FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, March 3, 2017

சிறப்பு மையத்தில் ஆசிரியர்கள் இல்லை: மாற்றுத்திறனாளி மாணவர்கள் புகார்

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி பள்ளியில் செயல்பட்டு வரும் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில், ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி கற்பது பாதிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சிறப்பு மையங்கள் அமைத்து, அதில் சிறப்பாசிரியர்கள் மூலம், மன வளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், சேலம், மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்பு மையத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரத்திலுள்ள, 40 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த சிறப்பு மையத்தில் படித்து வந்தனர். நான்கு சிறப்பாசிரியர்கள் இவர்களுக்காக நியமிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அது இரண்டாக குறைந்து, தற்போது ஒரு ஆசிரியர் கூட வருவதில்லை. கேட்டால், பயிற்சி, மாற்றுப்பணி என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். இதனால், படிப்பில் நன்கு தேறிவந்த குழந்தைகள் கூட, தற்போது கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இம்மையத்தில் உடனடியாக போதுமான ஆசிரியர்களை நியமித்து, மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment