FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 20, 2019

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகிவிட்டது... ப்ளஸ் 3 ரிசல்ட் எப்போது தெரியுமா?


ப்ளஸ் டூ தேர்வு முடிவு தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், ப்ளஸ் 3 தேர்வு முடிவுக்காக சில மாணவர்கள் காத்திருக்கின்றனர். ப்ளஸ் டூ தெரியும் அதென்ன ப்ளஸ் 3 என்கிறீர்களா?

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் பாடங்களையும் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு பிளஸ் டூ தேர்வுவரை ஒரு மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்கள் இரண்டு மொழிப்பாடத்துடன் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வெழுதுவார்கள். ஆனால் செவித்திறனற்ற மாணவர்கள், ஒரு மொழிப்பாடத்துடன் 500 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வெழுதுவார்கள். அப்படி தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது.

அதனால் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற செவித்திறனற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தை மட்டும் ஓராண்டுக்குப் படித்து தனித்தேர்வர்களாக தேர்வெழுதுவார்கள். ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, ஓராண்டு ஆங்கிலப் பாடத்தை மட்டும் படித்துத் தேர்வெழுதுவதால் அதை `ப்ளஸ் 3' படிப்பு என்று அழைக்கின்றனர்.

செவித்திறனற்ற மாணவர்களுக்கு ஒரு மொழிப்பாடத்துக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோன்று ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள், மீண்டும் தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென்று தனி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் செயல்படும் சிறுமலர் செவித்திறனற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா ரோஸலின்ட் கூறும்போது, ``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவித்திறனற்ற மாணவிகளுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்ததும் ப்ளஸ் 3 தேர்வுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இந்த மாணவிகளுக்கு ஆங்கில மொழியில் `A' வில் இருந்து கற்றுக்கொடுத்து, பத்தாம் வகுப்பு பாடத்தை தேர்வெழுத வைக்கிறோம். ஆங்கிலம் தெரியாததால், பல வாய்ப்புகளைச் செவித்திறனற்ற மாணவிகள் இழக்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். இந்த ஆண்டும் 19 செவித்திறனற்ற மாணவிகள் ப்ளஸ் 3 தேர்வை எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

No comments:

Post a Comment