FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, April 8, 2019

மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது? அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

06.04.2019
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாளர்வது குறித்த சிறப்பு பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 4,122 ஓட்டுச்சாவடிகளில், 20,788 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, 279 மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 இடங்களில், நேற்றும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் எப்படி நடந்துகொள்வது; அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை எப்படி புரிந்து கொள்வது குறித்து, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்டம் மழுவதும், 21 ஆயிரத்து, 193 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,743 வாக்காளர்கள் பார்வையற்றோர்; 3,956 வாக்காளர்கள் காதுகேளாதோர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடியில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது குறித்த பயற்சி, நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள, 16 மையங்களில், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கென, சிறப்பு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகள் கூறுவதை, செய்கை மூலம் புரிந்து கொள்ள சில யோசனைகளை அவர்கள் கற்று தந்தனர்.காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, கலெக்டர், பொன்னையா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment