FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, March 2, 2017

எந்த சூழ்நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்: காதுகேளாத மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

01.03.2017
சென்னை : ஆயிரம் விளக்கு சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் கொண்டாடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆயிரம் விளக்கு சிறுமலர் கண் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு நேரில் சென்று, அங்கிருந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது அப்பள்ளியின் மாணவ, மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுமலர் பள்ளிக்கு வரும்போது, ’ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் வந்தால் பலமுறை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்குமே’, என்ற எண்ணத்தோடு நான் பேசியதுண்டு.

இன்று எனக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். அகில இந்திய தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்கள். என்னதான் பல தலைவர்கள், பல அறிஞர்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் வாழ்த்துவதற்கு ஈடாக அவை எதுவும் இருக்க முடியாது.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த சிறுமலர் பள்ளிக்கு வந்து உங்களுடைய வாழ்த்துகளைப் பெறுவதிலே தனி அக்கறை எடுத்துக்கொண்டு, இப்போதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக, உங்களுடைய நாட்டியத்தின் மூலமாக, உங்களின் கவிதைகள் மூலமாக, அதேநேரத்தில் வரவேற்புரை நிகழ்த்தி, அதில் இடம்பெற்று இருக்கக்கூடிய வார்த்தைகளின் மூலமாக எனக்கு நீங்கள் உங்களுடைய வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றீர்கள். அந்த வாழ்த்துக்கு உரியவனாக, என்றைக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவனாக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்.

இன்றைக்கு இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் எம்எல்ஏவாக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். கொளத்தூர் தொகுதியில் நான் இப்போது எம்எல்ஏவாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னதான் கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் இந்த ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பணியாற்றுகிறேனோ இல்லையோ இந்த சிறுமலர் பள்ளியில் இருக்கக்கூடிய உங்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னால் முடிந்த எல்லா வகையிலும் துணை நின்று என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்திலே எடுத்துச்சொல்லி, கள்ளம் கபடம் இல்லாத இந்த அன்பான உள்ளம் கவர்ந்த உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment