FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, April 7, 2019

காது கேளாத, பேச முடியாதவரிடம் கொள்ளை; ஆடவருக்கு 3 ஆண்டு சிறை, 12 பிரம்படிகள்

06.09.2019
காது கேளாத, வாய் பேச முடியாத 53 வயது பெண்ணிடம் கொள்ளை அடித்த 29 வயது டான் மின் பின்னுக்கு மூன்றாண்டு சிறை, 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணிடமிருந்து திருடிய பொருட்களில் சிங்கப்பூர் காதுகேளாதோர் சங்கத்தின் உறுப் பினர் அட்டையைப் பார்த்த பிறகும் கூட அவரிடமிருந்து திருடிய பொருட்களை அவரிடம் டான் ஒப்படைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இரவு 8.50 மணியளவில் பேருந்து நிறுத்தத்தி லிருந்து வீட்டுக்குச் சென்றுகொண் டிருந்த திருவாட்டி சான் மெய் லெய்யைப் பின் தொடர்ந்த டான், சீமெய் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 133ன் மின்தூக்கியிலும் அவரைத் தொடர்ந்தார்.
ஒன்பதாவது மாடியில் மின் தூக்கிக் கதவு திறந்தபோது வெளியேறுவதுபோல நடித்து மீண்டும் மின்தூக்கிக்குள் நுழைந்த டான், திருவாட்டி சானிட மிருந்து கைப்பையைப் பிடுங்க முயற்சி செய்தார்.
ஆனால், திருவாட்டி சான் தன்னுடைய பையைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தார்.
அப்போது திருவாட்டி டானை மின்தூக்கியின் சுவற்றில் தள்ளி விட்டு அவரது பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு எட்டாவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி டான் தப்பிச் சென்றார்.
கத்தி யாரிடமும் உதவி கோர முடியாததால், உறவினரின் உதவியை நாட வீட்டுக்கு விரைந் தார் திருவாட்டி சான்.
திருவாட்டி சானின் பணப் பையில் இருந்த யுஓபி வங்கி அட்டை, பணம் நிரப்பப்பட்ட அட் டைகள் 2, ஒரு பேஷன் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவரது பணப்பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிய டானை, மின் தூக்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி யின் உதவியுடன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் போலிசார் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருவாட்டி சானுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்காக சாங்கி பொது மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதற்கான மருத்துவச் செல வாக $800 வழங்கும்படி டானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பணத்தைச் செலுத்த இயலாவிட்டால் அவர் மேலும் ஒரு நாள் சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.


No comments:

Post a Comment