FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, March 31, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு தடை ஓட்டத்தில் தமிழக வீரருக்கு தங்கம்

31.03.2017 சென்னை: சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டியில், தமிழக வீரர் கார்த்திக், தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில், தங்கப் பதக்கம் வென்றார்.தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான, 21வது விளையாட்டு போட்டி, சென்னையில் நடந்து வருகின்றன.

பெரியமேட்டில் நேற்று நடந்த, ஆண்கள் உயரம் தாண்டுதலில், தமிழகத்தை சேர்ந்த, கார்த்திக், 1.09 மீ., உயரம் தாண்டி, தங்கப் பதக்கத்தை பெற்றார். ஒடிசா வீரர், குர்சிம்ரன், இரண்டாம் இடத்தையும், கேரள வீரர், ராஜிவ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ஆண்கள், 110 மீ., தடை ஓட்டத்தில், தமிழக வீரர், கார்த்திக், பந்தய துாரத்தை, 18.2 வினாடிகளில் கடந்து, தங்க பதக்கத்தை வென்றார். இரண்டாம் இடத்தை, கேரள வீரர், டின்டு, 19.3 வினாடிகளிலும், மூன்றாம் இடத்தை, ஒடிசா வீரர், தீபக் பிரதன், 21.3 வினாடிகளிலும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதல் ஆண்கள் பிரிவில், ரமேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். பெண்கள் உயரம் தாண்டுதலில், தமிழக வீராங்கனை, தேவி பிரியா; பெண்கள் குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை ரத்தினம், இரண்டாம் இடத்தை வென்றனர்.பெண்கள், 100 மீ., ஓட்டப் பந்தயத்தில், நிஷா, 400 மீ., ஆண்கள் பிரிவில், மணிகண்டன், 1,500 மீ., ஓட்டப் பந்தயத்தில் சுதிர்ஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வாலி பால் ஆண்கள் பிரிவில், காலிறுதி போட்டியில், தெலுங்கானா அணி, 2 - 1 என்ற செட் கணக்கில், தமிழக அணியை தோற்கடித்தது.

No comments:

Post a Comment