FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, March 3, 2017

சிறப்பு மையத்தில் ஆசிரியர்கள் இல்லை: மாற்றுத்திறனாளி மாணவர்கள் புகார்

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி பள்ளியில் செயல்பட்டு வரும் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில், ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி கற்பது பாதிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சிறப்பு மையங்கள் அமைத்து, அதில் சிறப்பாசிரியர்கள் மூலம், மன வளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், சேலம், மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்பு மையத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரத்திலுள்ள, 40 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த சிறப்பு மையத்தில் படித்து வந்தனர். நான்கு சிறப்பாசிரியர்கள் இவர்களுக்காக நியமிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அது இரண்டாக குறைந்து, தற்போது ஒரு ஆசிரியர் கூட வருவதில்லை. கேட்டால், பயிற்சி, மாற்றுப்பணி என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். இதனால், படிப்பில் நன்கு தேறிவந்த குழந்தைகள் கூட, தற்போது கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இம்மையத்தில் உடனடியாக போதுமான ஆசிரியர்களை நியமித்து, மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment