FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, April 8, 2019

மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது? அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

06.04.2019
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாளர்வது குறித்த சிறப்பு பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 4,122 ஓட்டுச்சாவடிகளில், 20,788 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, 279 மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 இடங்களில், நேற்றும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் எப்படி நடந்துகொள்வது; அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை எப்படி புரிந்து கொள்வது குறித்து, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்டம் மழுவதும், 21 ஆயிரத்து, 193 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,743 வாக்காளர்கள் பார்வையற்றோர்; 3,956 வாக்காளர்கள் காதுகேளாதோர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடியில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது குறித்த பயற்சி, நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள, 16 மையங்களில், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கென, சிறப்பு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகள் கூறுவதை, செய்கை மூலம் புரிந்து கொள்ள சில யோசனைகளை அவர்கள் கற்று தந்தனர்.காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, கலெக்டர், பொன்னையா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment