FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, April 8, 2019

மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது? அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

06.04.2019
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாளர்வது குறித்த சிறப்பு பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 4,122 ஓட்டுச்சாவடிகளில், 20,788 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, 279 மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 இடங்களில், நேற்றும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் எப்படி நடந்துகொள்வது; அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை எப்படி புரிந்து கொள்வது குறித்து, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்டம் மழுவதும், 21 ஆயிரத்து, 193 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,743 வாக்காளர்கள் பார்வையற்றோர்; 3,956 வாக்காளர்கள் காதுகேளாதோர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடியில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது குறித்த பயற்சி, நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள, 16 மையங்களில், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கென, சிறப்பு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகள் கூறுவதை, செய்கை மூலம் புரிந்து கொள்ள சில யோசனைகளை அவர்கள் கற்று தந்தனர்.காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, கலெக்டர், பொன்னையா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment