FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, April 7, 2019

காது கேளாத, பேச முடியாதவரிடம் கொள்ளை; ஆடவருக்கு 3 ஆண்டு சிறை, 12 பிரம்படிகள்

06.09.2019
காது கேளாத, வாய் பேச முடியாத 53 வயது பெண்ணிடம் கொள்ளை அடித்த 29 வயது டான் மின் பின்னுக்கு மூன்றாண்டு சிறை, 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணிடமிருந்து திருடிய பொருட்களில் சிங்கப்பூர் காதுகேளாதோர் சங்கத்தின் உறுப் பினர் அட்டையைப் பார்த்த பிறகும் கூட அவரிடமிருந்து திருடிய பொருட்களை அவரிடம் டான் ஒப்படைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இரவு 8.50 மணியளவில் பேருந்து நிறுத்தத்தி லிருந்து வீட்டுக்குச் சென்றுகொண் டிருந்த திருவாட்டி சான் மெய் லெய்யைப் பின் தொடர்ந்த டான், சீமெய் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 133ன் மின்தூக்கியிலும் அவரைத் தொடர்ந்தார்.
ஒன்பதாவது மாடியில் மின் தூக்கிக் கதவு திறந்தபோது வெளியேறுவதுபோல நடித்து மீண்டும் மின்தூக்கிக்குள் நுழைந்த டான், திருவாட்டி சானிட மிருந்து கைப்பையைப் பிடுங்க முயற்சி செய்தார்.
ஆனால், திருவாட்டி சான் தன்னுடைய பையைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தார்.
அப்போது திருவாட்டி டானை மின்தூக்கியின் சுவற்றில் தள்ளி விட்டு அவரது பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு எட்டாவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி டான் தப்பிச் சென்றார்.
கத்தி யாரிடமும் உதவி கோர முடியாததால், உறவினரின் உதவியை நாட வீட்டுக்கு விரைந் தார் திருவாட்டி சான்.
திருவாட்டி சானின் பணப் பையில் இருந்த யுஓபி வங்கி அட்டை, பணம் நிரப்பப்பட்ட அட் டைகள் 2, ஒரு பேஷன் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவரது பணப்பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிய டானை, மின் தூக்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி யின் உதவியுடன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் போலிசார் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருவாட்டி சானுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்காக சாங்கி பொது மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதற்கான மருத்துவச் செல வாக $800 வழங்கும்படி டானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பணத்தைச் செலுத்த இயலாவிட்டால் அவர் மேலும் ஒரு நாள் சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.


No comments:

Post a Comment