FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, March 3, 2017

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் அசத்திய காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள்!


01.03.2017
சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் நடனக் கூத்தனான சிதம்பரம் தில்லை நடராஜர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்வதுதான் அந்தக் கலைக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. அவர்களின் பாக்கியமும்கூட. அதன்படி ஒவ்வொரு வருடமும் நடனக் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு வந்து, புதிதாக நடனக் கலையைக் கற்றுக்கொள்பவர்களும், நடனக் கலைஞர்களும் பல்வேறு நடனங்கள் மூலம் அக்கலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். பிரபல நடனக் கலைஞர்கள், சினிமா நடிகைகளான பத்மா, சொர்ணமால்யா, பானுப்பிரியா எனப் பலர் இங்கு நடனமாடியிருந்தாலும், முதன் முறையாக மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் நடனமாடியதுதான் இந்த வருட நாட்டியாஞ்சலியில் சிறப்பு.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 36-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, தெற்கு ரத வீதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நான்காவது நாளான நேற்று, ஜி.வி.காது கேளாதோர் மற்றும் மணவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் வியந்துபோனார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த நடனத்தை வெப்சைட் மற்றும் இண்டர்நெட்டில் கண்டுரசித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உத்தண்டி பாபு என்பவர், 5000 ரூபாயை அந்தக் குழுவுக்குப் பரிசாக அளித்தார்.

இது குறித்து அந்தக் குழுவின் பயிற்சியாளர் ப்ரியா கூறுகையில், "இதுமாதிரியான நாட்டியாஞ்சலி விழாவில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. பரதம் என்பது உடலும், உள்ளமும் ஒன்றிணையும் ஒரு தூய்மையான கலை. அதைக் கற்றுக்கொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். சலங்கைப் பூஜைகளெல்லாம் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கு அப்படி எங்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்டோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதான். இதை, நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கடினமான பயிற்சியின் மூலம் சிவனின் தசாவதார நடனத்தை ஆடினோம். இதன்மூலம், பரதம் அனைவருக்கும் சொந்தம் என்பதை நிரூபித்திருக்கிறோம். அடுத்த வருடம் இன்னும் அதிகமான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்" என்றார் பெருமிதத்தோடு.



No comments:

Post a Comment