FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, March 3, 2017

சிறப்பு மையத்தில் ஆசிரியர்கள் இல்லை: மாற்றுத்திறனாளி மாணவர்கள் புகார்

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி பள்ளியில் செயல்பட்டு வரும் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில், ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி கற்பது பாதிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சிறப்பு மையங்கள் அமைத்து, அதில் சிறப்பாசிரியர்கள் மூலம், மன வளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், சேலம், மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்பு மையத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரத்திலுள்ள, 40 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த சிறப்பு மையத்தில் படித்து வந்தனர். நான்கு சிறப்பாசிரியர்கள் இவர்களுக்காக நியமிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அது இரண்டாக குறைந்து, தற்போது ஒரு ஆசிரியர் கூட வருவதில்லை. கேட்டால், பயிற்சி, மாற்றுப்பணி என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். இதனால், படிப்பில் நன்கு தேறிவந்த குழந்தைகள் கூட, தற்போது கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இம்மையத்தில் உடனடியாக போதுமான ஆசிரியர்களை நியமித்து, மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment