FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, March 14, 2017

தரவரிசை பட்டியல் வெளியிடாமல் நேர்முகத்தேர்வு? மின்வாரிய நியமனத்தில் முறைகேடு நடப்பதாக புகார்

14.03.2017
சேலம்: தரவரிசை பட்டியல் வெளியிடாமல், நேர்முகத்தேர்வு நடத்தினால், மின்வாரிய பணி நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொது செயலர் நம்புராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்: தமிழக மின்வாரியத்தில், 300 எலக்ட்ரிக்கல்; 50 சிவில்; 25 மெக்கானிக்கல் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, 2016 ஜன., 31ல் நடந்தது. நேர்முகத்தேர்வு, 2017 மார்ச், 13ல் துவங்கி, 18 வரை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, பணி நியமனத்தில், குறைந்தபட்சம், 11 இடங்களுக்கு பதிலாக, பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குழு வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலில், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்ஆப் மதிப்பெண் குறிப்பிடாமல் காலியாக விடப்பட்டுள்ளது. குறிப்பாக, நேர்முகத்தேர்வு நடப்பது குறித்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவின் பெயர் வாரியான மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. எனவே, எழுத்துத்தேர்வு விடைதொகுப்பை வெளியிட வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடாமல், நேர்முகத்தேர்வு நடத்துவது, முறைகேடுக்கு வழிவகுக்கும். அதற்கு வாய்ப்பளிக்காமல், பாரபட்சமின்றி மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். நேர்முகத்தேர்வில், தகுதியான தேர்வர் இல்லாதபட்சம், மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி, மாற்றுத்திறனாளிகளை கொண்டு, அந்த இடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment