FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, March 2, 2017

எந்த சூழ்நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்: காதுகேளாத மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

01.03.2017
சென்னை : ஆயிரம் விளக்கு சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் கொண்டாடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆயிரம் விளக்கு சிறுமலர் கண் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு நேரில் சென்று, அங்கிருந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது அப்பள்ளியின் மாணவ, மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுமலர் பள்ளிக்கு வரும்போது, ’ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் வந்தால் பலமுறை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்குமே’, என்ற எண்ணத்தோடு நான் பேசியதுண்டு.

இன்று எனக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். அகில இந்திய தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்கள். என்னதான் பல தலைவர்கள், பல அறிஞர்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் வாழ்த்துவதற்கு ஈடாக அவை எதுவும் இருக்க முடியாது.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த சிறுமலர் பள்ளிக்கு வந்து உங்களுடைய வாழ்த்துகளைப் பெறுவதிலே தனி அக்கறை எடுத்துக்கொண்டு, இப்போதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக, உங்களுடைய நாட்டியத்தின் மூலமாக, உங்களின் கவிதைகள் மூலமாக, அதேநேரத்தில் வரவேற்புரை நிகழ்த்தி, அதில் இடம்பெற்று இருக்கக்கூடிய வார்த்தைகளின் மூலமாக எனக்கு நீங்கள் உங்களுடைய வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றீர்கள். அந்த வாழ்த்துக்கு உரியவனாக, என்றைக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவனாக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்.

இன்றைக்கு இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் எம்எல்ஏவாக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். கொளத்தூர் தொகுதியில் நான் இப்போது எம்எல்ஏவாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னதான் கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் இந்த ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பணியாற்றுகிறேனோ இல்லையோ இந்த சிறுமலர் பள்ளியில் இருக்கக்கூடிய உங்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னால் முடிந்த எல்லா வகையிலும் துணை நின்று என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்திலே எடுத்துச்சொல்லி, கள்ளம் கபடம் இல்லாத இந்த அன்பான உள்ளம் கவர்ந்த உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment