிந்ததும், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க அனுமதி கேட்டோம். மாநகராட்சி அனுமதி கிடைத்ததும், எங்களது செலவில் மைதானம் தயார் செய்து, ஏழு மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறோம். இதில், எங்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது,'' என்றார்.இவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால், 97895 51573 என்ற எண்ணுக்கு 'டயல்' செய்யுங்க!

No comments:

Post a Comment