FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, April 20, 2019

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகிவிட்டது... ப்ளஸ் 3 ரிசல்ட் எப்போது தெரியுமா?


ப்ளஸ் டூ தேர்வு முடிவு தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், ப்ளஸ் 3 தேர்வு முடிவுக்காக சில மாணவர்கள் காத்திருக்கின்றனர். ப்ளஸ் டூ தெரியும் அதென்ன ப்ளஸ் 3 என்கிறீர்களா?

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் பாடங்களையும் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு பிளஸ் டூ தேர்வுவரை ஒரு மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்கள் இரண்டு மொழிப்பாடத்துடன் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வெழுதுவார்கள். ஆனால் செவித்திறனற்ற மாணவர்கள், ஒரு மொழிப்பாடத்துடன் 500 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வெழுதுவார்கள். அப்படி தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது.

அதனால் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற செவித்திறனற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தை மட்டும் ஓராண்டுக்குப் படித்து தனித்தேர்வர்களாக தேர்வெழுதுவார்கள். ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, ஓராண்டு ஆங்கிலப் பாடத்தை மட்டும் படித்துத் தேர்வெழுதுவதால் அதை `ப்ளஸ் 3' படிப்பு என்று அழைக்கின்றனர்.

செவித்திறனற்ற மாணவர்களுக்கு ஒரு மொழிப்பாடத்துக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோன்று ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள், மீண்டும் தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென்று தனி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் செயல்படும் சிறுமலர் செவித்திறனற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா ரோஸலின்ட் கூறும்போது, ``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவித்திறனற்ற மாணவிகளுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்ததும் ப்ளஸ் 3 தேர்வுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இந்த மாணவிகளுக்கு ஆங்கில மொழியில் `A' வில் இருந்து கற்றுக்கொடுத்து, பத்தாம் வகுப்பு பாடத்தை தேர்வெழுத வைக்கிறோம். ஆங்கிலம் தெரியாததால், பல வாய்ப்புகளைச் செவித்திறனற்ற மாணவிகள் இழக்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். இந்த ஆண்டும் 19 செவித்திறனற்ற மாணவிகள் ப்ளஸ் 3 தேர்வை எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

No comments:

Post a Comment