FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, March 5, 2017

தெய்வக் குழந்தைகளுடன் 2 மணி நேரம்! சமுதாய சேவையில் ஐ.டி., ஊழியர்கள்

04.03.2017
அவர்களை தெய்வக்குழந்தைகள் எனலாம். எண்ணற்ற திறமைகள் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர ஊக்குவிப்பாளர்கள் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் முடங்குகியுள்ளனர். உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்ல, அவர்களது உதடுகள் துடிக்காது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், நமது கேள்வியே அவர்களது செவிகளில் விழாது. ஆம், அவர்கள் யாரெனில், வாய்பேச முடியாத, காதுகேளாத மாணவ - மாணவியர்.

இவர்கள் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கக் கூடாது; கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஆர்.எஸ்.புரத்தில் உயர்நிலைப்பள்ளியை நடத்துகிறது, மாநகராட்சி. இங்கு, 32 பேர் படிக்கின்றனர். இவர்களில், நான்கு பேர் மாணவியர். ஐந்து ஆசிரியர்கள், சைகை மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.
இவர்கள், நன்றாக படித்தாலும், வேலை கிடக்காமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தொழிற்கூடமும் நடத்தப்படுகிறது. கோயமுத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள் சாரிடபிள் சொசைட்டி சார்பில், 'பிட்டிங், டிரில்லிங், வெல்டிங், பிளம்மிங்' உள்ளிட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும், 45 நிமிடம் தொழிற்கல்வியை, 25 ஆண்டுகளாக சந்தானம் என்பவர் பயிற்றுவிக்கிறார். அவர் கூறுகையில், ''காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவ, மாணவியருக்கு தொழிற்கல்வி கற்றுத்தருவதோடு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 300 முதல், 500 ரூபாய் தினச்சம்பளம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஓரளவு சமாளித்துக் கொள்வர்,'' என்றார்.

இப்பள்ளி செயல்பாட்டை அறிந்த, ஐ.டி., நிறுவன ஊழியர்களான மீனாட்சி, ப்ரீத்தி ராமசாமி ஆகியோர், அம்மாணவர்களுடன் விவாதித்த போது, மாணவர்கள் சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, ஆரோக்கியமுடன் வாழ விளையாட்டு முக்கியம் என, அவ்விரு ஊழியர்களும் எடுத்துரைத்தனர்.

இருவருமே மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள். தங்களது திறமையை இவர்களுக்கு பயிற்றுவிக்க முடிவு செய்து, தினமும் 2 மணி நேரம் ஒதுக்குகின்றனர். காலை, 8:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை, காதுகேளாத, வாய்பேச முடியாத அம்மாணவர்களுக்கு வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் பயிற்சி அளிக்கின்றனர். தங்களது சொந்த செலவில், சீருடை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அவர்களும் ஆர்வத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.

மீனாட்சி கூறுகையில், ''ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். பணம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இப்பள்ளியை பற்றி கேட்டறிந்ததும், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க அனுமதி கேட்டோம். மாநகராட்சி அனுமதி கிடைத்ததும், எங்களது செலவில் மைதானம் தயார் செய்து, ஏழு மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறோம். இதில், எங்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது,'' என்றார்.இவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால், 97895 51573 என்ற எண்ணுக்கு 'டயல்' செய்யுங்க!

No comments:

Post a Comment