FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 20, 2019

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகிவிட்டது... ப்ளஸ் 3 ரிசல்ட் எப்போது தெரியுமா?


ப்ளஸ் டூ தேர்வு முடிவு தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், ப்ளஸ் 3 தேர்வு முடிவுக்காக சில மாணவர்கள் காத்திருக்கின்றனர். ப்ளஸ் டூ தெரியும் அதென்ன ப்ளஸ் 3 என்கிறீர்களா?

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் பாடங்களையும் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு பிளஸ் டூ தேர்வுவரை ஒரு மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்கள் இரண்டு மொழிப்பாடத்துடன் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வெழுதுவார்கள். ஆனால் செவித்திறனற்ற மாணவர்கள், ஒரு மொழிப்பாடத்துடன் 500 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வெழுதுவார்கள். அப்படி தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது.

அதனால் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற செவித்திறனற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தை மட்டும் ஓராண்டுக்குப் படித்து தனித்தேர்வர்களாக தேர்வெழுதுவார்கள். ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, ஓராண்டு ஆங்கிலப் பாடத்தை மட்டும் படித்துத் தேர்வெழுதுவதால் அதை `ப்ளஸ் 3' படிப்பு என்று அழைக்கின்றனர்.

செவித்திறனற்ற மாணவர்களுக்கு ஒரு மொழிப்பாடத்துக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோன்று ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள், மீண்டும் தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென்று தனி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் செயல்படும் சிறுமலர் செவித்திறனற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா ரோஸலின்ட் கூறும்போது, ``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவித்திறனற்ற மாணவிகளுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்ததும் ப்ளஸ் 3 தேர்வுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இந்த மாணவிகளுக்கு ஆங்கில மொழியில் `A' வில் இருந்து கற்றுக்கொடுத்து, பத்தாம் வகுப்பு பாடத்தை தேர்வெழுத வைக்கிறோம். ஆங்கிலம் தெரியாததால், பல வாய்ப்புகளைச் செவித்திறனற்ற மாணவிகள் இழக்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். இந்த ஆண்டும் 19 செவித்திறனற்ற மாணவிகள் ப்ளஸ் 3 தேர்வை எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

No comments:

Post a Comment