FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, March 3, 2017

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் அசத்திய காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள்!


01.03.2017
சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் நடனக் கூத்தனான சிதம்பரம் தில்லை நடராஜர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்வதுதான் அந்தக் கலைக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. அவர்களின் பாக்கியமும்கூட. அதன்படி ஒவ்வொரு வருடமும் நடனக் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு வந்து, புதிதாக நடனக் கலையைக் கற்றுக்கொள்பவர்களும், நடனக் கலைஞர்களும் பல்வேறு நடனங்கள் மூலம் அக்கலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். பிரபல நடனக் கலைஞர்கள், சினிமா நடிகைகளான பத்மா, சொர்ணமால்யா, பானுப்பிரியா எனப் பலர் இங்கு நடனமாடியிருந்தாலும், முதன் முறையாக மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் நடனமாடியதுதான் இந்த வருட நாட்டியாஞ்சலியில் சிறப்பு.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 36-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, தெற்கு ரத வீதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நான்காவது நாளான நேற்று, ஜி.வி.காது கேளாதோர் மற்றும் மணவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் வியந்துபோனார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த நடனத்தை வெப்சைட் மற்றும் இண்டர்நெட்டில் கண்டுரசித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உத்தண்டி பாபு என்பவர், 5000 ரூபாயை அந்தக் குழுவுக்குப் பரிசாக அளித்தார்.

இது குறித்து அந்தக் குழுவின் பயிற்சியாளர் ப்ரியா கூறுகையில், "இதுமாதிரியான நாட்டியாஞ்சலி விழாவில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. பரதம் என்பது உடலும், உள்ளமும் ஒன்றிணையும் ஒரு தூய்மையான கலை. அதைக் கற்றுக்கொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். சலங்கைப் பூஜைகளெல்லாம் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கு அப்படி எங்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்டோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதான். இதை, நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கடினமான பயிற்சியின் மூலம் சிவனின் தசாவதார நடனத்தை ஆடினோம். இதன்மூலம், பரதம் அனைவருக்கும் சொந்தம் என்பதை நிரூபித்திருக்கிறோம். அடுத்த வருடம் இன்னும் அதிகமான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்" என்றார் பெருமிதத்தோடு.



No comments:

Post a Comment