FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, March 2, 2017

எந்த சூழ்நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்: காதுகேளாத மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

01.03.2017
சென்னை : ஆயிரம் விளக்கு சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் கொண்டாடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆயிரம் விளக்கு சிறுமலர் கண் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு நேரில் சென்று, அங்கிருந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது அப்பள்ளியின் மாணவ, மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுமலர் பள்ளிக்கு வரும்போது, ’ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் வந்தால் பலமுறை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்குமே’, என்ற எண்ணத்தோடு நான் பேசியதுண்டு.

இன்று எனக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். அகில இந்திய தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்கள். என்னதான் பல தலைவர்கள், பல அறிஞர்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் வாழ்த்துவதற்கு ஈடாக அவை எதுவும் இருக்க முடியாது.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த சிறுமலர் பள்ளிக்கு வந்து உங்களுடைய வாழ்த்துகளைப் பெறுவதிலே தனி அக்கறை எடுத்துக்கொண்டு, இப்போதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக, உங்களுடைய நாட்டியத்தின் மூலமாக, உங்களின் கவிதைகள் மூலமாக, அதேநேரத்தில் வரவேற்புரை நிகழ்த்தி, அதில் இடம்பெற்று இருக்கக்கூடிய வார்த்தைகளின் மூலமாக எனக்கு நீங்கள் உங்களுடைய வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றீர்கள். அந்த வாழ்த்துக்கு உரியவனாக, என்றைக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவனாக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்.

இன்றைக்கு இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் எம்எல்ஏவாக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். கொளத்தூர் தொகுதியில் நான் இப்போது எம்எல்ஏவாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னதான் கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் இந்த ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பணியாற்றுகிறேனோ இல்லையோ இந்த சிறுமலர் பள்ளியில் இருக்கக்கூடிய உங்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னால் முடிந்த எல்லா வகையிலும் துணை நின்று என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்திலே எடுத்துச்சொல்லி, கள்ளம் கபடம் இல்லாத இந்த அன்பான உள்ளம் கவர்ந்த உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment