FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, March 3, 2017

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் அசத்திய காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள்!


01.03.2017
சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் நடனக் கூத்தனான சிதம்பரம் தில்லை நடராஜர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்வதுதான் அந்தக் கலைக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. அவர்களின் பாக்கியமும்கூட. அதன்படி ஒவ்வொரு வருடமும் நடனக் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு வந்து, புதிதாக நடனக் கலையைக் கற்றுக்கொள்பவர்களும், நடனக் கலைஞர்களும் பல்வேறு நடனங்கள் மூலம் அக்கலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். பிரபல நடனக் கலைஞர்கள், சினிமா நடிகைகளான பத்மா, சொர்ணமால்யா, பானுப்பிரியா எனப் பலர் இங்கு நடனமாடியிருந்தாலும், முதன் முறையாக மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் நடனமாடியதுதான் இந்த வருட நாட்டியாஞ்சலியில் சிறப்பு.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 36-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, தெற்கு ரத வீதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நான்காவது நாளான நேற்று, ஜி.வி.காது கேளாதோர் மற்றும் மணவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் வியந்துபோனார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த நடனத்தை வெப்சைட் மற்றும் இண்டர்நெட்டில் கண்டுரசித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உத்தண்டி பாபு என்பவர், 5000 ரூபாயை அந்தக் குழுவுக்குப் பரிசாக அளித்தார்.

இது குறித்து அந்தக் குழுவின் பயிற்சியாளர் ப்ரியா கூறுகையில், "இதுமாதிரியான நாட்டியாஞ்சலி விழாவில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. பரதம் என்பது உடலும், உள்ளமும் ஒன்றிணையும் ஒரு தூய்மையான கலை. அதைக் கற்றுக்கொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். சலங்கைப் பூஜைகளெல்லாம் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கு அப்படி எங்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்டோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதான். இதை, நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கடினமான பயிற்சியின் மூலம் சிவனின் தசாவதார நடனத்தை ஆடினோம். இதன்மூலம், பரதம் அனைவருக்கும் சொந்தம் என்பதை நிரூபித்திருக்கிறோம். அடுத்த வருடம் இன்னும் அதிகமான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்" என்றார் பெருமிதத்தோடு.



No comments:

Post a Comment