FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, March 25, 2017

அபூர்வ திறமை கொண்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவி - காரணைப்புதுச்சேரியில் அதிசயம்


காரணைப்புதுச்சேரி, மார்ச் 20--காரணைப்புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருந்தும், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குகிறார்.ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குவதாகக் கேள்விப்பட, மாணவியை நேர்காணச் சென்றிருந்தோம். விசாரிக்கையில், சிறந்த ஓவியத் தன்மையை தன்னகத்தே கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை கண்ணால் காண்பதை, தனது பிஞ்சுக் கைவண்ணத்தில், நமது கண் முன் நிறுத்துகிறார்.அவரிடமே, அவர் குறித்த விளக்கங்களை கேட்ட போது, பதில் கூற மறுத்து, அமைதியாகவே இருந்தார். காரணத்தை அவரது ஆசிரியர் யமுனாவிடம் விசாரிக்கையில், அவர் பெயர் ஸ்ரீபவானி எனக் கூறினார். இதைச் சொல்ல, அந்த மாணவிக்கு ஏன் இவ்வளவு தயக்கம்... என எண்ணி முடிப்பதற்குள், ஸ்ரீபவானிக்கு, காது கேட்காததையும், வாய் பேச முடியாததையும் விளக்கினார் அவரது ஆசிரியர் யமுனா.ஆனால், இக்குறைகளால், மாணவியோ, அவரது பெற்றோரோ தளர்ந்து விடவில்லை. மாறாக, அவரது வயதுக் குழந்தைகளுடன் படிக்கும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது மாணவி, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஸ்ரீபவானியின் ஓவியங்களைக் கண்டு வியந்த நாம், காதுகளும், வாயும் செய்ய முடியாத சாதனைகளையும் சேர்த்து, இவரது கைகளே செய்துவிடும் என, வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

குடும்ப நிலை! காரணைப்புதுச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ராமச்சந்திரன், கலைச்செல்வி தம்பதிக்கு, 2008, செப்., 24ல் பிறந்த பெண் குழந்தை, இத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருப்பார் என, அப்போது, யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்குழந்தைக்கு, ஸ்ரீபவானி என பெயர் சூட்டிய பெற்றோர், குழந்தைக்கு, காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையை எண்ணி வருந்தினர். ஏழ்மையான குடும்பச் சூழலில், பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்ல, ஸ்ரீபவானி, காரணைப்புதுச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். ஓவியம் மட்டுமின்றி, படிப்பிலும் சுட்டி. மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் இம்மாணவி. உடன் படிக்கும் மாணவர்களுடன், இயல்பாக விளையாடியும் மகிழ்கிறார் இம்மழலைச் செல்வம்!

எல்லாருக்கும் திறமை உண்டு!ஸ்ரீபவானி, மிக அழகாக ஓவியங்கள் வரைகிறாள். ஒரு முறை கண்ணால் கண்டதை, அப்படியே வரைந்து விடுவாள். அதிக திறமைசாலி. இதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும், அவற்றை வெளிக்கொணர வேண்டும்.- ஆர்.செல்விதலைமை ஆசிரியர்

கடினம் இல்லை; பெருமை!அனைத்து மாணவர்களுடன் ஒன்றாகவே, ஸ்ரீபவானி அமர்கிறாள். அவளுக்கு, தனியாக பாடம் எடுப்பேன். அவளுக்கு புரியும் வகையில், சைகைகளாலும், எழுதிக் காட்டியும் பாடம் நடத்துவேன். இது கடினமான காரியமாக இல்லை. மாறாக, ஒருவித மனநிறைவைத் தருகிறது.- கே.யமுனாஸ்ரீபவானியின் வகுப்பு ஆசிரியர்

No comments:

Post a Comment