FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, March 25, 2017

அபூர்வ திறமை கொண்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவி - காரணைப்புதுச்சேரியில் அதிசயம்


காரணைப்புதுச்சேரி, மார்ச் 20--காரணைப்புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருந்தும், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குகிறார்.ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குவதாகக் கேள்விப்பட, மாணவியை நேர்காணச் சென்றிருந்தோம். விசாரிக்கையில், சிறந்த ஓவியத் தன்மையை தன்னகத்தே கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை கண்ணால் காண்பதை, தனது பிஞ்சுக் கைவண்ணத்தில், நமது கண் முன் நிறுத்துகிறார்.அவரிடமே, அவர் குறித்த விளக்கங்களை கேட்ட போது, பதில் கூற மறுத்து, அமைதியாகவே இருந்தார். காரணத்தை அவரது ஆசிரியர் யமுனாவிடம் விசாரிக்கையில், அவர் பெயர் ஸ்ரீபவானி எனக் கூறினார். இதைச் சொல்ல, அந்த மாணவிக்கு ஏன் இவ்வளவு தயக்கம்... என எண்ணி முடிப்பதற்குள், ஸ்ரீபவானிக்கு, காது கேட்காததையும், வாய் பேச முடியாததையும் விளக்கினார் அவரது ஆசிரியர் யமுனா.ஆனால், இக்குறைகளால், மாணவியோ, அவரது பெற்றோரோ தளர்ந்து விடவில்லை. மாறாக, அவரது வயதுக் குழந்தைகளுடன் படிக்கும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது மாணவி, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஸ்ரீபவானியின் ஓவியங்களைக் கண்டு வியந்த நாம், காதுகளும், வாயும் செய்ய முடியாத சாதனைகளையும் சேர்த்து, இவரது கைகளே செய்துவிடும் என, வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

குடும்ப நிலை! காரணைப்புதுச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ராமச்சந்திரன், கலைச்செல்வி தம்பதிக்கு, 2008, செப்., 24ல் பிறந்த பெண் குழந்தை, இத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருப்பார் என, அப்போது, யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்குழந்தைக்கு, ஸ்ரீபவானி என பெயர் சூட்டிய பெற்றோர், குழந்தைக்கு, காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையை எண்ணி வருந்தினர். ஏழ்மையான குடும்பச் சூழலில், பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்ல, ஸ்ரீபவானி, காரணைப்புதுச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். ஓவியம் மட்டுமின்றி, படிப்பிலும் சுட்டி. மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் இம்மாணவி. உடன் படிக்கும் மாணவர்களுடன், இயல்பாக விளையாடியும் மகிழ்கிறார் இம்மழலைச் செல்வம்!

எல்லாருக்கும் திறமை உண்டு!ஸ்ரீபவானி, மிக அழகாக ஓவியங்கள் வரைகிறாள். ஒரு முறை கண்ணால் கண்டதை, அப்படியே வரைந்து விடுவாள். அதிக திறமைசாலி. இதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும், அவற்றை வெளிக்கொணர வேண்டும்.- ஆர்.செல்விதலைமை ஆசிரியர்

கடினம் இல்லை; பெருமை!அனைத்து மாணவர்களுடன் ஒன்றாகவே, ஸ்ரீபவானி அமர்கிறாள். அவளுக்கு, தனியாக பாடம் எடுப்பேன். அவளுக்கு புரியும் வகையில், சைகைகளாலும், எழுதிக் காட்டியும் பாடம் நடத்துவேன். இது கடினமான காரியமாக இல்லை. மாறாக, ஒருவித மனநிறைவைத் தருகிறது.- கே.யமுனாஸ்ரீபவானியின் வகுப்பு ஆசிரியர்

No comments:

Post a Comment