FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, March 31, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு தடை ஓட்டத்தில் தமிழக வீரருக்கு தங்கம்

31.03.2017 சென்னை: சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டியில், தமிழக வீரர் கார்த்திக், தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில், தங்கப் பதக்கம் வென்றார்.தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான, 21வது விளையாட்டு போட்டி, சென்னையில் நடந்து வருகின்றன.

பெரியமேட்டில் நேற்று நடந்த, ஆண்கள் உயரம் தாண்டுதலில், தமிழகத்தை சேர்ந்த, கார்த்திக், 1.09 மீ., உயரம் தாண்டி, தங்கப் பதக்கத்தை பெற்றார். ஒடிசா வீரர், குர்சிம்ரன், இரண்டாம் இடத்தையும், கேரள வீரர், ராஜிவ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ஆண்கள், 110 மீ., தடை ஓட்டத்தில், தமிழக வீரர், கார்த்திக், பந்தய துாரத்தை, 18.2 வினாடிகளில் கடந்து, தங்க பதக்கத்தை வென்றார். இரண்டாம் இடத்தை, கேரள வீரர், டின்டு, 19.3 வினாடிகளிலும், மூன்றாம் இடத்தை, ஒடிசா வீரர், தீபக் பிரதன், 21.3 வினாடிகளிலும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதல் ஆண்கள் பிரிவில், ரமேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். பெண்கள் உயரம் தாண்டுதலில், தமிழக வீராங்கனை, தேவி பிரியா; பெண்கள் குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை ரத்தினம், இரண்டாம் இடத்தை வென்றனர்.பெண்கள், 100 மீ., ஓட்டப் பந்தயத்தில், நிஷா, 400 மீ., ஆண்கள் பிரிவில், மணிகண்டன், 1,500 மீ., ஓட்டப் பந்தயத்தில் சுதிர்ஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வாலி பால் ஆண்கள் பிரிவில், காலிறுதி போட்டியில், தெலுங்கானா அணி, 2 - 1 என்ற செட் கணக்கில், தமிழக அணியை தோற்கடித்தது.

No comments:

Post a Comment