FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, March 2, 2017

எந்த சூழ்நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்: காதுகேளாத மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

01.03.2017
சென்னை : ஆயிரம் விளக்கு சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் கொண்டாடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆயிரம் விளக்கு சிறுமலர் கண் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு நேரில் சென்று, அங்கிருந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது அப்பள்ளியின் மாணவ, மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுமலர் பள்ளிக்கு வரும்போது, ’ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் வந்தால் பலமுறை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்குமே’, என்ற எண்ணத்தோடு நான் பேசியதுண்டு.

இன்று எனக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். அகில இந்திய தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்கள். என்னதான் பல தலைவர்கள், பல அறிஞர்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் வாழ்த்துவதற்கு ஈடாக அவை எதுவும் இருக்க முடியாது.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த சிறுமலர் பள்ளிக்கு வந்து உங்களுடைய வாழ்த்துகளைப் பெறுவதிலே தனி அக்கறை எடுத்துக்கொண்டு, இப்போதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக, உங்களுடைய நாட்டியத்தின் மூலமாக, உங்களின் கவிதைகள் மூலமாக, அதேநேரத்தில் வரவேற்புரை நிகழ்த்தி, அதில் இடம்பெற்று இருக்கக்கூடிய வார்த்தைகளின் மூலமாக எனக்கு நீங்கள் உங்களுடைய வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றீர்கள். அந்த வாழ்த்துக்கு உரியவனாக, என்றைக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவனாக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்.

இன்றைக்கு இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் எம்எல்ஏவாக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். கொளத்தூர் தொகுதியில் நான் இப்போது எம்எல்ஏவாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னதான் கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் இந்த ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பணியாற்றுகிறேனோ இல்லையோ இந்த சிறுமலர் பள்ளியில் இருக்கக்கூடிய உங்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னால் முடிந்த எல்லா வகையிலும் துணை நின்று என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்திலே எடுத்துச்சொல்லி, கள்ளம் கபடம் இல்லாத இந்த அன்பான உள்ளம் கவர்ந்த உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment