FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, March 3, 2017

சிறப்பு மையத்தில் ஆசிரியர்கள் இல்லை: மாற்றுத்திறனாளி மாணவர்கள் புகார்

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி பள்ளியில் செயல்பட்டு வரும் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில், ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி கற்பது பாதிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சிறப்பு மையங்கள் அமைத்து, அதில் சிறப்பாசிரியர்கள் மூலம், மன வளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், சேலம், மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்பு மையத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரத்திலுள்ள, 40 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த சிறப்பு மையத்தில் படித்து வந்தனர். நான்கு சிறப்பாசிரியர்கள் இவர்களுக்காக நியமிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அது இரண்டாக குறைந்து, தற்போது ஒரு ஆசிரியர் கூட வருவதில்லை. கேட்டால், பயிற்சி, மாற்றுப்பணி என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். இதனால், படிப்பில் நன்கு தேறிவந்த குழந்தைகள் கூட, தற்போது கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இம்மையத்தில் உடனடியாக போதுமான ஆசிரியர்களை நியமித்து, மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment