FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, April 7, 2019

காது கேளாத, பேச முடியாதவரிடம் கொள்ளை; ஆடவருக்கு 3 ஆண்டு சிறை, 12 பிரம்படிகள்

06.09.2019
காது கேளாத, வாய் பேச முடியாத 53 வயது பெண்ணிடம் கொள்ளை அடித்த 29 வயது டான் மின் பின்னுக்கு மூன்றாண்டு சிறை, 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணிடமிருந்து திருடிய பொருட்களில் சிங்கப்பூர் காதுகேளாதோர் சங்கத்தின் உறுப் பினர் அட்டையைப் பார்த்த பிறகும் கூட அவரிடமிருந்து திருடிய பொருட்களை அவரிடம் டான் ஒப்படைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இரவு 8.50 மணியளவில் பேருந்து நிறுத்தத்தி லிருந்து வீட்டுக்குச் சென்றுகொண் டிருந்த திருவாட்டி சான் மெய் லெய்யைப் பின் தொடர்ந்த டான், சீமெய் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 133ன் மின்தூக்கியிலும் அவரைத் தொடர்ந்தார்.
ஒன்பதாவது மாடியில் மின் தூக்கிக் கதவு திறந்தபோது வெளியேறுவதுபோல நடித்து மீண்டும் மின்தூக்கிக்குள் நுழைந்த டான், திருவாட்டி சானிட மிருந்து கைப்பையைப் பிடுங்க முயற்சி செய்தார்.
ஆனால், திருவாட்டி சான் தன்னுடைய பையைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தார்.
அப்போது திருவாட்டி டானை மின்தூக்கியின் சுவற்றில் தள்ளி விட்டு அவரது பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு எட்டாவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி டான் தப்பிச் சென்றார்.
கத்தி யாரிடமும் உதவி கோர முடியாததால், உறவினரின் உதவியை நாட வீட்டுக்கு விரைந் தார் திருவாட்டி சான்.
திருவாட்டி சானின் பணப் பையில் இருந்த யுஓபி வங்கி அட்டை, பணம் நிரப்பப்பட்ட அட் டைகள் 2, ஒரு பேஷன் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவரது பணப்பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிய டானை, மின் தூக்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி யின் உதவியுடன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் போலிசார் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருவாட்டி சானுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்காக சாங்கி பொது மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதற்கான மருத்துவச் செல வாக $800 வழங்கும்படி டானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பணத்தைச் செலுத்த இயலாவிட்டால் அவர் மேலும் ஒரு நாள் சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.


No comments:

Post a Comment