FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, March 30, 2017

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்

சென்னை:
தேசிய அளவிலான, காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டி, சென்னையில், நாளை நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து, 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.துருக்கி சாம்சன்னில், சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டிகள், ஜூலை 18 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான, தேசிய அளவிலான போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், மார்ச் 28ல் துவங்குகிறது.நான்கு நாட்கள் நடக்க உள்ள, இப்போட்டிகளில், 22 மாநிலங்களை சேர்ந்த, 1,200 தடகள வீரர், வீராகங்கனைகள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, தமிழக காது கேளாதோர் விளையாட்டு சங்கம் தரப்பில் கூறியதாவது:துருக்கியில் நடக்க உள்ள, சர்வதேச காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும், தேசியஅளவிலான போட்டி, சென்னையில் நடக்க உள்ளது. கடந்த, 1974ம் ஆண்டிற்கு பின், சென்னையில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு, நெல்லையில், பிப்ரவரியில் நடந்தது. இதில், 120 தடகள வீரர்களும், 24 வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு சங்கம் தரப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment