FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, March 25, 2017

அபூர்வ திறமை கொண்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவி - காரணைப்புதுச்சேரியில் அதிசயம்


காரணைப்புதுச்சேரி, மார்ச் 20--காரணைப்புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருந்தும், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குகிறார்.ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குவதாகக் கேள்விப்பட, மாணவியை நேர்காணச் சென்றிருந்தோம். விசாரிக்கையில், சிறந்த ஓவியத் தன்மையை தன்னகத்தே கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை கண்ணால் காண்பதை, தனது பிஞ்சுக் கைவண்ணத்தில், நமது கண் முன் நிறுத்துகிறார்.அவரிடமே, அவர் குறித்த விளக்கங்களை கேட்ட போது, பதில் கூற மறுத்து, அமைதியாகவே இருந்தார். காரணத்தை அவரது ஆசிரியர் யமுனாவிடம் விசாரிக்கையில், அவர் பெயர் ஸ்ரீபவானி எனக் கூறினார். இதைச் சொல்ல, அந்த மாணவிக்கு ஏன் இவ்வளவு தயக்கம்... என எண்ணி முடிப்பதற்குள், ஸ்ரீபவானிக்கு, காது கேட்காததையும், வாய் பேச முடியாததையும் விளக்கினார் அவரது ஆசிரியர் யமுனா.ஆனால், இக்குறைகளால், மாணவியோ, அவரது பெற்றோரோ தளர்ந்து விடவில்லை. மாறாக, அவரது வயதுக் குழந்தைகளுடன் படிக்கும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது மாணவி, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஸ்ரீபவானியின் ஓவியங்களைக் கண்டு வியந்த நாம், காதுகளும், வாயும் செய்ய முடியாத சாதனைகளையும் சேர்த்து, இவரது கைகளே செய்துவிடும் என, வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

குடும்ப நிலை! காரணைப்புதுச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ராமச்சந்திரன், கலைச்செல்வி தம்பதிக்கு, 2008, செப்., 24ல் பிறந்த பெண் குழந்தை, இத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருப்பார் என, அப்போது, யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்குழந்தைக்கு, ஸ்ரீபவானி என பெயர் சூட்டிய பெற்றோர், குழந்தைக்கு, காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையை எண்ணி வருந்தினர். ஏழ்மையான குடும்பச் சூழலில், பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்ல, ஸ்ரீபவானி, காரணைப்புதுச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். ஓவியம் மட்டுமின்றி, படிப்பிலும் சுட்டி. மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் இம்மாணவி. உடன் படிக்கும் மாணவர்களுடன், இயல்பாக விளையாடியும் மகிழ்கிறார் இம்மழலைச் செல்வம்!

எல்லாருக்கும் திறமை உண்டு!ஸ்ரீபவானி, மிக அழகாக ஓவியங்கள் வரைகிறாள். ஒரு முறை கண்ணால் கண்டதை, அப்படியே வரைந்து விடுவாள். அதிக திறமைசாலி. இதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும், அவற்றை வெளிக்கொணர வேண்டும்.- ஆர்.செல்விதலைமை ஆசிரியர்

கடினம் இல்லை; பெருமை!அனைத்து மாணவர்களுடன் ஒன்றாகவே, ஸ்ரீபவானி அமர்கிறாள். அவளுக்கு, தனியாக பாடம் எடுப்பேன். அவளுக்கு புரியும் வகையில், சைகைகளாலும், எழுதிக் காட்டியும் பாடம் நடத்துவேன். இது கடினமான காரியமாக இல்லை. மாறாக, ஒருவித மனநிறைவைத் தருகிறது.- கே.யமுனாஸ்ரீபவானியின் வகுப்பு ஆசிரியர்

No comments:

Post a Comment