FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, April 7, 2019

காது கேளாத, பேச முடியாதவரிடம் கொள்ளை; ஆடவருக்கு 3 ஆண்டு சிறை, 12 பிரம்படிகள்

06.09.2019
காது கேளாத, வாய் பேச முடியாத 53 வயது பெண்ணிடம் கொள்ளை அடித்த 29 வயது டான் மின் பின்னுக்கு மூன்றாண்டு சிறை, 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணிடமிருந்து திருடிய பொருட்களில் சிங்கப்பூர் காதுகேளாதோர் சங்கத்தின் உறுப் பினர் அட்டையைப் பார்த்த பிறகும் கூட அவரிடமிருந்து திருடிய பொருட்களை அவரிடம் டான் ஒப்படைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இரவு 8.50 மணியளவில் பேருந்து நிறுத்தத்தி லிருந்து வீட்டுக்குச் சென்றுகொண் டிருந்த திருவாட்டி சான் மெய் லெய்யைப் பின் தொடர்ந்த டான், சீமெய் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 133ன் மின்தூக்கியிலும் அவரைத் தொடர்ந்தார்.
ஒன்பதாவது மாடியில் மின் தூக்கிக் கதவு திறந்தபோது வெளியேறுவதுபோல நடித்து மீண்டும் மின்தூக்கிக்குள் நுழைந்த டான், திருவாட்டி சானிட மிருந்து கைப்பையைப் பிடுங்க முயற்சி செய்தார்.
ஆனால், திருவாட்டி சான் தன்னுடைய பையைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தார்.
அப்போது திருவாட்டி டானை மின்தூக்கியின் சுவற்றில் தள்ளி விட்டு அவரது பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு எட்டாவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி டான் தப்பிச் சென்றார்.
கத்தி யாரிடமும் உதவி கோர முடியாததால், உறவினரின் உதவியை நாட வீட்டுக்கு விரைந் தார் திருவாட்டி சான்.
திருவாட்டி சானின் பணப் பையில் இருந்த யுஓபி வங்கி அட்டை, பணம் நிரப்பப்பட்ட அட் டைகள் 2, ஒரு பேஷன் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவரது பணப்பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிய டானை, மின் தூக்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி யின் உதவியுடன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் போலிசார் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருவாட்டி சானுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்காக சாங்கி பொது மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதற்கான மருத்துவச் செல வாக $800 வழங்கும்படி டானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பணத்தைச் செலுத்த இயலாவிட்டால் அவர் மேலும் ஒரு நாள் சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.


No comments:

Post a Comment