FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, March 4, 2017

நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்!

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். சமீபத்தில், சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அரசியல் தலைவர்கள் சிலரை, மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் ராதாரவியின் செயலைக் கண்டித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் டிசம்பர் 3 அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

No comments:

Post a Comment