FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, March 31, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு தடை ஓட்டத்தில் தமிழக வீரருக்கு தங்கம்

31.03.2017 சென்னை: சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டியில், தமிழக வீரர் கார்த்திக், தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில், தங்கப் பதக்கம் வென்றார்.தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான, 21வது விளையாட்டு போட்டி, சென்னையில் நடந்து வருகின்றன.

பெரியமேட்டில் நேற்று நடந்த, ஆண்கள் உயரம் தாண்டுதலில், தமிழகத்தை சேர்ந்த, கார்த்திக், 1.09 மீ., உயரம் தாண்டி, தங்கப் பதக்கத்தை பெற்றார். ஒடிசா வீரர், குர்சிம்ரன், இரண்டாம் இடத்தையும், கேரள வீரர், ராஜிவ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ஆண்கள், 110 மீ., தடை ஓட்டத்தில், தமிழக வீரர், கார்த்திக், பந்தய துாரத்தை, 18.2 வினாடிகளில் கடந்து, தங்க பதக்கத்தை வென்றார். இரண்டாம் இடத்தை, கேரள வீரர், டின்டு, 19.3 வினாடிகளிலும், மூன்றாம் இடத்தை, ஒடிசா வீரர், தீபக் பிரதன், 21.3 வினாடிகளிலும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதல் ஆண்கள் பிரிவில், ரமேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். பெண்கள் உயரம் தாண்டுதலில், தமிழக வீராங்கனை, தேவி பிரியா; பெண்கள் குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை ரத்தினம், இரண்டாம் இடத்தை வென்றனர்.பெண்கள், 100 மீ., ஓட்டப் பந்தயத்தில், நிஷா, 400 மீ., ஆண்கள் பிரிவில், மணிகண்டன், 1,500 மீ., ஓட்டப் பந்தயத்தில் சுதிர்ஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வாலி பால் ஆண்கள் பிரிவில், காலிறுதி போட்டியில், தெலுங்கானா அணி, 2 - 1 என்ற செட் கணக்கில், தமிழக அணியை தோற்கடித்தது.

No comments:

Post a Comment