FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, March 14, 2017

தரவரிசை பட்டியல் வெளியிடாமல் நேர்முகத்தேர்வு? மின்வாரிய நியமனத்தில் முறைகேடு நடப்பதாக புகார்

14.03.2017
சேலம்: தரவரிசை பட்டியல் வெளியிடாமல், நேர்முகத்தேர்வு நடத்தினால், மின்வாரிய பணி நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொது செயலர் நம்புராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்: தமிழக மின்வாரியத்தில், 300 எலக்ட்ரிக்கல்; 50 சிவில்; 25 மெக்கானிக்கல் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, 2016 ஜன., 31ல் நடந்தது. நேர்முகத்தேர்வு, 2017 மார்ச், 13ல் துவங்கி, 18 வரை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, பணி நியமனத்தில், குறைந்தபட்சம், 11 இடங்களுக்கு பதிலாக, பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குழு வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலில், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்ஆப் மதிப்பெண் குறிப்பிடாமல் காலியாக விடப்பட்டுள்ளது. குறிப்பாக, நேர்முகத்தேர்வு நடப்பது குறித்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவின் பெயர் வாரியான மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. எனவே, எழுத்துத்தேர்வு விடைதொகுப்பை வெளியிட வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடாமல், நேர்முகத்தேர்வு நடத்துவது, முறைகேடுக்கு வழிவகுக்கும். அதற்கு வாய்ப்பளிக்காமல், பாரபட்சமின்றி மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். நேர்முகத்தேர்வில், தகுதியான தேர்வர் இல்லாதபட்சம், மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி, மாற்றுத்திறனாளிகளை கொண்டு, அந்த இடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment