FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, April 8, 2019

மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது? அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

06.04.2019
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாளர்வது குறித்த சிறப்பு பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 4,122 ஓட்டுச்சாவடிகளில், 20,788 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, 279 மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 இடங்களில், நேற்றும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் எப்படி நடந்துகொள்வது; அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை எப்படி புரிந்து கொள்வது குறித்து, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்டம் மழுவதும், 21 ஆயிரத்து, 193 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,743 வாக்காளர்கள் பார்வையற்றோர்; 3,956 வாக்காளர்கள் காதுகேளாதோர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடியில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது குறித்த பயற்சி, நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள, 16 மையங்களில், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கென, சிறப்பு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகள் கூறுவதை, செய்கை மூலம் புரிந்து கொள்ள சில யோசனைகளை அவர்கள் கற்று தந்தனர்.காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, கலெக்டர், பொன்னையா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment