FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, March 30, 2017

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்

சென்னை:
தேசிய அளவிலான, காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டி, சென்னையில், நாளை நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து, 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.துருக்கி சாம்சன்னில், சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டிகள், ஜூலை 18 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான, தேசிய அளவிலான போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், மார்ச் 28ல் துவங்குகிறது.நான்கு நாட்கள் நடக்க உள்ள, இப்போட்டிகளில், 22 மாநிலங்களை சேர்ந்த, 1,200 தடகள வீரர், வீராகங்கனைகள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, தமிழக காது கேளாதோர் விளையாட்டு சங்கம் தரப்பில் கூறியதாவது:துருக்கியில் நடக்க உள்ள, சர்வதேச காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும், தேசியஅளவிலான போட்டி, சென்னையில் நடக்க உள்ளது. கடந்த, 1974ம் ஆண்டிற்கு பின், சென்னையில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு, நெல்லையில், பிப்ரவரியில் நடந்தது. இதில், 120 தடகள வீரர்களும், 24 வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு சங்கம் தரப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment