FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, March 30, 2017

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்

சென்னை:
தேசிய அளவிலான, காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டி, சென்னையில், நாளை நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து, 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.துருக்கி சாம்சன்னில், சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டிகள், ஜூலை 18 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான, தேசிய அளவிலான போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், மார்ச் 28ல் துவங்குகிறது.நான்கு நாட்கள் நடக்க உள்ள, இப்போட்டிகளில், 22 மாநிலங்களை சேர்ந்த, 1,200 தடகள வீரர், வீராகங்கனைகள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, தமிழக காது கேளாதோர் விளையாட்டு சங்கம் தரப்பில் கூறியதாவது:துருக்கியில் நடக்க உள்ள, சர்வதேச காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும், தேசியஅளவிலான போட்டி, சென்னையில் நடக்க உள்ளது. கடந்த, 1974ம் ஆண்டிற்கு பின், சென்னையில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு, நெல்லையில், பிப்ரவரியில் நடந்தது. இதில், 120 தடகள வீரர்களும், 24 வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு சங்கம் தரப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment