FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, March 4, 2017

நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்!

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். சமீபத்தில், சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அரசியல் தலைவர்கள் சிலரை, மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் ராதாரவியின் செயலைக் கண்டித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் டிசம்பர் 3 அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

No comments:

Post a Comment