FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, April 20, 2019

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகிவிட்டது... ப்ளஸ் 3 ரிசல்ட் எப்போது தெரியுமா?


ப்ளஸ் டூ தேர்வு முடிவு தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், ப்ளஸ் 3 தேர்வு முடிவுக்காக சில மாணவர்கள் காத்திருக்கின்றனர். ப்ளஸ் டூ தெரியும் அதென்ன ப்ளஸ் 3 என்கிறீர்களா?

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் பாடங்களையும் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு பிளஸ் டூ தேர்வுவரை ஒரு மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்கள் இரண்டு மொழிப்பாடத்துடன் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வெழுதுவார்கள். ஆனால் செவித்திறனற்ற மாணவர்கள், ஒரு மொழிப்பாடத்துடன் 500 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வெழுதுவார்கள். அப்படி தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது.

அதனால் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற செவித்திறனற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தை மட்டும் ஓராண்டுக்குப் படித்து தனித்தேர்வர்களாக தேர்வெழுதுவார்கள். ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, ஓராண்டு ஆங்கிலப் பாடத்தை மட்டும் படித்துத் தேர்வெழுதுவதால் அதை `ப்ளஸ் 3' படிப்பு என்று அழைக்கின்றனர்.

செவித்திறனற்ற மாணவர்களுக்கு ஒரு மொழிப்பாடத்துக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோன்று ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள், மீண்டும் தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென்று தனி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் செயல்படும் சிறுமலர் செவித்திறனற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா ரோஸலின்ட் கூறும்போது, ``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவித்திறனற்ற மாணவிகளுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்ததும் ப்ளஸ் 3 தேர்வுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இந்த மாணவிகளுக்கு ஆங்கில மொழியில் `A' வில் இருந்து கற்றுக்கொடுத்து, பத்தாம் வகுப்பு பாடத்தை தேர்வெழுத வைக்கிறோம். ஆங்கிலம் தெரியாததால், பல வாய்ப்புகளைச் செவித்திறனற்ற மாணவிகள் இழக்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். இந்த ஆண்டும் 19 செவித்திறனற்ற மாணவிகள் ப்ளஸ் 3 தேர்வை எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

No comments:

Post a Comment